சமூகச் சாளரம்

"பூச்சிய உடல் அளவு பண்பாடு"

1 day 20 hours ago
"பூச்சிய உடல் அளவு பண்பாடு"
 
 
இன்று உலக அழகி போட்டி [beauty queen competition], உடை அலங்கார காட்சி [fashion show] மற்றும் நடிகைகளின் தேர்வில், உலகளாவிய ரீதியில் 'உடல் அளவு' முதலிடம் வகுப்பதை காணுகிறோம். அது மட்டும் அல்ல, வரலாற்றில் ரோமில் [Ancient Rome] இருந்து பண்டைய தமிழ் நாடுவரை அது ஆதிக்கம் செலுத்தியும் உள்ளது.
 
உடல் அளவைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது, ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதையும் மற்றும் பொதுவாக, பெண்ணின் உடலமைப்பைக் காட்டிலும், ஆணின் உடல் அமைப்பு பெரிதாக இருப்பதையும் காண முடியும். அது மட்டும் அல்ல, உதாரணமாக, பெண்ணுக்கு 36", 24", 36" [bust vs waist vs hip / மார்பளவு vs இடை vs இடுப்பு] போன்ற ஒரு நாழிகை அளக்கும் கருவி வடிவில் [hourglass shape] இருப்பதையே சிறந்ததாகவும், அதேபோல, ஆணுக்கு ஆங்கில எழுத்தான 'வி' (V) வடிவம் சிறந்ததாகவும் கருதப் படுகிறது. இதில் பூச்சிய உடல் அளவு என்பது 30 22 32 அங்குலத்துக்கும் 36 28 36 அங்குலத்துக்கும் இடையில் எங்கேயாவது இருக்கலாம்.
 
உதாரணமாக "புடைகொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் இடை கண்டிலம்; அல்லதுஎல்லா உருவும் தெரிந்தாம்" [பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும்; அல்குலையும், இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை; அது தவிரப் பிற உறுப்பெல்லாம் தெரிகின்றது] - என்ற கம்பராமாயணம் பாடலும் மற்றும் "மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்" [உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை பார்] - என்ற சிலப்பதிகாரம் பாடலும் இதை சாட்சி பகிர்கின்றன. அது மட்டும் அல்ல, திருக்குறளும் தனது குறள் 1115 இல், "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை" என்று கூறுகிறது. அதாவது, அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலரின் காம்பினைக் கிள்ளியெறியாமல் சூடினாள்; அதனால் வருந்தும் அவளுடைய நுண்ணிய இடை முறிந்து அவள் விழுந்து இறந்து விடுவாள். எனவே மங்கலமாக பறைகள் இனி ஒலியா என்கிறது. பெண்ணின் இடையை அத்தனை மெலிதாக வள்ளுவர் காட்டுவதை காண்கிறோம். அதே போல , இன்றைய காலத்திலும், கவிஞர் வாலி 1963 இல் எழுதிய ஒரு பாடல் ஒன்று " ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே ஹோய்" என்று பாடுகிறது.
 
தமிழ் இலக்கிய நுால்களில், இடையை கவர்ச்சியான உறுப்பாக வர்ணித்துள்ளதுடன், அதை மெல்லிடை [மெல்லிடை வருந்துமென மேகலை இரங்க (கந்த புராணம்)], கொடியிடையெனவும் [கொடியிடையாள்’ என்று சங்க காலத்தில் இருந்து `குறுக்கு சிறுத்தவளே’ என சமகால திரைப்பட பாடல்கள் வரை] கவிகளில் பாடுகிறது. மேலும் பண்டைய தமிழரும் பெண்ணின் அழகை சிறிய இடை, பெரிய மார்பளவு மற்றும் பெரிய புட்டப் பாகம் / இடுப்பு (small waist and large bust and hips) கொண்டு அளந்தனர், இதை அன்றைய அல்லது பண்டைய பெண் அல்லது இறைவி உருவ சிலைகளில் இருந்து அறியலாம். அன்று "உண்பது நாழி; உடுப்பவை இரண்டே"; என உடை இரண்டு துண்டுகளையே [கீழாடை, மேலாடை] கொண்டிருந்தது. அது படிப்படியாக ஆண்களுக்கு வேட்டி, சால்வையாகவும், பெண்களுக்கு சேலையாகவும் பரிணமித்தன. இது ஒரு பெண்ணின் இடையை கச்சிதமாக, நேர்த்தியாக, பார்ப்பவர் கண்களுக்கு அம்பலப் படுத்துவதுடன் (it exposes the waist of a woman), இடை மற்றும் மார்பை, புடவை மடிப்பால் மேலும் வலியுறுத்தி (emphasizes the waist and bust with the pleated fabric), ஒரு பெண்ணின் அழகை துல்லியமாக காட்டக் கூடியதாக இருந்தது, 'இடை'யின் செல்வாக்கை எடுத்து காட்டுகிறது.
 
அதேபோல ரோமானிய குடியரசில் வட ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரபல நாடக ஆசிரியர் பப்லியஸ் டெரென்ஷியஸ் அஃபர் அல்லது டெரன்ஸ் [Publius Terentius Afer or Terence (c. 190–159 BC)], தனது புகழ்மிக்க ஒரு நாடகத்தில், She is a girl who doesn’t look like the girls of our day whose mothers strive to make them have sloping shoulders, a squeezed chest so that they look slim. If one is a little plumper, they say she is a boxer and they reduce her diet. Though she is well endowed by nature, this treatment makes her as thin as a bulrush. And men love them for that! என்கிறார். அதாவது தாய், தன் மகளுக்கு சாய்வான தோள்களையும் அழுத்தமான மார்பையும் கொண்டு மெலிதாக காட்சி அளிக்க முயற்சிசெய்வதுடன், மகள் கொஞ்சம் குண்டாக இருந்தால், அவர்கள் அவளுடைய உணவைக் குறைக்கிறார்கள் என்று கூறுகிறார். மேலும் தாய்மார்களின் சிகிச்சையானது அவளை ஒரு நீரில் வாழும் நாணல் போல மெல்லியதாக ஆக்குகிறது. அந்த மெல்லிய தோற்றத்தில் ஆண்கள் அவர்களை நேசிக்கிறார்கள் என்று சாட்சி பகிர்கிறார்.
 
மேலும் மெலிந்த உடல் நிறை அல்லது சதைப்பற்றற்ற உடல்திரள் [lean body mass] பல நன்மைகளை வழங்குகிறது. உதாரணமாக, இது நீரிழிவு நோய் [Diabetes] மற்றும் இன்சுலின் எதிர்ப்பு [Insulin Resistance] போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பு கொடுப்பதுடன், நோயிலிருந்து மீளவும் [Illness or Disease], மற்றும் எலும்புகள் வலிமையானவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் [Bones Strong and Healthy] வைத்திருக்க உதவுகிறது.
 
இனி நாம் கோவலன் தன் காதலி மாதவியை பார்த்து பாடும் சிலப்பதிகார பாடலை கொஞ்சம் விரிவாக பார்ப்போமாயின்,
 
"கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.
கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.
ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்."
 
இதன் பொருள்:
 
"உன் தமையன்மார் கடலில் அங்குள்ள உயிரினங்களைக் கொன்று தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்!
 
நீ என் கண் வழியே புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று வாழ்கின்றாய் .
 
உன்னுடைய வெவ்விய முலைகலின் சுமை பொறாது உன்னிடையானது இப்பொழுதே மெலிகின்றது. நீ இயங்கின் அது முறியும். இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே
 
உன் தந்தையோ வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்;
 
நீ அவனினும் காட்டில் உன்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றாய்
 
நீ இனி இயங்காதே இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற கொடிய முலையால் உன் இடை வளைந்து முறியும் அவ்விடையை நீ இழந்துவிடாதே
 
உன்தமையன்மார் கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்வார்
 
நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையாய் பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும் உன் புருவத்தால் கொல்வாய்
 
இப்பொழுதே உனது பெரிய முலைகளைச் சுமத்தலாலே உன்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது . அதனையும் இழந்துவிடாதே"
 
என்று எவ்வளவு கற்பனை நயத்துடன் பாடியிருக்கிறார் பாருங்கள். அது மட்டும் அல்ல, பல முறை மீண்டும் மீண்டும் , மாதவியின் இடையின் மெல்லிய தன்மையை வலியுறுத்துவதையும் காண்கிறோம். மேலும் இடை முறிந்து [ஒடிந்து] விடும் என்பதில் இருந்து எவ்வளவு சிறிய மெல்லிய இடை என்பதை அறியலாம். பருமன் பூச்சியத்தை அடைந்தத பின் தானே முறியலாம் ?
 
இவைகளில் இருந்து பண்டைய தமிழர், மற்றும் ரோமர் போன்றோர்கள் மெல்லிய இடையை பெண்ணுக்கு விரும்பியதை காண்கிறோம். மேலும் இவ்வாறான அழகு பற்றிய கருத்து [perception of beauty], அப்படியே தொடர்வதை, கி பி 900 ஆண்டு சோழ நாட்டு வெண்கல சிலைகளிலும் [Bronze idols of the Cholas], மற்றும் இன்றைய பூச்சிய உடல் அளவு பண்பாட்டிலும் காணக்கூடியதாக உள்ளது. எனவே இது ஒரு புதிய கருத்து அல்ல. பண்டைய அழகு பற்றிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட புது விளக்கம் ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
224939030_10219648897235754_135253743803906041_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=gPR5sYyPIFIAb6iiKcy&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBA9ynihDkskAtH7gRkE2NlLgBVCh8Yxr0aTyn2uwN7cg&oe=66221467 227386457_10219648898315781_6798247404948532664_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6QwPG_LM_iMAb7_Z9vd&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfADGs1_vfOctlwRul1LwW-PRU7tpmaSgJomND9gCrDGLg&oe=66220CA1
 
 
 

அறிவாற்றல் முரண்பாடு: தவறு எனத் தெரிந்தே பின்பற்றும் பழக்கங்களை கைவிடும் வழிகள்

2 days 3 hours ago
அறிவாற்றல் முரண்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும் என புகைப்பிடிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். சில நேரங்களில் அவர்களேகூட புகைபிடித்துக் கொண்டே, “இது உடலுக்கு மிகவும் கேடு. சீக்கிரம் நிறுத்த வேண்டும்” என்பார்கள், ஆனாலும் புகைப் பிடிக்கும் பழக்கத்தைத் தொடர்வார்கள் அல்லது அதை நியாயப்படுத்த சில காரணங்களை வைத்திருப்பார்கள்.

“புகைப்பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் இறக்கிறார்கள் (உலக சுகாதார அமைப்பின் அறிக்கை), எனவே இதை விடுங்கள்” என அவர்களிடம் கூறினால், “அட, சாலை விபத்தில் எவ்வளவு பேர் இறக்கிறார்கள், அதற்காக சாலையில் பயணம் செய்யாமலா இருக்க முடியும்?” எனக் கேட்பார்கள்.

மேலும் ஆதாரங்களை நாம் அடுக்கினால், அவர்களும் அதற்கு ஏற்றாற்போல புதிய நியாயங்களை, காரணங்களைக் கூறுவார்கள். பணம் சேமிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு ஆடம்பர பொருட்களை வாங்குவது, ஆரோக்கியமாக இருக்க ஆசை ஆனாலும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற மறுப்பது என இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

இத்தகைய செயல்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல்தான் என்ன? இதனால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

 
அறிவாற்றல் முரண்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அறிவாற்றல் முரண்பாடு கோட்பாடு 1950களில் உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கரால் முன்மொழியப்பட்டது.
அறிவாற்றல் முரண்பாடு (Cognitive dissonance)

முன்னர் சொன்னது போல் ஆரோக்கியமாக, கட்டுக்கோப்பான உடலுடன் இருக்க வேண்டுமென யாருக்குத்தான் ஆசை இருக்காது. தோற்றம் சார்ந்த அழகு என்பதைத் தாண்டி அவ்வாறு இருப்பதால் உடல்நிலையும் மனநிலையும் மேம்படும் எனப் பெரும்பாலானோருக்கு தெரியும்.

ஆனால் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்றால் அதை உடனே தொடங்காமல் ஏதேனும் ஒரு காரணம் சொல்வார்கள். உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலனைவிட எந்தக் காரணத்திற்காக அதைத் தவிர்க்கிறோமோ அதுதான் முக்கியம் என நினைப்பார்கள்.

இன்னொரு உதாரணம், ஒரு நபர், நன்றாகப் படித்திருப்பார், முற்போக்கான கருத்துகளைப் பேசுவார். ஆனால் தேர்தலில் அவரது கருத்துகள், கொள்கைகளுடன் முரண்படும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பார். அவரது கொள்கைகளைவிட, அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதற்கான காரணம் அவருக்கு முக்கியமானதாகத் தோன்றியதால் இதைச் செய்திருப்பார்.

இந்த மனநிலைக்குப் பெயர்தான் அறிவாற்றல் முரண்பாடு. ஒரு நபரின் நம்பிக்கைகள், அணுகுமுறைகள் அல்லது கொள்கைகளோடு அவர்களின் செயல்கள் முரண்படும்போது எழும் அசௌகரியம் அல்லது பதற்றத்தை இது குறிக்கிறது.

அறிவாற்றல் முரண்பாடு கோட்பாடு 1950களில் உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கரால் முன்மொழியப்பட்டது. காலத்திற்கு ஏற்றாற்போல தனிநபர்கள் தங்கள் நம்பிக்கைகள், அணுகுமுறைகள் அல்லது நடத்தைகளை மாற்றுவதன் மூலம் இந்த முரண்பாட்டைக் குறைப்பதற்கான உந்துதலை அவர்களால் பெற முடியும் என அவரது ஆய்வு கூறுகிறது.

இதுவொரு சாதாரண பிரச்னை போலத் தெரியலாம். ஆனால் தனி மனிதர்கள் மட்டுமல்லாது, ஒரு குழுவாகக்கூட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 
அறிவாற்றல் முரண்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 1954இல் அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த ‘தி சீக்கர்ஸ்’ (The Seekers) என்ற வழிபாட்டுக் குழுவின் தலைவர் டோரதி மார்ட்டின் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார்.

இதுதான் அவரது அறிவிப்பு

"கிளாரியன் எனும் கிரகத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் என்னைத் தொடர்பு கொண்டனர். இந்த ஆண்டின் (1954) டிசம்பர் 25 அன்று இந்த உலகம் அழியும்.

ஆனால், நம் குழு மட்டும் வேற்றுகிரகவாசிகளால் பேரழிவில் இருந்து காப்பாற்றப்படும், பூமி அழிவதற்கு சற்று முன்பு ஒரு விண்கலத்தில் வந்து அவர்கள் நம்மை அழைத்துச் செல்வார்கள். தயாராக இருங்கள்.”

அவரது மிகவும் விசுவாசமான ஆதரவாளர்கள் சிலர், தங்கள் தலைவரின் தீர்க்கதரிசனத்தின் மீதான முழு நம்பிக்கை காரணமாக, தங்கள் சொத்துகளை விற்று, தங்கள் குடும்பங்களை விட்டு வெளியேறி, வேற்றுகிரகவாசிகளின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

அவர்களது குழுவில் சில ஒற்றர்களும் இருந்தனர். உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கர் மற்றும் அவரது சகாக்களான ஹென்றி ரிக்கென், ஸ்டான்லி ஷாக்டர் ஆகியோர் இந்தக் குழுவின் நடவடிக்கைகளை அறிந்துகொள்ள ஆதரவாளர்கள் போல உள்ளே நுழைந்திருந்தனர்.

டிசம்பர் 25 அன்று உலகம் அழியவில்லை என்றால் இந்தக் குழு தங்கள் தவறை உணர்ந்து கொள்ளும் என அவர்கள் நினைத்தார்கள். அதேபோல டிசம்பர் 25 வந்தது, அன்று உலகம் அழியவில்லை. ஆனால் இந்தக் குழு தங்கள் தலைவரைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக அவரை மேலும் கொண்டாடினார்கள்.

எப்படி என்றால், இங்குதான் அறிவாற்றல் முரண்பாடு வேலை செய்தது.

திடீரென்று குழு தலைவர் மார்ட்டின் ஒரு செய்தியை வெளியிட்டார், “வேற்றுகிரகவாசிகள் உலகை அழிக்க வேண்டாமென முடிவு செய்துவிட்டார்கள், காரணம் நமது குழு மேற்கொண்ட பிரார்த்தனைகள் தான். அதனால்தான் ஒன்றும் நடக்கவில்லை,” என்று அந்தச் செய்தியில் கூறினார்.

குழு நபர்களும் வெளியே சென்று இதை பொது மக்களிடம் கூறி, “பார்த்தீர்களா எங்கள் மகிமையை, நாங்கள் செய்த பிரார்த்தனையால் உலகம் அழிவிலிருந்து தப்பித்தது” என்று பரப்புரை செய்தார்கள்.

உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கர் இதன்மூலம் புரிந்துகொண்டது என்னவென்றால், உலகம் அழியவில்லை என்பது குழுவின் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

இருந்தும் தங்களது தலைவரின் தீர்க்கதரிசனத்தை நம்பியது சரிதான் எனத் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அல்லது தங்களது செயல்கள் குறித்து மகிழ்ந்துகொள்ள அவர்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. தங்கள் பிரார்த்தனையால்தான் உலகம் அழியவில்லை என்ற காரணத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

தனது இத்தகைய ஆய்வுகள் மூலம்தான் அறிவாற்றல் முரண்பாடு கோட்பாட்டை முன்மொழிந்தார் உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கர்.

 
அறிவாற்றல் முரண்பாடு ஏற்படுத்தும் பாதிப்புகள்
அறிவாற்றல் முரண்பாடு
படக்குறிப்பு,மனநல மருத்துவர் கிருபாகரன்.

“கடந்த 2020இல் உலகம் முழுவதும் கொரோனா பரவியபோது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சொன்னபோது பலரும் அணியவில்லை. ஒரு உயிர்கொல்லி நோய் பரவுகிறது என்பதை கண்கூடாகப் பார்த்தும்கூட சிலர் முகக்கவசம் அணியாமல் சுற்றினார்களே, அதுவே அறிவாற்றல் முரண்பாட்டின் விளைவுதான்,” என்கிறார் மனநல மருத்துவர் கிருபாகரன்.

தொடர்ந்து பேசிய அவர், “நமக்கு ஒரு எண்ணம் வருகிறது, அது நமக்கு நல்லதல்ல, தவறு எனத் தெரிந்தும் அதைச் செய்வது என்பது மனிதர்களில் பலருக்கும் உள்ள பழக்கம். சிந்தனை மற்றும் செயல்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாடு உளவியல் பதற்றத்தை உருவாக்குகிறது.

இந்தப் பதற்றத்தைக் குறைக்க சிலர் தங்களது தவறுகளை நியாயப்படுத்துவார்கள் அல்லது தங்களது சிந்தனையை மாற்றிக் கொள்வார்கள். எனவே ஒருவர் தனது பகுத்தறிவு சிந்தனைகளை அடையாளம் கண்டு, இதைச் செய்தால் தவறு, அதற்கான விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து அதைச் சரிசெய்ய வேண்டும்.

தொடர்ந்து நமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கக்கூடாது. அவ்வாறு செய்து கொண்டே இருந்தால் அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்," என எச்சரிக்கிறார் மருத்துவர் கிருபாகரன்.

“நம்முடைய எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. அதற்கு எப்படி எதிர்வினை புரிகிறோம் என்பதைப் பொறுத்துதான் எல்லாம். எனவே உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைக் கவனியுங்கள், அதில் எதைச் செயலாக மாற்ற வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் எனபதை யோசித்தால் அதுவே இந்தப் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு,” என்று கூறுகிறார் மனநல மருத்துவர் கிருபாகரன்.

 
குற்றவுணர்வுக்கு வழிவகுக்கும் அறிவாற்றல் முரண்பாடு
அறிவாற்றல் முரண்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

குற்றவுணர்வு என்பது அறிவாற்றல் முரண்பாடு ஏற்படுத்தக்கூடிய முக்கியச் சிக்கல்களில் ஒன்று எனக் கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

“சமீபத்தில் ஒரு கணவன்- மனைவி என்னிடம் ஆலோசனை பெற வந்தார்கள். கணவர் நன்றாகப் படித்தவர், நல்ல பணியில் இருப்பவர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இதையெல்லாம் தாண்டி, கணவருக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தாம் செய்வது தவறு எனத் தெரிந்து மனைவியிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்டுள்ளார். தவறு எனத் தெரிந்தும் ஏன் செய்தீர்கள் எனக் கேட்டால், அவரிடம் பதில் இல்லை.

என்னால் இந்த குற்றவுணர்வைத் தாங்க முடியவில்லை என அழுகிறார். இதுபோன்ற பல வழக்குகள் உள்ளன. தவறு எனத் தெரிந்தால், அந்த சிந்தனையைச் செயலாக மாற்றக்கூடாது. பின்னர் குற்றவுணர்வில் தவிப்பதால் நாம் இழந்தவை மீண்டும் வராது அல்லவா!” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clw02841xyvo

"முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?"

2 days 21 hours ago
"முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?"
 
 
நேரடியாக சந்திக்காத ஒருவருடன் உண்மையில் காதல் கொள்ள முடியாது. கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல . இருவரும் தனி அறையில், தனி இடத்தில், தனிமையில், ஒரு சில நேரமாவது சந்தித்து, நேரடியாக கதைத்து உணர்வுகளை கருத்துக்களை பரிமாறும் வரை , இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது சரியாக தெரியாது.
எந்த நேரமும் நீ தடை செய்யப்பட்டு, இன்னொருவர் அந்த இடத்துக்கு மாற்றப் படலாம் ? யார் அறிவார் பராபரமே !!. நீங்க என்ன நடந்தது என்று வருந்தி கேட்டால், ம்ம் இது முகநூல் தானே, மாற்றி விட்டேன் என்பார். இனி எனக்கு செய்தி, அழைப்பு எடுக்க வேண்டாம் என்பார். அந்த காதல் அரோகரா தான் !!
 
சிலர் எனது வாதத்தை மறுக்கலாம். அவர்களிடம் நான் கேட்பது: ஒருவரை ஒருவர் என்றுமே தொடாமல் எப்படி இருவரிடமும் காதல் நிலை கொள்ளும் அல்லது தொடரும்?? நான் இங்கு பாலியலைப் பற்றி கூற வில்லை, ஆனால், மற்றவரின் உடலை தொட்டு உணரும் உணர்வை கூறுகிறேன்.
 
"கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை ,
நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை,
பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவ தில்லை,"
 
சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற
 
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’
பாடல் இப்படித் தொடங்கு கிறது:
 
"எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்
கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்"[514]
 
நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள். இது முக நூலில் வருமா??????
 
முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ? காதலியை காதலனை மெய் தொட்டுப் பேசவும் முடியாது? அவளின் கூந்தல் மணமும் தெரியாது?
 
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே"
[குறுந்தொகை-2]
 
பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே! எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை???? முகநூல் ஊடாக நறு மணம் வராது?????
 
சேயாறு சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு,
''இனி வரின் எளியள்'' என்னும் தூதே.
[குறுந்தொகை-269]
 
சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு பண்டைமாற்று செய்து வர உப்பங்கழ னிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று, தாமதம் இல்லாமல், அதிக தூரமான வழியைக் கடந்து விரைந்துச் சென்று கூறும் படி தூது விடுகிறாள் . அவள் போய் சொல்லி அவன் வருவதற்குள், கடலுக்கு சென்ற தந்தையும் மீனுடன் வந்து விடுவான் , தாயும் நெல்லுடன் வந்து விடுவாள். இது தான் அந்த காலம்.
 
ஆனால் இன்று கணினி [ஆன்லைன்] மூலம் உடனடியாக செய்தி அனுப்பி , அவர்கள் வருவதற்குள் இலகுவாக களவு நெறி பின்பற்றலாம் . இதற்கு வேண்டும் என்றால் கணினி உதவலாம்?
 
காதலில் விழுவதென்றால், ஒருவருடன் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரம் ஒன்றாக கழிப்பதாகும். கட்டாயம் முன் திட்ட மிட்ட , நன்கு ஆயுத்தப் படுத்திய, முக நூல் சந்திப்பு அல்ல. அங்கு நீங்கள் உங்கள் சிறந்த தோற்றத்தைக் காண்பிப்பதுடன், பேசுவதற்க்கான சரியான மனநிலையிலும் இருக்கலாம்? காதலிப்பது என்பது எல்லா நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும். அப்பதான் உண்மை காதல்!
 
ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்பு கள் மூலம் நேரடியாக கதைத்தல் [online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்றாலும், இவை இரண்டும் நன்றாக திட்ட மிட்ட உரையாட லுக்கும் வழி வகுக்கும். உண்மையான காதல் மகிழ்விலும் சோகத்திலும் குழப்பத்திலும் அரும்ப வேண்டும்.
 
உதாரணமாக, ஒருவர் குறுந்தகவல் [text] ஒன்றை அனுப்புகிறார் என்று வைப்போம். நீங்கள் அதற்கான பதிலை உடன் அனுப்ப வேண்டும் என்று இல்லை . ஆர அமர சிந்தித்து மற்றவரை கவரும் விதமாக செயல்படலாம். அதே போல, வெளிச்சம் மற்றும் பின்னணியை நன்றாக அமைத்து ,உன்னை நீ விரும்பிய வாறு கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்தி, உரையாடலாம். மேலும் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், ஒரு பேஸ்பால் தொப்பி [baseball cap] அணிந்து மறைத்து விடலாம். அப்படியே, தழும்பு, வடு இருந்தால் அதற்கு தக்கதாக உடை அணிந்து மறைத்து விடலாம். இவை நேரடியாக செய்ய முடியுமா?
 
முக நூல் சந்திப்பு ஒரு காதல் தேர்விற்கு உதவலாம். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால், மற்றவர் கையில் ஒரு சில நேரம் உண்மையில் கழிக்கும் போது தான் அதன் வலிமை, உண்மை தெரியம் . அந்த சுகம் முக நூலில்,கணனியில் கிடைக்கப் போவதும் இல்லை. மேலும்
 
"மின்னுவதெல்லாம் பொன்னல்ல. மெசேஜ் பண்றதெல்லாம் பெண்ணல்ல",
 
ஆகவே:
 
"சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா
எதிர் காலம் இன்ப மயமாக என்றும்
இளமையும் இனிமையும் துணையாக
நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.
 
 
 
 

"ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்"

2 days 21 hours ago
"ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்"
 
இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,
 
“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது.  துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
 
தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
 
திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,
 
“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”
 
கணவன் அமைதியாகச் சொன்னான்,
 
“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”
 
இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
 
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.
 
ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன. அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை... நம் குறைகளுக்கோ காரணங்கள் மட்டும் தான் வலுவாக வைத்திருக்கிறோம். அந்தக் காரணங்கள் இல்லா விட்டால் நாம் பத்தரை மாற்றுத் தங்கம் தான்.
 
1975 ஆம் ஆண்டு வெளிவந்த "யாருக்கும் வெட்கமில்லை" என்ற தமிழ்த் திரைப் படத்தில், கண்ணதாசனின் ஒரு தத்துவ பாடல் உண்டு.
 
“ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே....
 
சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா..!
 
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்..!
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்..!"
 
திருவள்ளுவரும் அழகாகச் சொல்வார்.
 
“ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”
[குறள்:190]
 
அடுத்தவரிடம் குறை காண்பதில் இருக்கும் ஆர்வத்தை நம்மிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் காட்டினால், இவ்வுலகில் இவ்வளவு தீமைகள் இருக்குமா? அடுத்தவர் குறைகளைக் காண்பதில் தான் நமக்கு எத்தனை அக்கறை? எத்தனை வேகம்? அப்போது மட்டும் நம் அறிவு எத்தனை கூர்மையாய் செயல்படுகிறது.
 
அடுத்தவர் திருந்துவதினால் நமக்கு இருக்கும் பயனை விட நம்மை நாமே திருத்திக் கொள்வதில் தான் நமக்கு நிறையப் பயன் இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே!! .
 
இப்படிப்பட்ட இயல்பு நம்மிடம் இருக்கும் வரை நாம் குறைகளை நீக்கிக் கொள்ளவோ, திருந்தவோ சந்தர்ப்பம் அறவே இல்லை.மேலும் குறைகளை நீக்கிக் கொண்டு நாம் திருந்தினால் நம் வாழ்க்கையில் அடையும் பயன்கள் ஏராளமானவை. உதாரணமாக, நாம் நம் குறைகளை நீக்கிக் கொண்டு சிறப்பாக வாழும் போது அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து மாற அது ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும். குறையுள்ள மற்றவர்களும் நல்வழிக்கு மாற வாய்ப்புண்டு. எனவே விமர்சனம் தவிர்த்து நல்ல உதாரணமாக இருந்து வழிகாட்டு வோம்.!
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
19225313_10209523486146805_6123576158126
 
 
 
 
 
 
 

"சிந்து சம வெளியில் ஏறு தழுவல்" / "Bull fighting in Indus valley"

5 days 23 hours ago

"சிந்து சம வெளியில் ஏறு தழுவல்" / "Bull fighting in Indus valley"


மொஹெஞ்ச தாரோவில் கண்டெடுக்கப்பட்ட, ஏறு தழுவல் கல் முத்திரை, நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முந்தைய காளை துரத்தும் பாறை ஓவியம், சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தில் உள்ள ஏறு தழுவல் கல்வெட்டு என்பன ஜல்லிக்கட்டு என இன்று அழைக்கப்படும் எருதுவேட்டை என்ற மாடு பிடிக்கும் அல்லது ஏறு தழுவும் விளையாட்டுக்கு பண்டைய சாட்சியாக உள்ளன.   

ஏறு தழுவல் என்பது காளையை அடக்கி அமைதி ஆக்குபவருக்கு மாட்டின் கொம்புகளில் முன்னமே துணியில் கட்டி வைத்துள்ள 'சல்லி காசை' அல்லது 'நகைகளை' பரிசாக கொடுக்கும் ஒரு வீர விளையாட்டு ஆகும்.இது இன்றைய வடிவில், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்ற,திருமலை  நாயக் காலத்தில்,கி பி 1623-1659  இல், 400 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது என பெரும்பாலும் நம்பப்படுகிறது.எனினும் இந்த மாடு அடக்கும் அல்லது பிடிக்கும் வீர விளையாட்டு உண்மையில் மிக நீண்ட சரித்திரத்தை தமிழ் நாட்டில் கொண்டுள்ளது.கி மு 700 தொடக்கம் கி பி 300 காலம் கொண்ட சங்க இலக்கியம் இதற்கு சான்றாக உள்ளது. மேலும் 1930-களில் மொஹெஞ்சதாரோவில் கண் டெடுக்கப்பட்ட, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் முத்திரை ஒன்றில் தெளிவாக ஏறு தழுவல் சிற்பமாக பொறிக்கப்பட்டு, இந்த ஜல்லிக்கட்டுக்கான முன்னைய ஆதாரம் இப்ப கிடைத்துள்ளது. இது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது ஜல்லிக் கட்டின் சரித்திரத்தை கி மு 2000 ஆண்டுவரை கொண்டு செல்கிறது. அது மட்டும் அல்ல சிந்து வெளியில் இந்த வீர விளையாட்டின் முக்கியத்தையும் எமக்கு எடுத்து காட்டுகிறது என தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சுட்டிக் காட்டுகிறார்.

அத்துடன் கி பி 2004 இல் நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களிலும் ஏறு தழுவல் காணப்படுகின்றது. இது 4000 ஆண்டுகளாக, சங்க காலத்திற்கு முன்பே, தமிழ் நாட்டிலும் ஏறு தழுவல் அல்லது மஞ்சு விரட்டு இருந்ததை உறுதிப்படுத்துவதுடன் தமிழரை சிந்து வெளியுடன் பண்பாட்டு ரீதியாக இணைக்கிறது. இங்கு காளையுடன் சண்டையிடுவதற்கு பதிலாக, மனிதர்கள் காளையை அல்லது காளைகளை துரத்துகிறார்கள். இந்த காளைகள் நல்ல தேகக் கட்டுடையதுடன் பெரிய திமிழையும் [எருத்தின் கொண்டை] நீண்ட நேரான கொம்பையும் கொண்டுள்ளது. பெரும்பாலும் இது காளையுடன் சம்பந்தப்பட்ட முன்னைய விளையாட்டாக அல்லது காளை சண்டைக்கு முற்பட்ட  ஒரு ஆரம்ப விளையாட்டாக இருக்கலாம்? இது மனிதனுக்கும் காளைக்கும் இடையேயான ஒருவித ஓட்ட பந்தயம் ஆகும். இவ்விளையாட்டில், ஓடும் காளைகளை துரத்தி அவைகளை கடப்பதையே வெல்வதாக கொள்ளப் பட்டது. இவ்விளையாட்டு எந்த வித உடல் சேதமும் வராத வண்ணம், மக்களை மகிழ்விக்க விளையாடப்பட்ட விளையாட்டாக இருக்கலாம். 


மேலும் மொஹெஞ்ச தாரோ கல் முத்திரையில் ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் செதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப் படுகின்றன.


ஒருசாரார் ஒரு காளை, ஒன்றுக்கு மேற்பட்ட ஏறு தழுவும் வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் குட்டிக் கரணம் [பல்டி / somersault] அடிப்பது போலவும், 5-வது நபர் பரிதாபகரமாக தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறு கிறார்கள். என்றாலும் இது குறித்து சிந்து சம வெளி மற்றும் பிராமி கல் வெட்டு ஆய்வாளர் திரு  ஐராவதம் மகாதேவன் கூறும் போது இந்த முத்திரையை சற்று கூர்ந்து பார்த்தால், இன்றைக்கு ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்கள் காளையை பிடிக்கும் களம் போன்று தத்ரூபமாக உள்ளது என்றும் ஒருவரே பல கோணங்களில் தூக்கி அடிப்பது போலவும் அல்லது பலர் காளையால் அடிபட்டு நாலாபுறமும் சிதறுவதைப் போலவும் இருக்கலாம் என்றும், எது எப்படி இருந்தாலும் தெளிவாக காளை தான் வெற்றி பெற்றுள்ளது என்பதை உணர முடிகிறது என்கிறார். இதை பல்வேறு ஆராய்ச்சி யாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த வீர விளை யாட்டின் எச்சமிச்சம் இன்னும் தமிழ் நாட்டில் தொடர்ந்து கடைப்பிடிப்பதை காணலாம். 


ஆனால் இந்த பாரம்பரியம் ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன. ஒரு வேளை இவைகளுக்கு இடையில் வரலாற்றுக்கு முந்தைய ஏதாவது தொடர்பு இருந்து இருக்கலாம்?


இன்னும் ஒரு சிந்து வெளி முத்திரையில் வீரன் ஒருவன் நீண்ட வேல் ஒன்றை தனது வலக்கையில் தூக்கி காளையின் பிடரியில் தாக்குகிறான். அப்பொழுது தனது இடைக்கையால் காளையின் ஒரு கொம்பை பிடித்தும் தனது இடக்காலால் அதனது நெற்றியை உதைத்து காளையை அடக்குகிறான். அத்துடன் இம்முத்திரையில் பசுபதி என்ற சிறப்புப் பெயர் கொண்ட சிந்து வெளி சிவனும் இருக்கிறார். சில ஆய்வாளர்கள் இதை ஒரு பலியிடும் நிகழ்வாக கருதுகின்றனர். அப்படி ஒரு ஆண்டவனுக்கு பலியிடும் சம்பவமாக இருந்தால், அந்த வீரனின் கால் கட்டாயம் நெற்றியில் இருக்காது. அதே போல இடக்கையும் கொம்பை பிடிக்காது. அது மட்டும் அல்ல ஆண்ட வனுக்கு பலியிட்டு வழி படும் காட்சியாக இருந்தால் பயபக்தியுடன் தான் இச்சிற்பம் வடிக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறுந்தொகை 362 இல்,


 "பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,"


என்ற வரி வருகிறது. பல வர்ணங்களில் அமைந்த சோற்றுப் பலியொடு, நீ ஆட்டுக்குட்டியை வெட்டிப் படையல் வணக்கம் செய்து அதன் இரத்தத்தை இவள் நெற்றியில் பூசுகிறாய் என்கிறது. இங்கு நெற்றியை ஒரு புனித இடமாக கருதுவதை காண்க. அதே போல நம் முன்னோர்கள் வலதுக்கு மிக அதிகம் முக்கியத்துவம் அளித்துள்ளனர். உதாரணமாக கடிகாரம் வலமாகச் சுற்றுகிறது? பக்தர்கள் கோவிலை வலமாகச் சுற்று கிறார்கள்? மணமகளே,மண மகளே வா, வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!! என்கிறது. மேலும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் / அரங்கேற்று காதையில், சிலப்பதிகார வரிகள்: 129-132 இல்,


"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி"

என்கிறார். அங்கு அரசன் முதலான அனைவரும் அமர்ந்திருந்தனர். இசைக்கருவிகளை இசைப்பவர்தாமும் நின்றனர் . நாட்டிய விழாவின் நாயகியான மாதவி முதல் முதலாக அரங்கேறும் நடனக் கணிகை வலது புறத் தூணின் பக்கமாக நிற்கவேண்டும் என்ற மரபுப்படி, தன் வலது காலை எடுத்து முன் வைத்து நடன அரங்கில் ஏறி, வலப்பக்கத்தூண் அருகே நின்றாள் என்கிறார். அத்துடன் கிரேக்க கவிஞர் ஹோமர் கி.மு 800 ல் எழுதிய ஆடிஸியில் [Odyssey] பல இடங்களில் வலது பக்கப் பெருமையை எழுதி இருக்கிறார். ஒரு கருடன் வலப் பக்கமாகப் பறந்தவுடன் கடவுளே நல்ல சகுனம் காட்டிவிட்டார் என்று பாடுகிறார். புறநானூறு 190 இல், 


"கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழி நாள்
பெரு மலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்தன்ன" 


என்ற ஒரு வரி வருகிறது. கொடிய பார்வையையுடைய பன்றி, தன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால் அதை உண்ணாது, பெரிய குகையில் தனித்திருந்து, பின்னர் வேட்டையாட விரும்பி, எழுந்து, பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் என்கிறது . ஆகவே ஒரு பொது விழாவின் போது தங்கள் இறைவன் முன் காளையை அடக்கும் ஒரு வீர நிகழ்வாக இது இருக்கலாம் என நாம் இலகுவாக கருதலாம். 

எருதுமாட்டு சண்டையை விரும்பும் மக்கள் இடையே காளை பெரும்பாலும் ஒரு புராண செல் வாக்கை [அந்தஸ்த்தை] பொதுவாக பெற்றுள்ளது. அத்துடன் மேலும் காளை நீண்டகாலமாக  தெய்வீகத் தன்மையுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. சிந்து சம வெளி நாகரிகம் வர்த்தகத்தை தவிர விவசாயத்தை முதன்மையாக கொண்டது. சிந்து சம வெளி விவசாயிகள் பொதுவாக கோதுமை, தானியங்கள், கால்நடைகள் வளர்த்தார்கள்.மேலும் பசு, ஆடு, செம்மறி யாடு போன்றவை பாலும் இறைச்சியும் கொடுத்தன. மேலும் எருது ஏர் அல்லது கலப்பை இழுக்க அங்கு பயன்படுத்தப்பட்டது. அதனால் மாடு அங்கு அவர்களால் பெருமைப்படுத்தப் பட்டது. அது மட்டும் அல்ல சிவாவை பெரும்பாலும் நினவூட்டத்தக்க பசுபதி என்ற ஆண்டவனும் அங்கு இருந்தார். அவரைச் சுற்றி பசுக்கள் மற்றும் விலங்குகள் நிற்பது போன்ற முத்திரைகள் கண்டு எடுக்கப் பட்டுள்ளன. அவரை விலங்குகளின் தலைவன் என்கின்றனர். சிந்து வெளி முத்திரையில் பெரும்பாலும் காளை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. பல பல முத்திரைகளில் இது காணப்படுகிறது. இது மீண்டும் எமது கருத்தை வலுவாக்கிறது. பண்டைய காலத்தில் இது ஒரு வீரமிக்க விளை யாட்டாக, சமாதான காலத்தில் கூட போர்வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து தயார் நிலையில் வைத்திருக்க பாவித்திருக்கிறார்கள். அத்துடன் இதை மண மகனை தேர்ந்து எடுக்கும் ஒரு சோதனை களமாகவும் பாவித்தார்கள். ஆனால் இன்று கடந்த 400 ஆண்டுகளாக காசு அல்லது நகை பரிசுகளை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. இப்படி இந்த காளை சண்டை தமிழர் பண் பாட்டில்  பல வேறுபட்ட கூறுகளை [அம்சங்களை] கொண் டுள்ளது. இது ஸ்பெயின் காளை சண்டையுடன் ஒத்தும் அதே நேரம் பழமை வாய்ந்ததாகவும் இருந்தாலும் அதில் வேறு பாடுகளும் காணப்படுகின்றன. இங்கு காளை சண்டையில் அகப்பட்டு சாவதற்கு பதிலாக அதனுடன் போட்டி போடும் மக்களே காயப்படுகிறார்கள் அல்லது இறக்கிறார்கள். சங்கம் பாடல்களில் வர்ணித்தவாறும், சிந்து சமவெளி முத்திரையில் பதித்தவாறும் , கொம்புகளை பற்றி அதை மடக்கி பிடித்து தழுவுவது பொதுவாக மிகவும் கடினமான ஒன்று. என்றாலும், இப்படி வென்றதும் வீரர்களும்,இளைஞர்களும் பெருமைப்படுகிறார்கள். ஆகவே பொதுவான ஆங்கில சொற்றொடரான 'Take the bull by the horns' என்பதன் அர்த்தம் புரியக்கூடியதாகவும் உள்ளது.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


"Bull fighting in Indus valley"


A seal made of stone, found at Mohenjo-Daro, depicting “Bull fighting”, A painting of bull chasing on a massive rock surface at Karikkiyur in the Nilgiris, 2,000 B.C. to  1,500 B.C, &  A Bull taming inscription in Salem district museum, Tamil Nadu  - All these indicating Jallikattu in ancient days. 

Jallikattu, which is bull-baiting or bull fighting, in its present form, where gifts in the form of cash and jewellery are tied to the bull and the one who tames it gets them, which is believed to have been introduced during the rule of Thirumalai Nayak in Madurai, Tamil Nadu  (1623-1659), was a 400-year-old tradition. However, the bull-centred sport itself has a much longer history in Tamil Nadu. There is literary evidence to establish its existence in Tamil Nadu during the much-celebrated Sangam Age (700 B.C. to A.D. 300). Also a well-preserved seal,made of stone, now found at Mohenjodaro in the 1930s, and is on display at the National Museum in New Delhi, have traced the ancient origins of jallikattu-type bullfight to 2000 B.C, and it clearly shows that the sport was an important feature of the Indus Valley Civilisation, according to Iravatham Mahadevan, a specialist in Indus and Brahmi scripts. In addition, rock paintings discovered recently at Karikkiyur in the Nilgiris district of Tamil Nadu and dated to 2000 B.C.-1500 B.C. confirm that sports involving bulls is an ancient Dravidian tradition that was practised about 4,000 years ago, connect culturally between Indus valley and Tamils.


In ancient Tamil country, during the harvest festival, decorated bulls would be let loose on the “peru vazhi”(highway) and the village youth would take pride in chasing them and outrunning them. Women, elders and children would watch the fun from the sidelines of the “peru vazhi” or streets. Nobody was injured in this. Or the village youth would take delight in lassoing the sprinting bulls with “vadam” (rope). Here instead of fight with bull, It show men chasing bull or bulls, which seem to be a sturdy lot, with big humps and long and straight horns. May be early form of sport involving bull or bull fight in Tamil Nadu as mentioned.


However, the particular seal of Mohenjo-Daro portrays a ferocious bull in action, several men or a single man (according to two different interpretations), thrown in the air by it as they try to control it. This seal, made of stone, found at Mohenjo-Daro, now in Pakistan, shows a single bull with curved horns in the “action” of goring a single man or several men. One school is of the opinion that the seal shows several men, who tried to control the bull, thrown up in the air by the animal. A couple of men are shown flying in the air with their legs and hands spread out, a third man is seen jumping to grab the bull, another is somersaulting and yet another has pathetically come to rest on his haunch. Mr. Mahadevan, however, is of the opinion that the seal shows only one man, who is flung into the air by the bull, his flying, his plunging, his somersaulting and finally sitting on his haunch. Clearly, the bull is the victor. Also Several other scholars had commented upon this seal as portraying bull-baiting during the Indus civilisation, Remnant of this sport is still surviving in Tamil Nadu. But such traditions are also known, for example, in Spain and in Portugal and the Iberian peninsula. There may well be a pre-historic connection between these very similar cults. 

In another Indus Valley seal, we find a warrior, holding a spear in his right hand and attack bull in its nape, while with his left hand grab the bull by its horn, he kick its forehead by his left leg, and take control of the bull. Also we find the Indus vally god Pasupathi there. However, according to some scholars, it is a ritual killing of a buffalo to satisfy a god or a goddess. But it is very doubtful, Because, If it is a ritual killing or offering to god as a sacrifice, the man legs definitely not on the forehead of the bull and Similarly he would not hold horn by his left hand. Not only that the picture will not demonstrate Violence, rather it will show devotion with godly fear. In Sangam love poem ,Kurunthogai 362, It says:


"You offer boiled rice and many other things along with a killed, small goat, and rub blessings on my friend’s fragrant forehead. You pray and offer all this to powerful Murukan".

This clearly shows the importance of the forhead in an ancient & present culture and further In another Sangam poem, Purananuru 190,It says:


"like a hungry tiger that will not eat a harsh-eyed bow since it fell to its left, but on the next day wakes up hungry in his mountain cave, rises up to bring down to his right side, a large bull elephant!".


In Sundara Kanda in Ramayana when Hanuman enters Lanka for the first time. He says An enemy or a person wishing the downfall of the family will not enter through main door, but through a back door or, jump over the compound wall and place left foot first. Also, In Homer's Odyssey, the birds appearing on the right side is considered as the positive omens, for example in 15.34, It mentioned that "not without a god's will did this bird fly past you on the right". Even now when a Tamil / indian bride enters the new home, she puts her RIGHT foot first in the house. Therefore we can easily conclude that it is a festival or function or sports, conducted front of god, where muscular, aggressive and Raging bull is tamed or bring under control by competitors as in jallikattu. 


The bull has an almost mythical status among those who love the sport of bullfighting. The bull has had a long history of being associated with divinity. Farming was one of the most important occupation during Indus valley civilization other than trade. The Indus valley farmers grew wheat, grains, and animals on land. Cows, goats, and sheep gave milk and alternatives. Also they plough the land with wooden ploughshares drawn by men and oxen, and so, the bull was given much respect at that time. There was also a deity, much like Shiva, who was then worshipped as the Pasupathi (the caretaker of herds). 


we also find that the bull is the most popular animal motif on the Indus Valley glyptic art, which again confirm our assumption. This bull sport represent a different facet of the Tamil culture. This was a martial sport in olden days to keep the warriors prepared for the war even during the peace time. Also prove their manhood / bravery to win the hearts of brides during the Sangam period & thereafter. but recently, for about 400 years for the gifts of cash & jewellery. 

Though it look similar to and older than the Spanish running of the bulls, it is different. Instead of bulls getting killed, it’s the people who gets injured / killed. Though It's usually hard to take the bull by the horns as described in Sangam poems & seals, most warriors/young youth feel great, once they take the bull by the horns, It may also give the answer to the question "Where does that strange but common expression 'Take the bull by the horns' come from.


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

"சிந்து சம வெளியில்  கோழிச்சண்டை" / "Fighting Cocks in Indus valley"

5 days 23 hours ago

"சிந்து சம வெளியில்  கோழிச்சண்டை" / "Fighting Cocks in Indus valley"


மார்ஷல்  முத்திரை [Marshall seal] 338 என அழைக்கப்படும் சிந்து வெளி முத்திரையில், இரு சேவல் கோழிகளும் ஒரு திமிழுடன் கூடிய எருதுவும் காணப்படுகிறது. இங்கு சேவல் கோழியின் கழுத்தின் வடிவமும் அதன் நேராக உள்ள வால் இறக்கைகளும், அவை நன்றாக வளர்க்கப்பட்ட அல்லது பேணப்பட்ட கோழிகள் என்பதை காட்டுகிறது. இந்தக் கோழியைக் கூர்ந்து பார்த்தீர்களேயானால் இதனுடைய கழுத்து உயர்ந்தும், வால் தூக்கலாக செங்குத்தாக இருக்கும். மேலும்.கால்கள் நிலை கொள்ளாமலும் நிலத்தில் இருந்து சற்று உயர்ந்தும் தரையில் படாமலும்  இருப்பது தெரியும். அதுவும் இரண்டு கோழி. ஆகவே இவை இரண்டும் ஒரு மொஹெஞ்சதாரோ சண்டைக் கோழியாகத்தான் இருக்க வேண்டும். அதே போல காளையும் எருதுபிடி சண்டைக்குக் பயிற்றப்பட்டது போல் ஆக்ரோசமாக உள்ளது. சேவல் கோழி சோடியாகவும் காளை தனித்தும் இருக்கிறது. ஏனென்றால் இதன்னுடன் சண்டை போடுபவர் இன்னும் ஒரு காளை அல்ல, அது ஒரு மனிதன் என்பதால் அப்படி இருக்கலாம். ஆகவே இந்த முத்திரை பெரும்பாலும் கோழி சண்டையையும் காளை சண்டையையும் குறிப்பதாக இருக்கலாம். 


மேலும் இடையர், வேளாண்மை சமுதாயங்களில் கோழிச் சண்டை பரவலாக, அவர்களின் கேளிக்கைப் பொழுது போக்கு விளையாட்டாக இருந்து உள்ளது. அது மட்டும் அல்ல, இதை ஆழமாக பார்க்கும் போது அங்கு சேவல் கோழிகள் இரண்டு அருகருகே ஒரு குறியுடன் இணைந்து இருப்பதை காணலாம். இதை ஐராவதம் மகாதேவன் "கோழி நகர்" என்று சொல்கிறார். கோழி வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு பறவை. எல்லா கிராமங்களிலேயும் இருக்கிறது. எல்லா ஊர்களிலேயும் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இந்த சிந்து வெளி நகரம் மட்டும் கோழியினுடைய பெயரை ஊர்ப் பெயராக வைக்க வேண்டும் என்று சொன்னால், இந்தக் கோழிக்கு ஏதாவது ஒரு சிறப்பு இருக்க வேண்டும். 


இதற்கு ஒரு இணையாக, ஒப்புமையாக நாம் முற்காலச் சோழர்களின் தலை நகரமான கோழியூர் என்ற உறையூரை எடுத்துக் கொள்ளலாம். பாரம்பரிய தகவலின் படி, ஒரு காலத்தில் சோழமன்னனின் யானை உறையூரை அடைந்தபோது, அதனை ஒரு கோழி தாக்கி வென்றது. அதனால் சோழன் தன் தலைநகரை அங்கு அமைத்துக் கொண்டு, அதற்கு கோழியூர் எனவும் பெயரிட்டான் என அந்த செய்தி கூறு கிறது. இதனை இளங்கோ அடிகள்,


"காவுந்திஐயையும் தேவியும் கணவனும் 
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய 
புறம் சிறை வாரணம் புக்கனன் புரிந்து என்"


என சிலப்பதிகாரத்திலும் (புகார்க் காண்டம், நாடு காண் காதை) கூறுகிறார். அதாவது கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளும் உறையூருக்கு செல்லும்போது, உறையூரை கோழிச் சேவல் யானையை வீழ்த்திய இடம் என்று குறிப்பிட்டு பாடுகிறார். சேவல் கோழியை அப்படியான ஒரு சண்டைக்கு கவனம் செலுத்தி பழக்கி வளர்க்கிறார்கள். அதனால் அது பொதுவாக மூர்க்கமான அச்சந்தருகிறதாக தோற்றம் உள்ளதாக இருக்கிறது. ஆகவே யானையை துரத்திய சேவல் கட்டாயம் ஒரு சேவல் கோழியாகத்தான் இருக்கவேண்டும். ஆகவே அது ஆவேசமாக [ஆக்ரோஷமாக] கோபத்துடன் சிறகடித்து தலையை உயர்த்தி பறந்து பாய, யானை வெருண்டு துதிக்கை தூக்கி பிளிறியபடி அங்கு இருந்து விலகி ஓடியிருக்கலாம். இதனால் அந்த சம்பவம் மக்களிடையே செல்வாக்கு பெற்று அப்படி பெயர் பெற காரணமாக இருந்து இருக்கலாம்.

 
பெரும்பாலும் இந்த உறையூர் அந்த பண்டைய காலத்தில் சேவல் சண்டைக்கு பிரபலமானதாக இருந்து இருக்க வேண்டும். ஆகவே இந்த சிந்து வெளி நகரத்திலும் இதை ஒத்த ஏதாவது ஒரு செய்தி இருக்க வேண்டும் என நாம் இலகுவாக நம்பலாம். மேலும் கி.மு. முதலாம் நூற்றாண்டு. சோழர் நாணயம் யானையோடு ஒரு கோழி சண்டை போடுகிற காட்சியை கொண்டுள்ளது. இப்படியான ஒழுங்கு படுத்தப்பட்ட கோழிச் சண்டையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பண்டைய சங்க இலக்கியத்தில், உதாரணமாக, குறுந்தொகை 305:5-6, அகநானூறு 277:13-16 காணலாம். 


இதே போன்று செஞ்சி விழுப்புரம் சாலையில் அரசலாபுரம் என்ற ஊரில் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோழி உருவம் பொறித்த நடுகல் உள்ளது. இந்நடுகல்லில் ’மேற்சேரிடுயாடி கருகிய கோழி’ என்று கல்வெட்டு தொன்மைத் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் கோழிகளைப் பழக்கி சாவக்கட்டு அல்லது சேவல் சண்டைகளை பொழுது போக்காக நடத்துவர். அதில் வீரமாக மற்றொரு கோழியுடன் கோழிச்சண்டை நடத்தி இறக்கின்ற கோழிக்கு நடுகல் எடுத்து தமிழர் வழிபடுவர். அதற்காக எடுக்கப்பட்ட நடுகல்லே இதுவாகும். இந்தியத் துணைக் கண்டத்திலேயே இறந்து போன சேவலுக்காகப் பெயர் வைத்து ஒரு நடுகல் எழுப்பிய ஒரே பண்பாடு தமிழ்ப் பண்பாடு மட்டும்தான். ஆக இந்தப் பண்பாட்டினுடைய தொடர்ச்சியை மொகஞ்ச தாரோவில் இருந்து, இன்றைக்கு இருக்கக்கூடிய, சேவல் சண்டையினை கதைக்கருவாக உள்ள ஆடுகளம் திரைப்படம் (2011)  வரை, இது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி என்று நாம் கருதலாம்.

கோழ் என்ற சொல்லில் இருந்து தான் கோழி என்ற பெயர் அனேகமாக வந்து இருக்கலாம். கோழ் என்பதன் கருத்து வழ வழப்பான, செழிப்பான , கொழுப்பான என்பது ஆகும். பெரும்பாலான விவசாய சமுதாயங்களில் பண்டைய காலத்தில் கோழிச் சண்டை ஒரு பொழுது போக்கு ஆகும். பிற்கால சோழன் ஆண்ட  தஞ்சாவூர், தமிழகத்தில் இதற்கு பெயர்போன ஒரு இடம் ஆகும், முக்கியமாக, அறுவடை காலத்தில், அதாவது பொங்கல் தினத்தில் ஆகும். மற்றது கேரளம் ஆகும். இந்தியா துணைக் கண்டத்தில், குறிப்பாக பாகிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் போன்றவை கோழிச் சண்டைக்கு பிரபலமான இடங்களாகும். மேலும் பல அறிஞர்கள் உலகம் முழுவதும் கோழி பரவ சிந்து வெளி நாகரிகமே முதன்மையானதாக இருந்தது என்கின்றனர். அது மட்டும் அல்ல சிந்து வெளியில் உணவு தேவைக்கு அன்றி, சேவல் கோழி பெரும் பாலும் சண்டைக்கே பாவிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அத்துடன் கி மு  1000 ஆண்டு அளவில் சேவல் கோழி மத முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக குறுந்தொகை கடவுள் வாழ்த்தில், 


"சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே" 


என்ற வரி வருகிறது. இதன் பொருள்: சேவற்கொடியைக் கொண்டவனுமகிய முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பதாகும்.


என் எலும்பை உருக்கும் இந்த காம நோய் பார்த்த என் கண்ணால் வந்தது. நானே சென்று அவரைத் தழுவலாம் என்றால் அவரைக் காணமுடிய வில்லை. அவராகவும் வரவில்லை. கோழியைச் சண்டைக்கு விட்டால் விட்டவர் அதனை பிரித்து, சண்டையை நீக்கி விடுவார்கள்.  ஆனால் குப்பையிலே தாமே சண்டை போட்டுக் கொள்ளும் கோழிகளை யார் பிரித்துவிடுவார்கள். களைத்துப் போய்த் தாமே விலகிக்கொண்டால்தான் உண்டு. அதுபோல என் காமமும் தானே தணிந்தால்தான் உண்டு என்கிறது குறுந்தொகை 305. 


இப்பாடலில் தலைவியின் மனநிலையைக் குப்பைக் கோழியின் போருடன் ஒப்பிட்டு கோழி சண்டையை சிறப்பித்துப் பாடியமையால் இப்புலவர் குப்பைக் கோழியார் எனப் பெயர்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


"கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை யான் உற்ற நோயே."
-குறுந்தொகை 305. 


மேலும் போர்புரியும் கோழியின் கழுத்தில் உள்ள மயிர்கள் செறிந்து தீப்பிழம்புப் போல் காணப்படுவது போல் இங்குச் செம்முருக்கின் பூக்கொத்துகள் காணப்படுகின்றன என அகநானூறு 277:15-18 கூறுகிறது. 


"வாரா அளவை ஆய் இழை கூர் வாய்
அழல் அகைந் தன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறனுடைச் சேவல்
போர் எரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் எண் குரல் மாந்தி
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம தானே
வாரார் தோழி நம் காதலோரே".
[அகநானூறு 277:13-20]

 
கூரிய அலகினையும் தீகொழுந்து விட்டெரிந்தாற் போன்ற அழகிய செறிந்த சிறகினையுடைய, வீட்டில் வாழும் கோழியின் வீரமான தோழனான சேவல் சண்டையிடும் போது, கிளர்ந்தெழும் அதன்  கழுத்தில் உள்ள மயிர்கள் செறிந்து தீப்பிழம்புப் போல் காணப்படுவது போன்ற செம்முருக்கினது ஒள்ளிய பூக்கொத்துகளை வண்டுகள் மொய்த்து அதில் உள்ள தேன் சிதறுவதற்கு உகுந்த இளவேனிற்காலம் இப்ப வந்துவிட்டது. ஆனால்  நம் காதலர் இன்னும் எம்மிடம் வரவில்லை, நாம்  என் செய்வாம் தோழி என தலைமகன் பிரிவின்கண் தலை மகள். சொல்லியது இதுவாகும். 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


"Fighting Cocks in Indus valley"


In the Indus seal, Marshall seal No.338, the shape of the neck of the cocks and the straight shape of the wings of the tail show that they were well groomed cocks. A close scrutiny of the images reveals the tell-tale markers and the probable reason: the necks are raised; the tails are up and stiff; the legs are unsettled and slightly raised above the ground level. They are probably the gamecocks of Mohenjo-Daro in a fighting-mode. The bull also looks like a ferocious one, trained for bull fights. The cocks are seen as a pair where as the bull is single. This seal may perhaps be about the cock fight and bull fight. The bull is alone-may be because the fighter at the other end is not another bull but a man. Both cock fights and bull fights are popular with pastoral and agrarian societies. 


Cock-fight is also one of the 64 arts. Also in this seal, the images of two cocks are inscribed side by side, along with a sign that is generally interpreted as ‘city’. Iravatham Mahadevan reads the sign sequence on the seal as ‘cocks-city.’ For an important Indus city to be named after cocks there has to be a reason. A cock being a common domestic bird, normally found in every habitat, there has to be something special about the cocks at that specific place to justify such naming.


 An analogy to this is available in ‘kozhi’ (kozhi hen or rooster), the name of the capital town (Kozhiyur, also known as Urayur) of early Cholas of Tamilnadu. In this case as well, the traditional accounts recall the valor of a ‘cock’ that fought against an elephant at that place as the basis for this commemorative name. In celebration of this episode, the Cholas of the Sangam age even issued a coin with an image of a cock fighting an elephant. The cocks were groomed for such fights. Such cocks used to be ferocious. The instance of an elephant being threatened by a cock might well be about a fighter cock jumping in ferocity that made an elephant run away from that place. This seems to be a possible explanation for the cock versus elephant fight that led to the popularity of the cock and the place where it was seen. Perhaps Urayur in those days had people who groomed cocks for fighting. Hence, tracing the genesis of ‘cocks-city’ of the Indus Age to the ‘fighting quality’ of the cocks of the specific-region may not be without basis. Evidence to support this view, organized cock-fights, is available directly and indirectly in the ancient Tamil texts.(Kurunthogai: 305:5-6;Akananuru 277:13-16) and epigraphic records, at Arasalapuram in Tamilnadu, a hero-stone, dated 5th century AD installed in the memory of a fighting-cock. 


The name Kozhi also seems to be derived from the word, "kozh" (கோழ்) which means slippery, well-built, fatty etc. (வழ வழப்பான,செழிப்பான, கொழுப்பான). Cock fighting was a pastime in most agrarian societies. It was popular in Thanjavur, the Cholan capital in later years. It came at the time of Harvest festival (Pongal) in those days. Cock fights were popular in Kerala also. It is popular in most parts of Indian subcontinent including Pakistan. Punjab and Kashmir also are known for having this cock fight as a game. Chickens from the Harappan culture of the Indus Valley (2500–2100 BC) may have been the main source of diffusion throughout the world. Within the Indus Valley, indications are that chickens were used for sport and not for food and that by 1000 BC they had assumed "religious significance" also. 


For example, Ode to God in Kurunthogai, we find a line, which says,"சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே." this means, "His flag is cock.-God Murugan saves the world peace" 


In Kurunthogai:305, it is said that the thalaivi (heroine) suffered from the pangs of pain of separation from her lover. The pain was not caused by others and can not be cured by others. It was like the fight between the 'Kuppai kozhikal" [குப்பைக் கோழிகள்] – the fight between the cocks that were searching food from the wastes. There was none to prompt them to fight and none to separate them in time. Similarly the heroine was suffering from a pain which was not induced by others nor solved by others. Author of the poem is KUPPAI KOZIYAR .This name is coined from a phrase he used in this poem.


"The bright flame of passion
that my eyes gave to me,
torments me to my very bone.
It is not possible to see him
and embrace him.
He is not capable of coming
and removing my distress.
My love affliction is like two chickens
fighting alone on a rubbish pile
with no one to separate them.
Unless it ceases by itself,
no one will free me of my suffering!"-

[Kurunthogai:305]


The heroine lets her friend know about her love affliction. Here the poet makes a hidden note of sandaik kozhi (cocks in fight). When the cock fights are organized ones, there are people who make the cocks enter a fight and also separate them whenever they wish to stop it. The fight between the cocks on the mounds of wastes is not similar to that fight. From this it is known that cock fights had been popular in olden Tamil lands. In Akananuru 277,narrates that as the neck of the domestic fighting cock with the sharp beak and flaming red feathers bristles when it fights as below:


"Early summer season is here, bees swarm
and spill honey from clusters of murukkam
flowers, like rising flame, that look like the
swaying-flame-like feathers of pretty, fighting
roosters with sharp beaks, mates of
house-residing fowl
My lover has not come back, my friend!"-.

[Akananuru 277:13-20]


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 
 

"ஒப்பனையியல் / அழகுக் கலை" / "cosmetology" 

6 days ago

"ஒப்பனையியல் / அழகுக் கலை" / "cosmetology" 

ஒப்பனையியல் பற்றிய பண்டைய அறிவியல் எகிப்திலும் இந்தியாவிலும் ஆரம்பமாகியதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், ஒப்பனை பொருட்கள், அதன் பாவனைகள் பற்றிய முன்னைய குறிப்புகளை காண நாம் கி மு 2500-15000 ஆண்டு இந்தியா உபகண்டத்தின் சிந்து சம வெளி நாகரிகத்திற்கு போக வேண்டியுள்ளது. அங்கே, சிந்து சம வெளி பெண்கள் உதட்டுச் சாயம் (Lipstick) பூசினார்கள் என தெரிய வந்துள்ளது. உலகிலேயே முதன் முதலில் உதட்டுச் சாயம் தயாரித்து பயன்படுத்தியவர்கள் இவர்களே என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப் பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று தான் இந்த உதட்டுச் சாயமாகும். இவர்கள் தேன்மெழுகு [beeswax], தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் [pigments] என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ் மத்தைத் (Colloid) தங்களது உதடுகளில் பூசிக் கொண்டனர். இதுவே இன்றைய நவீன உதட்டுச் சாயங்களின் முன்னோடியாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

 
இதே போல பண்டைய தமிழகத்திலும் ஆணும் பெண்ணும் தம்மை பலதரப்பட்ட ஒப்பனைகளில் ஈடுபடுத்தியதுடன் அதைப்பற்றிய மிகவும் ஆழமான எண்ணங்களை கொண்டிருந்தார்கள் என்பதற்கான சான்றுகள் அங்கு காணக்கிடைக்கிறது. ஒப்பனை பொருட்களின் பாவனை இன்றைய காலத்தை போல இல்லாமல், அவை குறிப்பாக அக தோற்ற அழகுடன் மட்டும் நில்லாமல், நீடித்து வாழ்வதற்கும் நல்ல உடல்நலம் பேணுதற்கும் உகந்தவையாக தேர்ந்து எடுக்கப்பட்டன. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால ஆண்களும் பெண்களும் எண்ணெய் பாவிப்பதிலும், நறுமண முள்ள இயற்கை வாசனை திரவியம் மற்றும் பல வண்ண இயற்கை பொடிகள், பூச்சுக்கள் பாவிப்பதிலும் கவனம் செலுத்தினார்கள். இதனை குறிஞ்சிப்பாட்டு 107-108 மிக அழகாக 


"எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்த் தண் நறும் தகரம் கமழ மண்ணி" 


என தலைவனின் எழிலை வர்ணிக்கிறது. அதாவது எண்ணெய் தடவிய சுருண்ட தலை முடியில் மணம் வீசும் அகில், சந்தனம் போன்ற வற்றையும் மணம் தரும் குளிர்ச்சியான மயிர்ச் சாந்தினையும் மணக்கப் பூசியிருந்தான் என்கிறது. மேலும் பொதுவாக சந்தனம் பெரிதும் மார்பில் பூசப்பட்டது. பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியின் பெருமையையும் அவன் வலிமையையும் சிறப்பித்துக் கூறும் புறநானூறு 3, அவனை, கால்களில் பொன்னாலான கழல்களும், உலர்ந்த சந்தனம் பூசிய பரந்து அகன்ற மார்பும் உடையவனே!  


-"பொலங் கழல் கால் புலர் சாந்தின் விலங்கு அகன்ற வியன் மார்ப"-


என்று கூறுகிறது. சந்தனம் பொதுவாக சிறந்த கிருமிநாசினி யாகவும் அதே நேரம்  உடம்பை குளிரவும் செய்கிறது. பண்டைய தமிழ் பெண்கள் மேல் சட்டை அணிவ தில்லை. ஆனால், அவர்கள் தமது மார்புகளில் சந்தனச் சாந்தைக் குழைத்து அல்லது வாசனைப் பொருள்களால் கோலம் எழுதி தமது மார்புகளை மறைக்கிறார்கள். இதை தொய்யில் என்பார்கள். 

தொய்யில் என்பது தோய்த்தல் என்று பொருள்படும். இது மார்பகங்கள் தவிர, நெற்றியிலும், தோளிலும், கூட வரைகிறார்கள். மேலும் இத்தகைய ஒப்பனைக் கலையை மேற் கொள்வோர் தொய்யில் மகளிர் என்ற பெயரால் அழைக்கப் பட்டனர். இவளது வண்ண முலைகள் பார்ப்பவர் கண்ணை உருத்தும்படி எழுகின்றன. அதில் தொய்யில் எழுதி மேலும் உருத்தச் செய்துள்ளாள். பார்ப்பவர் என்ன ஆவர் என்பது எழுதியவளுக்குத் தெரியவில்லையே


-"உருத்தெழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்"- 


என கேள்வி கேட்கிறது, குறுந்தொகை  276. சங்க கால மகளீர் வேறு பல வழிகளிலும் தம்மை அழகூட்டினர். அவர்கள் கண்மை போட்டு தம்மை ஒப்பனை செய்தார்கள் என்பதை அவ்வை யார். மணிகள் கோத்த அணிகள் விளங்கும்  இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே!


-"இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல் மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!"-


என புறநானூறு 89 அடிகளால் சான்று பகிர்கிறார். மேலும் அவர்களுக் கிடையில் எந்த விழா நடந்தாலும் அது மகிழ்ச்சிகரமாக அல்லது துக்ககரமாக இருந்தாலும் அங்கு மலர் அலங்காரம் முதல் இடத்தை பெறுகின்றன. மற்ற முக்கிய ஒப்பனை நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ ஆகும். சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் 


"திலகம் தைஇய தேம்கமழ் திரு நுதல்" 


என்ற அடி 24, திலகமிட்ட நறுமணம் பொருந்திய அழகிய நெற்றி என்கிறது. சங்க காலத்து மக்கள் தங்களை அழகுபடுத்த இப்படி சில ஒப்பனை முறைகளைக் கையாண்டுள்ளதுடன் ஒப்பனை செய்வதற் கென்று தனியறைகளும் [மல்லல் வினையிடம்], பணியாட்களும் [வண்ணமகளிர்] இருந்துள்ள தன்மையையும் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்பியுள்ளன.


ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகுபடுத்தல் என்று பொருள். இத்தகைய ஒப்பனைக் கலை தமிழிலக் கியங்களில் பழங்காலந் தொட்டு இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் மேற் கூறிய ஒப்பனைகள் மலிந்துள்ளன. புறநானூற்றில் கூந்தல் ஒப்பனையை வருணிக்கும் பொழுது,


"...........................................வந்ததைக்
கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல்
மண்ணூறு மணியின் மாசு அற மண்ணிப்
புது மலர் கஞல இன்று பெயரின்
அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே".
[புறநானூறு 147]


என்று சங்ககாலப் புலவர் குறித்துள்ளார். நேற்று உன் இல்லம் சென்றபோது உன் மனைவி மழைக்கால மேகம் இடி முழக்கத்தைக் கேட்டுக் கொண்டு தனியே இருந்தாள். கண்ணீரை அடக்கிக் கொண்டு இருந்தாள். கூந்தலில் எண்ணெய் வைக்காமல் இருந்தாள். அவள் தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக் கொள்ளும்படி நீ அவளிடம் செல். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வதுதான். என்கிறார் புலவர். 

மேலும், குறுந்தொகை 5, இல் தலைவி தோழியிடம் குருகுகள் [ஒரு வித பறவை] உறங்குவதற்கு இடமாகிய இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள் மோதும் போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகிய நீர்ப் பரப்பையுடைய மெல்லிய கடற் கரையையுமுடைய எம் தலைவன் எம்மை விட்டுப் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற கண் மை இட்ட எம் கண்கள் காம நோயால் தூங்க முடியாதவை ஆக வாடுகின்றன. இது தான் காதல் நோயின் தன்மையோ?என வினாவுகிறார்,. 


"அது கொல் தோழி காம நோயே
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல் இதழ் உண் கண் பாடு ஒல்லாவே"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"cosmetology" 

The ancient science of cosmetology is believed to have originated in Egypt and India, but the earliest records of cosmetic substances and their application dates back to about 2500 and 1550 B.C, to the Indus valley civilization. where We came to know that Woman applied lipstick by 2000 BC. There is evidence of highly advanced ideas of self beautification and a large array of various cosmetic usages both by men and women, in ancient Tamilakam too. Significantly, the use of cosmetics was directed not only towards developing an outwardly pleasant and attractive personality, but towards achieving merit, Longevity with good health. For example, the men and women of Sangam age were fond of using oil, aromatic scents, coloured powders and paints, while the sandal paste was heavily applied on their chests. Kurunjippaaddu clearly said in line 107-108 that


"The hero was handsome with oiled, curly hair, on which fragrant pastes and perfumes had been rubbed."
sandal paste is believed to cool the body’s temperature. Purananuru 3 confirmed the use of sandal paste as cosmetic substance
-"Your broad chest is smeared across with sandal paste and your feet are adorned with golden anklets".


Tamil women of the early centuries were not wearing blouses and they covered their breasts only with the ornamental paste of sandalwood and even some time, according to sangam literature, women had pictures drawn on their bodies in coloured patterns. This is called toyyil. Kurunthogai 276 question


- "Somebody painted bright thoyyil designs on her beautiful, budding breasts. without knowing it will sweep others eye. What happen to her if I appeal in the court of the king?"


The Tamil women have also other ways of adding to their beauty. From the very early days the habit of putting Collyrium to the eye is very familiar (Kanmai). Purananuru 89 confirm this beautification


-"O Virali[female musician] with a bright forehead, kohl[an ancient eye cosmetic] decorated eyes, delicate nature and lifted loins wearing splendid jewels!".


There is no Tamil function without flowers whether it is a happy or sad. Pattinapalai (10:110), refers to the gender-wise differences  even in the making of garlands for adornment. Another important custom is to have Kumkum pottu /Bindi on the fore head. We can find this in early period as well,


In Purananuru 147,the poet advising the hero [King] while he is living other lady than his wife that If you want to award me please join with your wife. Yesterday, I met her. She is suffering loneliness without your company. Your presence will make her to dress her hair oiling, bathing and flower decoration.


"King of Aviyars!  Grant me the gift of you going
to your wife today, the beautiful dark woman, who,
yesterday, stood alone in despair listening to the
sweet sounds of rain drops, tears dripping from her
pretty, streaked, moist eyes, her hair without oil,
so that her hair can be adorned with flowers, after
being washed perfectly, to shine like sapphire gems".


[Purananuru 147]


In Kurunthokai 5, the heroine asked her friend "Is this how love sickness is, my friend? My kohl-lined eyes refuse to sleep"


"Is this how love sickness is, my friend?
The lord of the delicate shores,
……….where residing herons sleep in the
……….sweet shade of punnai trees,
……….which bloom when the breaking
……….waves spray their sweet mist,
has left me.
My kohl-lined eyes that resemble flowers
with many petals refuse to sleep."


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 

"முதுமையில் தனிமை" / பகுதி: 03

1 week 2 days ago

"முதுமையில் தனிமை" / பகுதி: 03 

 

பகுதி 02 இல் நாம் முக்கியமான, முதுமையில் தனிமையைப் பற்றிய, முதல் ஐந்து தகவல்களை பார்த்தோம். "சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே." என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நற்றிணை 210 , பிறரைத் துன்புற விடாமையே சான்றோர் மதிக்கும் செல்வம் என்கிறது. அப்படியென்றால், எமது பெற்றோரை எம் மதிப்புக்குள்ள முதியோரை தனிமை படுத்தி, அதனால் தனிமை அவர்களை துன்புறுத்த நாம் விடலாமா? என்பதை நாம் கட்டாயம் ஒரு தரமாவது  சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனையை தூண்ட நான் மேலும் சில தகவல்களை கீழே தருகிறேன்.
 
6. சமூக தனிமை பொதுவாக நீண்டகால நோய்க்கு வழி வகுக்கலாம். உதாரணமாக, நீடித்த அல்லது  வீரியம் குறைந்த நாள்பட்ட நுரையீரல் நோய் [chronic lung disease],கீல்வாதம் [arthritis],பலவீனமான அசைவுத்தன்மை [impaired mobility], மற்றும்  மனச்சோர்வு [depression] ஆகும். எனவே சரியான பராமரிப்பு ஒன்றை அவர்களுக்கு உறுதி செய்வதன் மூலம் இவற்றை நாம் குறைக்கலாம். உதாரணமாக, வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு தொலை பேசியில் கதைப்பதாலும் அவர்களிடம் போய் வருவதாலும் [phone calls and visits] இவற்றின் தாக்கங்களை குறைக்கலாம். அப்படியே மற்றவர்களுக்கும் ஆகும். இது மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு [high blood pressure] கூட வழி வகுக்கிறது. 
 
7.சமூகத்தில் இருந்து  தனிமைப்படுத்தப்பட்ட மூத்தவர்கள் [Socially isolated seniors] அதிகமாக எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற வர்களாக பொதுவாக இருக்கிறார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, சமூகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் [community-based programs and services] அங்கு கட்டாயம் தேவைப் படுகிறது.
 
8..உடல் மற்றும் புவியியல் தனிமை [Physical and geographic isolation] சமூக தனிமைக்கு அநேகமாக வழி வகுக்கிறது. இங்கு உடல் தனிமை என்பது மனித தொடர்புகள் மிக அருகி காணப்படும் ஒரு நிலை அல்லது ஒரு தனிமை சிறையில் இருப்பது போன்ற ஒரு நிலை எனலாம் [limited Human contact or solitary confinement].அதே போல புவியியல் தனிமை என்பது தனது இனத்தில் இருந்து பிரிந்து இருத்தல் எனலாம். உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ஆறுக்கு ஒரு முதியோர் உடல், பண்பாடு மற்றும் புவியியல் தடைகளுக்கு [physical, cultural, and/or geographical barriers] முகம் கொடுத்து, அதனால் அவர்கள் தங்கள் சக உறுப்பினர்கள் மற்றும் சமூகங்களில் [peers and communities,] இருந்தும் விலக்கப் படுகிறார்கள்.சலுகை மற்றும் சேவைகள் [benefits and services] பெற்று தங்கள் பொருளாதார பாதுகாப்பை [economic security] மேம்படுத்தும் வாய்ப்பை இந்த விலகல் தடைசெய்கிறது. அது மட்டும் அல்ல,ஆரோக்கியமான, சுயாதீன வாழ்க்கையை வாழக்கூடிய திறனையும் தடை செய்கிறது. முதுமையில் தனிமையில் இருப்பவர்களுக்கு பொதுவாக நீண்ட கால பராமரிப்பும் தேவைப்படுகிறது.
 
9.ஒருவர் தனிமையையும் தனிமை படுத்தலையும் எதிர் நோக்க பெரிய ஆபத்து காரணியாக அமைவது,அவர் தனது துணையான கணவனையோ அல்லது மனைவியையோ இழப்பது ஆகும். பொதுவாக கையறுநிலை [ bereavement] தனிமையை ஏற்படுத்துவதுடன், கூடவே சமூகத்துடனான பரஸ்பரத்தையும் [social interactions] இழக்க வழி கோலுகிறது. மேலும்  இன்று வாகனத்தை பாது காப்பாக ஓட்டும் ஆற்றல் [safe driving expectancy] இருபாலாருக்கும் 70  வயதை தாண்டினாலும், இன்னும் பல முதியோர் தமக்கு போக்கு வரத்து வசதிகள் பற்றாது என உணர்கிறார்கள். ஆகவே இதுவும் தனிமையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது.
 
10.முதியோரை பராமரிக்கும் குடும்ப உறுப்பினர் [family caregiver] கூட சமூகத்தில் இருந்து தம்மை தனிமைப்படுத்தும் ஒரு ஆபத்தை பொதுவாக எதிர் பார்க்கிறார்கள். குடுப்ப உறுப்பினராக இருந்து, பெற்றோரை, கணவனை அல்லது மனைவியை, அல்லது இன்னும் ஒரு குடும்ப உறுப்பினரை பராமரிப்பது ஒரு மகத்தான பொறுப்பு ஆகும். உதாரணமாக, அந்த உறுப்பினர் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோயில் [Alzheimer’s disease], அல்லது மனச் சோர்வினால் ஏற்படும் பைத்தியமான டிமென்ஷியா நோயில் [dementia], அல்லது ஒரு உடல் வலுக்குறைவில் [a physical impairment] இருந்தால், அது பராமரிப்பவருக்கு பெரும் பொறுப்பாக அமைகிறது. இதனால், அந்த குடும்ப பராமரிப்பவர் தனது சமூக தொடர்புகளை குறைக்க வேண்டி அல்லது புறம் தள்ள வேண்டி இருக்கலாம். இது அவர்கள் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்து கிறது.
 
11.தனிமை தொற்றும் [contagious] தன்மையுடையது. அதாவது ஒருவர் தனிமையில் இருக்கும் பொழுது ,அந்த தனிமை அநேகமாக அவரின் நண்பருக்கோ அல்லது அவர் தொடர்பு கொள்ளும் ஒருவருக்கோ பரவக் கூடிய சந்தர்ப்பம் உண்டு, இதனால் தங்கள் சமூக பிணையலை [social cohesion] பாது காக்கும் பொருட்டு, மக்கள் அவர்களிடம் இருந்து தம்மை மேலும் தனிமைப்படுத்த பார்க்கிறார்கள். இது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அது மட்டும் அல்ல தனிமையான மக்கள் ஆரோக்கியமற்ற நடத்தைகளில் [unhealthy behavior] தம்மை பொதுவாக ஈடுபடுத்து கிறார்கள். உதாரணமாக, ஆரோக்கியமற்ற உணவு, குறைந்த உடற்பயிற்சி [lack of physical activity], புகை பிடித்தல் [smoking] போன்றவையாகும். எனவே ஒரு சமூக சூழலில் வாழ்வதே இவையே தடுக்கும் ஒரு வழியாகும். மேலும் அவர்கள் தொண்டூழியராக [ Volunteering] தொழிற்படுவதன் மூலம் தனிமையையும் தனிமை படுத்தலையும் குறைக்க முடியும் .முதியோர்கள் தமது அனுபவங்களை அறிவாற்றல்களை பயன் படுத்தி தமது சமூகத்திற்கு பங்களிக்க முடியும். இது அவர்களின் வாழ் நாளை கூட்டுவதுடன் [boost longevity] மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கும் [mental health and well-being] பங்களி க்கிறது. நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள் என்றால், கட்டாயம் சுகாதார தொடர்பான பாடங்கள், கணனி சம்பந்தமான பாடங்கள், அல்லது உடற்பயிற்சி சம்பந்தமான பாடங்கள் போன்றவற்றில் பங்கு பெறுவது நன்மை பயர்க்கலாம்?
 
12. தொழில் நுட்பம் [Technology] ஓரளவு தனிமையை குறைக்கலாம் என நாம் எதிர் பார்க்கலாம்.உதாரணமாக, காது கேட்க்கும் தன்மையை இழந்தவர்களுக்கு  காதொலிக்கருவி [hearing aid ] ஒன்று கொடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதன் மூலம் அவர்களின் தனிமையை குறைக்கலாம். அதே போல உடல் பயிற்சிகள் [Physical activity] தனிமையை குறைக்கின்றன.உதாரணமாக,கூட்டு உடற் பயிற்சி [Group exercise programs] இதில் முக்கியமான ஒன்றாகும். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாத ஒன்றாயினும் அதை பற்றிய விபரங்களை, உண்மைகளை அறிவதன் மூலம் நாம் அதை தடுக்க அல்லது குறைக்க முடியும்.
 
பொதுவாக நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக பல மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இது கிராமப் பகுதியில் குறைவு. வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் நிலையில் யார் யார் என்று பொதுவாக பார்த்தால், குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், தனிமையை எதிர்கொள்ளவேண்டியநிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனைக்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என நாம் வகைப் படுத்தலாம். இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் கிராமப்புறப் பகுதிகளைவிட பொதுவாக,மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தியாகப் படிக்கும்போதே நமக்கு வலிக்கிறது என்றால், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? குறிப்பாக ஒரு வெளி நாட்டிற்கு குடிவரவாளர்களாக தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் அந்த நாட்டின் வாழ்வுச் சூழலுக்குள் பொருத்திக்கொள்வதற்கு எதிர்கொள்ளும்தடைகள் ஒரு புறம் இருக்க, புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்தவர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளைகளை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளைகளால் தனித்துவிடப்படும்போது மிகப்பெரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.  ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. எனவே முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டியடிக்கும் வகையில் முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொடுப்பது, ஃபேஸ்புக்கை [Facebook] இயக்கச் சொல்லிக்கொடுப்பது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் முதியவர்களை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன்.
 
இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை,பல்கலைக் கழகம், இடையில் கொண்டாட்டங்கள், விடுமுறைகள்... கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர்.ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால்   இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையருக்கு ஒரு பாது காப்பாக முதியோர் இல்லம் சேர்ப்பவர்கள் இன்று பலர். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்...  ஒருக்கா எம்மை நினைக்க... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அது தவிக்கிறது. மேலும்  வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோர்களை தனிமை வாட்டுகிறது. மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்!   
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
 
முற்றிற்று

"முதுமையில் தனிமை" / பகுதி: 02

1 week 2 days ago

"முதுமையில் தனிமை" / பகுதி: 02

 

முதுமையில் தனிமைக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் நேரத்துடன் ஓரளவு விபரமாக நாம் அறிவதன் மூலம் அதை இலகுவாக தடுக்கலாம். மனிதர்களுக்கு வயது போகப் போக, தனிமையில் வசிக்கும் நிலையின் வாய்ப்பும் அதிகமாக அதிகரித்து செல்கிறது. தனிமையில் வாழ்வது, அவர் சமூகத்தில் இருந்து தனிமை படுத்தப் பட்டார் என்பதை குறிக்காது எனினும், கட்டாயம் ஒரு நோய் தாக்க நிலைக்கு அடிகோலக் கூடிய காரணிகளில் ஒன்றாகும். மற்றது எவ்வளவு அடிக்கடி முதியோர்கள் சமூக நடவடிக்கைகளில் ஈடு படுகிறார்கள் என்பதும் ஆகும். பொதுவாக, வயது போகப் போக  சமூக தொடர்புகள் குறைய தொடங்கு கின்றன. உதாரணமாக வேலையில் இருந்து ஓய்வு பெறுதல், நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இறப்பை தழுவுதல், அல்லது அவரால் தன் பாட்டில் அசைதல் முடியாமை [lack of mobility] போன்றவையாகும். தனிமைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க, அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானதும் ஆகும். இந்த முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்து விடுவதில்லை. எனவே முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொண்டால் அதை அவரால் தன்பாட்டில் தவிர்க்கவும் முடியும்.
 
பொதுவாக,ஒருவர் முதுமை நிலையை அடையும் பொழுது, அவரின்  உடலின் செயல்பாடு குறையத் தொடங்கு கின்றன. உதாரணமாக, திசுச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, நரம்பு மண்டலத் தளர்ச்சி, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடல் தொழிற்பாடும் நலமும் குன்றுகின்றன. மேலும் உடல் பல்வேறு நோய்களுக்கும் இலகுவாக  உட்படு கின்றது. இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுத்லின் காரணமாகவே ஏற்படுகிறது எனலாம். இன்று ஒருவரின் ஆயுள் எதிர்பார்ப்பு  உலக அளவில் 71.5 ஆண்டுகளை (68 ஆண்டுகள் 4 மாதம் ஆண்களுக்கும் 72 ஆண்டுகள் 8 மாதம் பெண்களுக்கும்) தாண்டியுள்ளது என கணிக்கப் பட்டுள்ளது. என்றாலும் இது நாட்டுக்கு நாடு அங்கு நிகழும் சூழலைப் பொறுத்து வேறுபடுகிறது. உதாரணமாக,ஒட்டு மொத்தம் ஆயுள் எதிர்பார்ப்பு ஜப்பானில்  82 .6 ஐயும் , ஸ்விட்சர்லாந்து 81 .7 ஐயும் , ஆஸ்திரேலியா  81 .2 ஐயும்,கனடா 80 .7 ஐயும், சிங்கப்பூர் 80 .0 ஐயும் ,  ஐக்கிய இராச்சியம் 79 .4 ஐயும், ஐக்கிய அமெரிக்கா 78 .2 ஐயும் , அப்படியே மலேசியா 74 .2 ஐயும் ,இலங்கை 72 .4 ஐயும் , இந்தியா 64 .7 ஐயும் தாண்டி யுள்ளது.
 
பொதுவாக இவர்கள் இரண்டு விதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். முதலாவது, அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதலும் அதன் காரணமாக,வெளியில் தனிமையில் போக முடியாததால், ஓர் இடத்தில் முடங்கிப் போதல், அதனால் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு குறைந்து போதல் போன்றவையாகும். மற்றது மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கப்படுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுதுபோக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை [ஆர்வ மின்மை] போன்றவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும். இவர்களது மிக முக்கிய தேவை என்பது அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவையாகும். ஆனால், அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் மிகக் மிக்க கொடுமையானது அவர்கள் அனுபவிக்கும் முதுமையில் தனிமைதான். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர் முதுமையில் தனிமையில் பேச்சு துணை இன்றி சிலவேளை இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது சிலவேளை இருப்பது, தனது சுகதுக்கங்களை மனம் விட்டு பேச முடியாது சிலவேளை இருப்பது, போன்ற நிலைமைகள், அவர்களை கட்டாயம் துன்பப் படுத்தும். மேலும் இவர்கள் தங்கள் பிரச்சினைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாத போது, அவற்றுக்குத் தீர்வு என எதுவும் அவர்கள் கண்ணில் படுவதும் இல்லை. நாளை நமக்கு முதுமை வரும் போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே  இன்று நம் முன் நடமாடும் தாய் தந்தையரை, மற்றும் முதியோரை, நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை,நாம் அனைவரும் எமது மனதில் ஏற்றுக் கொண்டாலே இதற்கு விடை இலகுவாகி விடுகிறது எனலாம். இனி முக்கிய சில தகவல்களை கீழே தருகிறேன்.
 
1. முதுமையில் தனிமை இறப்பு சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது.உதாரணமாக, முதிர்ந்தோரில், 52 அல்லது அதற்கு மேற்பட்டோரில், சமூகத்தில் இருந்து தனிமையாதலும் மற்றும் தனிமையில் இருப்பதும் [social isolation and loneliness] இறப்பு சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.பொதுவாக, ஒரு மனிதன் தனித்தோ அல்லது எந்த வித சமுக தொடர்பு இன்றியோ இருப்பது, அதனால் ஒன்றி இருக்கும் பொழுது, அவர்களின் நம்பிக்கை உடையவர்களால் ஏற்படும் உடனடியான மருத்துவ கவனிப்பு அற்றுப் போகிறது. இது கடுமையான தீவிர நோய் அறிகுறிகள் ஏற்பட வழி வகுக்கலாம். எனவே, தனிமையை குறைப்பதே இறப்பின் வீதத்தை குறைக்கும் முதல் காரணியாக நாம் கொள்ளலாம்.
 
2. தனிமையை ஒருவர் உணரத் தொடங்குவது, அவரின் உடல் ,மன ஆரோக்கியத்தை [physical and mental health] கட்டாயம் பாதிக்கும். அதிலும், முக்கியமாக, முதுமையில் தனிமை மிகவும் பொல்லாதது. இங்கு தனிமை என்பது எதோ தனித்து கண் காணாத இடத்தில், யாவரும் இன்றி, தனி மனிதனாக வாழ்வது அல்ல. தனிமை எல்லா நிலையிலும் உண்டு. உதாரணமாக, குடும்பத்தினரோடு, ஆனால், பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்களும் தனிமையில் இருப்பவர்களே! அனுபவம், அறிவு எல்லாம் மிகுந்த முதுமை பொதுவாக இனிமையாக இருக்கலாம் என ஒருவர் எண்ணலாம். ஆனால் உண்மை அப்படி அல்ல. நோய்நொடிகள், தனிமை என்று முதுமையை வாட்டும் பிரச்சினைகள் பல இன்று உண்டு. இதிலிருந்து தப்பிக்க வழிகளும் சில இருக்கின்றன. இளமையாக இருக்கும்போதே நமக்கும் முதுமை உண்டு என்பதை உணர வேண்டும். அந்த உண்மை புரிந்தாலே முதுமை இனிமை ஆகிவிடும். ஆகவே நாம் தான் நம்மை தயார் படுத்த வேண்டும். உதாரணமாக, முதியோர் நிலையம் [senior centers], அப்படியான தனிமை உணர்வுகளை தோற்கடிக்க வைக்கும் ஒரு வழியாகும்.
 
3.ஒருவர் தனிமையை உணரும் பொழுது அல்லது தனிமையை அனுபவிக்கும் பொழுது,அவரின் அறிவாற்றலில் வீழ்ச்சி [cognitive decline] ஏற்பட்டு , டிமென்ஷியா [dementia] என்ற மனத்தளர்ச்சியினால் ஏற்படும் மறதிநோய், புத்திமாறாட்டம், போன்ற ஆபத்துக்கள் நிறைய உண்டு. இவை ஆய்வு மூலம் நிருவப் பட்டுள்ளன [feelings of loneliness are linked to poor cognitive performance and quicker cognitive decline.]. வயதான பிறகு மனது பந்த பாசங்களை எதிர்பார்க்கும். இருந்தாலும் அவர்களோடு அதிக எதிர் பார்ப்புகளை வைத்திருக்காமல், எம்மை நாம் தயார் படுத்தினால் முதுமையை ஓரளவாவது இனிமை ஆக்கலாம். உதாரணமாக,டாக்டர் கசியப்போ [Dr. Cacioppo] ,நாம் ஒரு சமூக இனங்களாக [social species] பரிணாமம் அடைந்து உள்ளோம் என்கிறார்.எனவே எங்கள் மூலையில் அப்படியான எண்ணம் இறுக்கமாக படிந்துள்ளது. எனவே அவை நிறைவேறாத வேளையில், அது உடல் மற்றும் நரம்பியல் [physical and neurological] தாக்கங்களை உண்டாக்கலாம்.
 
4.முதியோர்கள் முறை கேடுகளால் அல்லது முதியோர் வன்கொடுமைகளால் மிகவும் பாதிக்கப் படுவதற்கு [vulnerable to elder abuse],  சமூக தனிமை [Social isolation] இலகுவாக வழிவகுக்கிறது, பல ஆய்வுகள் இதை ஆதரிக்கின்றன. மேலும் இதை கருத்தில் கொண்டு,ஜூன் 15-ல் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாள் உலகம் எங்கும் அனுசரிக்கப்படுகிறது. 2050-ல் ஒட்டுமொத்த இளைஞர்களின் எண்ணிக்கையை விடவும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு. ஏற்கெனவே உலக அளவில் வாழும் பெருவாரியான முதியோர் உடல் மற்றும் மனரீதியிலான வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதையும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. இதனை முன்னிறுத்தி முதியோர் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் அவதானிக்கத் தொடங்கியது உலக சுகாதார அமைப்பு. அதன் விளைவாக முதியோர், முதியோரைப் பராமரிப்பவர்கள் மற்றும் அரசாங்கம் ஒன்றுகூடி முதியோருக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாளை ஐ.நா. சபை 2006-ல் அறிவித்தது என்பது குறிப்பிடத் தக்கது. 
 
5. நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்ற ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோர் பெரும் பாலும்  சமூகமாக தனிமைப்படுத்தப்படலாம் [likely to be socially isolated]. இவர்கள் மற்ற முதியோர்களை விட குறைந்தது இரண்டு மடங்கு தனிமையில் வாழ நேரிடலாம். இவர்கள் அதிகமாக ஒற்றையாக [single] ஆக வாழ்வதுடன் மேலும் அதிகமாக தமக்கென பிள்ளைகள் அற்றவர்களாகவும் இருப்பார்கள். அது மட்டும் அல்ல அவர்களின் இரத்த உறவினர்களிடம் [biological families] இருந்து அநேகமாக பிரிந்து வாழ் பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை ஆதரிப்பதற்கு பொதுவாக அவர்களளைப் பற்றிய களங்கம் மற்றும் பாகுபாடு [Stigma and discrimination] ஒரு தடையாக உள்ளது.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 03 தொடரும். 
 
 

"முதுமையில் தனிமை" / பகுதி: 01

1 week 2 days ago

"முதுமையில் தனிமை" / பகுதி: 01

உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்பு கின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ?மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும்  நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட  அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம். 
 
அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் சுதந்திரம், ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய  கால கட்டத்தில் ,சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்து உள்ளதுடன், சராசரி ஆயுள் காலம் 75 -ஐ தாண்டுகிறது. என்றாலும் அவர்கள் மகிழ்வாக வாழ்கிறார்களா என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது? 
 
பிசிராந்தையர் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புறநானூறு பாடல் 191 ஞாபகம் வருகிறது:
 
‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
 
“உங்களுக்குச் சென்ற ஆண்டுகள் பலவாக இருக்கவும், உங்களுக்கு நரையில்லையே அது எப்படி என நீங்கள் கேட்பீராயின் கூறுவேன்: "வீட்டில் மனைவி நல்லவள்; மக்கள் அறிவு நிரம்பியவர். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது போல் ஏவலர் குறிப்பறிந்து நடப்பவர். எனவே வீட்டில் சிக்கல் 
இல்லை. அக அமைதி கூடிற்று. புறத்தேயும் அரசன் நல்லவன்,என் நாட்டு அரசனும் நீதி அல்லாதவற்றைச் செய்யாமல் காவல் காப்பவன்.ஊரார் சான்றோர். புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான் அந்த புலவன். ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. ஆண்- பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பதும்,மற்றும்  நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்று பொதுவாக மூன்று விதமாக இந்த முதியோர்கள் வாழ்கிறார்கள். உதாரணமாக, சிலர் பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிக்கிறார்கள், சிலர் கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிக்கிறார்கள், மற்றும் சிலர் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவராக தனியாக வசிக்கிறார்கள். இங்கு ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்க தொடங்குவதும் அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை /சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை! 
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம்.அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா?
 
"இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
 செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
 தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து
 தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
 மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
 உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
 நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக்
 கரையவர் மருளத் திரையகம் பிதிர
 நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
 குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
 அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ
 தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
 இருமிடை மிடைந்த சிலசொல்
 பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே"   
 
இங்கே முதல் பதினொரு அடிகளில்  தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்விட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில்...  "பூண் சூட்டிய நுனியையுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும் , முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். அது மட்டும் அல்ல, நற்றிணை 10  இல் ,காதல் என்பது உடற்காமம் அன்று அதனையும் கடந்து மனதளவில் உயர்ந்து நிற்பதாகும். எனவே,  உடல் அழகு நீங்கி நரையோடு முதுமை வந்தபோதும் அவளைப் போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்கிறது.இது இரு சாராருக்கும் பொருந்தும்.
 
 "பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
  நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
  நீத்த லோம்புமதி பூக்கே ழூர"  
 
மேலும்  உடம்பின் வெவ்வேறு மாற்ற நிலையை குண்டலகேசிப் பாடல் ஒன்று இப்படி எடுத்து உரைக்கிறது;
 
"பாளையாம் தன்மை செத்தும்
 பாலனாம் தன்மை செத்தும்
 காளையாம் தன்மை செத்தும்
 காமுறும் இளமை செத்தும்
 மீளும் இவ் வியல்பும் இன்னே
 மேல்வரும் மூப்பும் ஆகி
 நாளுநாள் சாகின் றோமால்
 நமக்குநாம் அழாதது என்னோ?"
 
அதாவது,பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. பின் குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் பிறக்கிறது. அந்த காளைப் பருவம் செத்து, காதலுக்கு உரிய இளமைப் பருவம் ஏற்படுகிறது. அதுவும் பின் மாறி முதுமை உண்டாகிறது என்கிறது. ஆனால்,பொதுவாக  இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது. முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் "முதுமையில் தனிமை"  மிகவும் கொடியது. அது மட்டும் அல்ல,
முதுமையை இன்னொரு குழந்தைப் பருவம் எனலாம். குழந்தைகள் எப்படித் தங்கள் மீது கவனமும் அன்பும் செலுத்தப்பட வேண்டும் என்ற விரும்புவார்களோ, அதே போல முதியவர்களும் விரும்புவார்கள். இதை நாம் அறிய வேண்டும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 02 தொடரும். 
 
 

 

விவாகரத்து – கையாள்வது எப்படி? மறுமணம் சரியானதா?

1 week 3 days ago
விவாகரத்து – கையாள்வது எப்படி? மறுமணம் சரியானதா?
KaviApr 06, 2024 09:36AM
How to deal with divorce?

சத்குரு

விவாகரத்து மோசமான ஒரு விஷயமா? விவாகரத்தை எப்படி கண்ணியமாக கடந்து செல்வது? விவாகரத்துக்குப் பின்பு, மறுமணம் செய்துகொள்வது சரியா? மறுமணத்தினால் குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? இத்தனை கேள்விகளுடன், இந்தப் பதிவில், விவாகரத்தின் எல்லாக் கோணங்களையும் உள்ளடக்கியுள்ள சுவாரஸ்யமான மேலும் பல அம்சங்களுக்கு சத்குரு பதில் தருகிறார்.

விவாகரத்துக்கான காரணங்கள்

கேள்வியாளர் : திருமணம், சோர்வை ஏற்படுத்தும் ஒரு யுத்தகளமாகும் போது, விவாகரத்து செய்துகொள்வது மேலானதுதானே?

பதில்

நம்மால் மற்றொரு நபருடன் சண்டையிடாமல் வாழமுடிந்தால், அப்போது விவாகரத்து என்ற கேள்வியே எழாது. நீங்கள் வீதியில் செல்லும் யாரோ ஒருவருடன் சண்டையிடவில்லை, ஒரு காலத்தில் அற்புதமானவர் என்று யாரை நீங்கள் நினைத்தீர்களோ அவருடன் சண்டையிடுகிறீர்கள். இந்த சண்டையானது, அந்த நபர் திடீரென்று அசிங்கமானவர் ஆகிவிட்டார் என்ற காரணத்தினால் அல்ல. இந்த சண்டை ஏன் எழுந்துள்ளது என்றால், நாம் வளர்ந்து வரும் நிலையில், நமக்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், அதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

Screenshot-2024-04-06-093410.jpg

இரண்டு நபர்கள், இரண்டு திசைகளில் வளர்வது சரியானதுதான். இணைந்திருப்பதற்கு ஒரே விதமாக நாம் இருக்கவேண்டியது இல்லை. இருவரும் ஒரே விஷயங்களை விரும்பவேண்டும், ஒரே விஷயங்களைச் செய்யவேண்டும் அல்லது ஒரே விதமாக உணரவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் வெவ்வேறு வழிகளில் வித்தியாசமாக இருந்துகொண்டும், இணைந்து வாழமுடியும்.

உங்களுடன் இணைந்திருப்பதற்கு, மற்றவரும் உங்களைப் போலவே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் ஒருவிதமான முதிர்ச்சியின்மை இருக்கிறது. உலகில் எங்குமே, இரண்டு தனிமனிதர்கள் அச்சு அசலாக ஒரே விதமாக இல்லை. இரண்டு தனிமனிதர்களுக்கு இடையில், வாழ்வின் சில அம்சங்களில் சில வித்தியாசங்கள் இருக்கும்.

ராபர்ட் ஒவன் என்ற அமெரிக்க நூலாசிரியர் கூறினார்,” உலகத்தில் இருக்கும் அனைவரும் வினோதமானவர்களாகவே இருக்கின்றனர், என்னையும் உங்களையும் தவிர. ஆனால் நீங்களும்கூட சிறிது வினோதமானவர்தான்” தயவுசெய்து உங்கள் மனதை உற்றுப்பாருங்கள். உங்கள் காரண அறிவின் பாதையில் நீங்கள் சென்றால், உலகத்தில் ஒருவரும் சரியானவர் இல்லை. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் அன்பான நபரை சற்று நெருங்கிச் சென்று, அந்த நபருடன் உங்களுக்கு எத்தனை அடுக்குகள் எதிர்ப்பு இருக்கிறது என்று சோதனை செய்து பாருங்களேன்.

Screenshot-2024-04-06-093453.jpg

வீதியில் செல்லும் மனிதரை மறந்துவிடுங்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெருங்கிய நபரிடம்கூட உங்களுக்கு பல அடுக்குகளில் எதிர்ப்பு இருக்கிறதல்லவா? ஆகவே, அதன் பொருள் என்னவென்றால், உலகில் ஒருவரும் உங்களுக்கு சரியானவர் இல்லை. ஒருவரும் சரியில்லை என்றால், இதில் சரி அல்லது சரியில்லை என்பதெல்லாம் கிடையாது. அது என்னவென்றால் நீங்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே அதை நோக்கி நீங்கள் முதல் அடியை எடுத்துவைத்துள்ளது போல் தோன்றுகிறது. அந்த நோக்கில் நீங்கள் மேலும் முன்னேறினால், அது மேலும் பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும்.

இரண்டு வெவ்வேறு நபர்கள், இரண்டு வித்தியாசமான புரிதல்களுடன் செயல்படுவதில் தொந்தரவு எதுவும் இல்லை. அடிநாதமான காதல் உணர்ச்சிதான் இருவரையும் இணைத்து வைத்திருக்கிறது. எல்லாவற்றையும் விட, நீங்கள் இருவரும் பரஸ்பரம் மற்றவரின் நல்வாழ்வுக்கான தேடுதலில் இணைந்தீர்கள். நாம் இதைப் புரிந்துகொள்வோம்.

காதல் என்று இப்போது வழக்கத்தில் இருப்பதெல்லாம் பொதுவாகவே பரஸ்பர இலாப திட்டமாகத்தான் இருக்கிறது. உங்களுக்கென்று சில தேவைகள் உள்ளன, மற்றொரு நபருக்கும் சில தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இருவரும் இணைகின்றீர்கள். அந்தத் தேவைகள் உடலியல், உளவியல், உணர்ச்சி, சமூகம் அல்லது பொருளாதாரம் என்று பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடும். உங்களது ஏதோ ஒரு தேவை சரிவர நிறைவேறாமல் போகும் அந்தக் கணமே, அது முடிந்துவிடுகிறது.

அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். உறவு நிலையில் அங்கே வேறெதுவும் இருப்பதில்லை. இன்னொரு நபரிடமிருந்து நீங்கள் மிகச் சிறந்ததைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், மற்றொரு நபரும் உங்களிடமிருந்து மிகச் சிறந்ததைப் பிழிந்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார். இது ஒரு யுத்தம்தானே தவிர, காதல் உறவு அல்ல.

காதல் என்பது உங்களைப் பற்றியது

நீங்கள் எதனைக் காதல் என்று அழைக்கிறீர்களோ, அது யாரோ ஒருவரைப் பற்றிய விஷயம் அல்ல, அது உங்களைப் பற்றியது, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது. உங்கள் உடல் இனிமையாக இருந்தால், இதை நாம் ஆரோக்கியம் மற்றும் இன்பம் என்று அழைக்கிறோம். உங்கள் மனம் இனிமையாக இருந்தால், இதை நாம் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் என்கிறோம். உங்களுடைய உணர்ச்சிகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் அன்பு அல்லது நேசம் என்று அழைக்கிறோம். உங்கள் சக்தி நிலைகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் பரவசம் என்று அழைக்கிறோம்.

Screenshot-2024-04-06-093546.png

இவைகள் உங்களுக்குள் நீங்கள் எப்படி இருப்பது என்பதற்கான சில வழிகள். இதற்கு வேறு எவருடனும் எதுவும் செய்வதற்கில்லை, ஆனால் நீங்கள் இதை யாரோ ஒருவருடன் தொடர்புபடுத்துகிறீர்கள். யாரோ ஒருவர் உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமைப்படுத்த வேண்டும் என்று இருந்தால், நீண்ட காலத்திற்கு இது நிகழப்போவதில்லை. எந்த மனிதரும் அதை என்றென்றும் ஒரே நிலையில் தொடர்ந்து வைத்திருக்கமுடியாது. ஒருவேளை அவர்கள் உங்களைச் சந்தித்த புதிதில், மூன்று நாட்களுக்கு, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பதற்கு எல்லாவற்றையும் செய்வார்கள், ஆனால் அதையே ஒருவராலும் நீடித்திருக்கச் செய்யமுடியாது. அது எந்த மனிதருக்கும் சாத்தியமே இல்லை.

ஆகவே, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது உணர்ச்சிகள் இனிமையின் வழியில் இருந்தால், நீங்கள் உங்கள் இயல்பிலேயே அன்பாக இருப்பதுடன், வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், எல்லாம் சரியாக இருக்கிறது. அது இல்லையென்றால், ஒவ்வொரு சிறு வித்தியாசமும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உங்களுக்குள் ஒருவிதமான இனிமை இருக்கும்போதுதான், மற்றவர்கள் உங்களுடன் நெருக்கமான வட்டத்தில் இருக்கமுடியும்.

 

https://minnambalam.com/featured-article/how-to-deal-with-divorce-is-remarriage-right-by-sadhguru-article-in-tamil/

 

"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" பகுதி 02 / "Crimes against humanity" Part 02 / தமிழிலும் ஆங்கிலத்திலும் 

1 week 4 days ago

"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" பகுதி 02 


மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படு கொலைகள் எவை எவை என்று பார்க்கும் பொழுது, மாயன் நாகரிகமும் சிந்து வெளி நாகரிகமும் எம் கண் முன் வருகின்றன. கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு [Spanish] பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது .அத்துடன் நிறுத்தி விடவில்லை.


 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். 
அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. 


வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 


1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத் தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. 


யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழு ப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட்  மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது . 

இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்ய, அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த, ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்!


இச் சின்னஞ் சிறிய இலங்கை தீவு சில இனக் கலவரங்களைக் கண்டு மனித வளம், பொருளாதார வளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், இவற்றிற் கெல்லாம்  சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால் தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று இன்னும் அழைக்கப்படுகிறது. இது 37 / 38 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 24  தொடக்கம் ஜூலை 30, 1983 வரை அரங்கேறியது. இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர். நானும் என் குடும்பமும் உட்பட கப்பலில் யாழ் சென்றோம்.


இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள்  உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது . ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். 


வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக் கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற , மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும்  விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? .


இது போலவே இந்தியாவிற்குள் 1700 கி மு ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள், இங்கே வாழ்ந்த பழங்குடியினரை திட்டி, கேவலபடுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது  "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில்  22 ஆம் பக்கத்தில்  கூறுகிறார். மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள், அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன என Dr  ராதாகுமுத முகர்ஜி Phd " இந்து நாகரீகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு  மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலை கிழே தருகிறோம்.


"இந்திரா! ஆந்தையைப் போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் [தமிழர்களை] கொல்லவும். நாயைப் போலும் கழுகைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்."
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 


மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார்.


ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான் , இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள் .அங்கு பரசுராமர் இல்லாததால் , அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர் . தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர் . அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை  வேரறுத்தார் என கூறுகிறது. இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும். 


என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.


ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது  ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாக எல்லோரும் அறிய விரும்புவது :


*உண்மையில் என்ன நடந்தது ?

*இது ஏன் நடந்தது ?

*இதற்கு யார்  பொறுப்பு ?

*இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக  பின் புறத்தில்  இருந்தவர்கள் ?

*நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ?

இதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும் ,தனது திருக்குறள் 548 இல்:

"எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்."  


என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார். 


இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான  ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !!


*"உண்மைகளை வெளிபடுத்துவது "

*"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை  அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது"

*"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது "


அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம் . அடுத்த பரம்பரைக்கும் இந்து சம வெளி  மற்றும் மாயன் ? போல் தொடராமல் இருக்க . அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும் . இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் .


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


"Crimes against humanity" Part 02  


When we think about Crimes against humanity or genocide, in our past or ancient history , Both Mayan civilization and Indus valley civilization comes into our minds. The Mayan Civilisation thrived during 3000 BC & It reached improbable heights between 300 AD to 700 AD. The Spanish conquered Yucatan (1526-46) of Mayans with their guns. 


If you want to destroy a racial group , destroy their language.
Similarly If you want to destroy the their language, destroy their books 
It is a indirect form of Genocide!! This is what Spanish done to mayans. This cruelty was done by Spanish Bishop  "Diego de Landa" , whose initial assignment was to convert the Mayas to Catholicism after the Spanish conquest. 


We too encountered such situation in the name of Jaffna public library on the night of May 31, 1981. Over 95,000 unique and irreplaceable Tamil palm leaves (ola), manuscripts, parchments, books, magazines and newspapers, housed within an impressive building inspired by ancient Dravidian architecture, went up in flames like Mayan literature! & were destroyed during the burning that continued unchecked for two nights. The library was one of the largest in Asia. This event was one of the worst book burning events in the 20th century!!


Again in 1983, the state- sponsored  mobs, in a frenzy, obviously under the influence of alcohol , killed about 3000 people  and property damages or loots worth over $300 million U.S. Tamils throughout the world, remember the victims of Black July ’83- 37 / 38 years ago, the state- sponsored pogrom against Tamils in Sri Lanka. The days between July 24 and July 30, 1983, were tragic, and unforgettable, for the Tamils. Even we were in Colombo at that time   and had seen all atrocities by our own eyes.
When you speak about Genocide, We immediately remember the names of Adolf Hitler & Benito Mussolini. Because they were directly killed over hundred thousands people. However history has many evidences who were more cruel than them. One of them was Spanish Bishop  "Diego de Landa".


On July 12, 1562, at the main square of the town of Maní, just outside the Franciscan church, Spanish Bishop  "Diego de Landa" burnt several thousand objects / about 5000 'idols ' worshiped by the Maya and 27 precious folding books in Maya writing to destroy the Mayan language and culture. This one act deprived future generations of a huge body of Mayan literature in various subjects such as: their history, beliefs, astronomy, science, mathematics , cultivation . Also  Many of the so-called idols were Maya sacred books. Only three survived the fires. Scholars consider the destruction of these sacred Maya texts among the most tragic losses of accumulated human knowledge in world history. This was done by a so called religious leaders !!


Similarly, Sometime around 1700 BC, ancient Indigenous people of India were attacked and destroyed by invading barbaric tribes- Aryans who were a tribe of Indo-European- speaking, horse- riding nomads. The Rig-Veda, which contains over 1,000 hymns directed to the gods includes praises, blessings, sacrifices, and Curse Against their Enemies, also talk about their conquest of great cities. One such example from Rig veda is given below:


"Destroy the fiend shaped like an owl or owlet, 
destroy him in the form of dog or cuckoo.
Destroy him shaped as eagle or as vulture as with a stone, 
O Indra, crush the demon." 
[The Rig Veda/Mandala 7/Hymn 104]


Let us consider Mahabharata or Vishnu purana as one more last example. Here We find Parasurama also known as the "axe-wielding Rama who is considered as the sixth incarnation of Lord Vishnu & The son of the forest- dwelling sage Jamadagni. The word Parasu means 'axe' in Sanskrit and therefore the name Parasuram means 'Ram with Axe'.


One day when sage Jamadagni had away from home, King Kartaveeryarjuna came to the hermitage with his soldiers & and forcefully carried the special cow which served all the needs of the sage for his rituals. Soon Parasurama arrived, hearing what happened from his mother Renuka ,He rushed to Kartaviryarjuna and challenged him for a battle. Parasurama  killed him & brought back the special cow home. 

Kartaveeryarjuna's sons got angry & came to the hermitage . As Parasurama  was away, They took revenge for the killing of their father with the life of sage Jamadagni by chopping his head. Parasurama was deeply saddened to know about the killing of his father. He thought that the entire Kshatriya (royal or ruling class) community had become arrogant beyond limit. He took an oath that he would teach them a lesson. It is said that he went around and killed all the kings whom he could find. This he did to twenty one generations of kings. It is said that five rivers of blood started as a result from that place. He alone killed very much more people than combined total people killed by Mongolian king Genghis khan, Adolf Hitler, Joseph Stalin, Benito Amilcare  Andrea Mussolini & Mao Zedong 


However, even after killing of twenty one generations of kings, Kshatriya community again started to grow  with one king called mulakan of surya dynasty [Suryavam(n)sham or Solar Dynasty], who escaped from Parasurama as women hide him by surrounding him. He is 8th generation prior to Lord Rama of same Solar Dynasty.


As such We can see that A racial group whose have intelligent, valour & power can not be completely destroyed at all . It will always come up again .However It is definitely a set back in the progress of the said racial group Because of this only , 
every one want know:


*What did really happen?

*Why did this happen?. 

*Who were responsible?

*Who were supported/behind this atrocities /genocide

*Whom to blame/corporate accountability  for this human rights violations/International crime?


Because of these,Even Valluar who born 2000 years before said in his famous Thirukkural 548:


"A ruler inaccessible, un probing and unjust
Will sink and be ruined" 


The king or the ruler who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.


What they ask is very simple.


*"Bring the truth to all"

*"Punish all culprit who involved directly or indirectly"

*"Make this as an example for all" 

So that it would not continue/repeat further any more , any more generations such as Indus valley people, Mayans etc? It could also stop a serial killer like Parasurama from killing -generations by generations .Also we do not want to wait for another twenty one generations to welcome another Mulakan ,the Saviour !


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 
 

"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01 / "Crimes against humanity" / Part 01 / தமிழிலும் ஆங்கிலத்திலும்

1 week 4 days ago

"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01 


இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட ,முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் , பொதுவாக நடை பெறுகிறது.


ஆகவே  இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர்  குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு  எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன. இப்ப இனப்படு கொலை என்றால் என்ன என பார்ப்போம்.


இனப்படு கொலை என்பது ஒரு இனம் மற்ற இனத்தை ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என கொன்று குவிப்பதோ , அழிப்பதோ மட்டும் அல்ல . அதற்கு மேலாக ஒரு இனத்தின் அடையாளமான மொழி , பண்பாடு , பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தடுப்பதும் , இடையூறு விளைவிப்பதும் , அழிப்பதும் அத்துடன் அதன் வாழ்வை, வளர்ச்சியை, வளத்தை முடக்குவதும் ஒரு இனப்படு கொலையே!


"மனதில் உறுதி கொண்ட மக்களை
சினந்து குருதி கொள்ள நினைப்பதும்
ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும்
மானமாய் வாழ விடாது தடுப்பதும்
தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும்
வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும்
ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும்
இனப் படுகொலை! இனப்  படுகொலை!"


"விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை
படுகொலை  செய்து குழியில் புதைப்பதும்
நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும்
ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும்
வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும்
மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும்
கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும்
படுகொலை!அது  இனப்  படுகொலை!!"


"கலை வளர்க்க தடை போட்டு
அலை அலையாய் ஆமி போட்டு
விலை பேசி சிலரை வாங்கி
உலை வைக்கும் மந்தரை கெடுத்து
சிலை சிலையாய் மக்களை மாற்றி
இலை துளிராது  வேரையே வெட்டி
தலை நிமிரா நெருக்களை கொடுத்து
கொலை செய்வது  இனப்  படுகொலை!!!"


போர் குற்றங்கள், இனப்படுகொலைகள் , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவை உலக சமூகத்தில் மனித வரலாறு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றாலும் அத்தகைய குற்றங்களைத் தண்டிப்பது அல்லது அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் வெளிவரத் தொடங்கின. இரண்டாவது உலகப் போரில் [1939–1945 ] ஜெர்மனியரும் ஜப்பானியரும் செய்த கொடுமைகள், குற்றங்கள் போன்றவை மக்கள் வெறுப்பை சம்பாத்தித்து அவைகளுக்கு எதிராக ஒரு பொது சீற்றம் அல்லது கொந்தளிப்பு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும். செப்டம்பர் 1, 1939-இல் துவங்கிய அந்த போர் 1945 ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முடிவடைந்த போது மொத்தம் ஐந்து முதல் ஏழு கோடி உயிர்களை பலி வாங்கி இருந்தது. இதில், இராணுவத்தோடு சம்பந்தப்பட்ட வர்கள் இரண்டிலிருந்து இரண்டரை கோடியாகவும் (இதில் போருக்கு பின் பிடிபட்டு தண்டிக்கப்பட்ட இராணுவ வீரர்களும் அடங்குவர்) அப்பாவி பொதுமக்கள் நான்கிலிருந்து ஐந்து கோடியாகவும் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டது. போருக்கு பின் போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வியாதியால் 1.3 கோடியிலிருந்து இரண்டு கோடிவரை மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இனச் சுத்திகரிப்பு என்ற பெயரில் ஜெர்மனி நடத்திய 'யூத' இனப்படு கொலைகள் மட்டும் அறுபது லட்சத்திற்கு மேல் ஆகும். இந்தப் போருக்கு காரணமான பெரும்பாலானோர்கள் போரின் முடிவுக்குள்ளாகவே கொல்லப்பட்டு விட்டார்கள். அடால்ஃப் இட்லர் (Adolf Hitler) தற்கொலை செய்துக்கொண்டான். இத்தாலிய நாட்டின் சர்வாதிகாரி பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (Benito Amilcare Andrea Mussolini) அவன் மக்களாலே கொல்லப்பட்டான். ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகிக்கு பிறகு சரணடைந்தது. போர் முடிந்து போயிற்று. இதை அடுத்து பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அக்டோபர் 18, 1945-இல் 'சர்வதேச இராணுவ தீர்ப்பாயம்' [INTERNATIONAL MILITARY TRIBUNAL]  தொடங்கப்பட்டது. 'அமைதிக்கு எதிரான செயல்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெற்றிருப்பது', 'அமைதியை குலைக்கும் செயல்களை வடிவமைத்தல், துவக்குதல் மற்றும் வழிநடத்தல்', 'போர் குற்றங்கள்' மற்றும் 'மனித குலத்திற்கு எதிரான குற்றம் செய்தல்' ஆகியவை குற்றச் சாட்டுகளாக அங்கு முன் வைக்கப்பட்டன. இன்று  உலக முழுவதும் இது உருவாக்கிய இரண்டு பெரிய குற்றங்களை பரவலாக தொடர்ந்து கடை பிடிக்கப் படுகின்றன. ஒன்று 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' மற்றொன்று 'இனப்படுகொலை' ஆகும். இவை இரண்டும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் சுதந்திரத்தோடு வாழமுடியும்.


போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும் என்பதை அதிகமாக எல்லா நாடு களும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளும். 


உதாரணமாக ,போர் கைதிகளை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல் அல்லது கொடுமைப் படுத்துதல்  ஒரு போர் குற்றம் ஆகும்.
அது போல, எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் [act of Perfidy] ஒரு போர் குற்றம் ஆகும். 


மேலும் ஒரு போர்க்கால சூழலில், சித்திரைவதை ,இனப்படு கொலை, பெரும் திரளான மக்களை தம் சொந்த இடங்களில் இருந்து துரத்தல், மற்றும் பல வழிகளில் அவர்களை துன்புறுத்துதல் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தல் ஒரு போர் குற்றம் ஆகும்.


எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் என்பதற்கு இன்றைய கால கட்டத்தில், மே மாதம் , 2009 ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற  "வெள்ளைக் கொடி சம்பவத்தை" ஒரு உதாரணமாக கூறலாம்.


அதே போல,பண்டைய காவியத்திலும் (இதிகாசம்) ஒரு சம்பவத்தை கூறலாம்.


உதாரணமாக, கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன. கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. 


உதாரணமாக, பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை வீழ்த்த, சிகண்டியை [துருபதனின் மகளான சிகண்டினி  என்ற  திருநங்கை] முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்புகளை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதே போல,துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன். அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார். அதனால், துரோணர் தனது மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர், தன் கையில் இருந்த போர்க்கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் தேரில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்து விட்டார். அப்பொழுது துரோணரின் தலையை  திருட்டத்துயும்னன் தன் வாளால் வெட்டினான். எங்கே கிருஷ்ணன்?, எங்கே தருமன்?, எங்கே தருமம்? 


அப்படியே, கர்ணனை பல சூழ்ச்சிகளால் கொன்றான் கிருஷ்ணன்! உதாரணமாக, எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், சேற்றில் மாட்டிக் கொண்ட  தன் தேர் சக்கரங்களை தூக்கி எடுக்க கர்ணன் முயற்சித்த போது, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது என்ற காரணத்தினால், கர்ணனை கொல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். அதன் படி தேர்ச்சக்கரம் தரையில் அழுந்தியதை, கர்ணன் மீண்டும் தூக்கி நிலைநிறுத்தும் நேரத்திற்குள், அருச்சுனன் கர்ணனின் மீது கனைகளை ஏவிக் கொன்றான்!! 

தன் இலக்குகளை அடைய ஒன்றுக்கு பல முறை, இப்படி கிருஷ்ணன் விதிமுறைகளை மீறியுள்ளார். மகா பாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக படித்தவர்களும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள். அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் கிருஷ்ணர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போது தான் வதைக்கப்பட்டனர். இவை எல்லாம் பகவத் கீதையில் தர்மத்தை பாதுகாப்பதற்காக தான் அவதாரம் செய்தான், அதை ஒரு புறத்தில் தள்ளி வைக்க அல்ல என்ற கிருஷ்ணனின் கூற்றிற்கு, இது முற்றிலும் வேறுபட்டே காணப்படுகிறது. அத்துடன் வஞ்சனை மூலம் வெற்றி கொள்ளுதல், மகாபாரதத்திற்கு முன்பே பிராமண புராணங்களில் காணலாம். இங்கு ஆண்டவன் அடிக்கடி ஏமாற்றும் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி அரக்கர்களுடன் அல்லது அசுரர்களுடன் போரிட்ட கதைகளை காணலாம்? 


மனிதாபிமானத்திற்கு  எதிரான அல்லது மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற பதம் முதல் முதலாக 1915  இல், பெரிய பிரித்தானியா [கிரேட் பிரிட்டன்], பிரான்ஸ் மற்றும் ரஷ்யா [Great Britain, France and Russia]  , துருக்கிய அரசாங்கம் [Turkish government] , ஆர்மேனியர்களுக்கு [Armenians] எதிராக செய்த படுகொலையை கண்டிக்கும் பொழுது பாவிக்கப் பட்டது. போர் குற்றம் மாதிரி அல்லாமல், இது சமாதான காலத்திலும் போர் காலத்திலும் செய்ய முடியும். இந்த பதம் 1915  இல் இருந்து பாவிக்கப் பட்டாலும், உண்மையில் இரண்டாவது உலகப் போருக்கு பின் 1945 இல் தான் முதலாவது வழக்கு இந்த குற்றச் சாட்டின் கீழ் நடை பெற்றது. 


திட்டமிட்ட ரீதியில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களைக் கொல்கின்ற செயலானது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை என்பது தனிப்பட்ட மக்களைக் கொல்வதோடு மட்டுமல்லாது, ஒரு சமுதாயத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப் படுவதாகும். வேறுவகையில் கூறினால், தனியொரு குழுவைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதையே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் குறிக்கின்றது. பொதுவாக இது, கொலை, முழுமையாக அழித்தொழித்தல், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்கு முறைகள் மற்றும் பிற மனிதம் அற்ற செயற்பாடுகள் போன்றவற்றை குறிக்கும். 


ஆகவே, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படு கொலை ஆகிய இரண்டும் வேறுபட்ட இரு வேறு எண்ணக் கருக்களாகும். அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றத்தில் [ European Colonization of the Americas] அழித்து ஒழிக்கப் பட்ட கணக்கில் அடங்கா பெரு வாரியான உள்ளூர் குடிகள், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெரும் இன அழிப்பு [Holocaust], 1932- 1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படு கொலை கோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்),  நைஜீரிய உள்நாட்டுப் போர் [Nigerian Civil War], மற்றும் கம்போடியா இனப்படுகொலை (Cambodia Genocide) ஆகியன மிகப் பெரிய முதல் ஐந்து மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என இன்று கருதப் படுபவை ஆகும். 

இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)]என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல் வடிவம் கொடுத்தவராவார். இனத்தை குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை குறிக்கும்  cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து இந்த சொல்லை உருவாக்கினார். ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும் 

அதாவது கிழே  தரப்பட்டவைகளை, முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு தேசிய,குடிமக்களை, இனத்தை, சாதியை அல்லது ஒரு மதம் சார்ந்த குழுவை அழிக்கும் நோக்குடன் ஈடுபடுதலை குறிக்கிறது . அதாவது ஒரு குழுவின் உறுப்பினர்களை

* கொல்லுதல் 

*உடலிற்கு அல்லது மனதிற்கு  கடும் தீங்கு ஏற்படுத்துதல் / விளைவித்தல்.

* வேண்டும் என்று பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு உடல் அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துதல் 

*அந்த குழுவிற்குள் இனப்பெருக்கத்தை அல்லது பிறப்புகளை தடுப்பதற்கான வழி முறைகளை சுமத்துதல் .

*அந்த குழுவின் சீரார்களை கட்டாயப் படுத்தி மற்ற குழுக்குள் மாற்றுதல் .


ஆகியவை இனப்படு கொலையாகும்! . இனப்படு கொலை என்ற சொல் 1944 ற்கு பின்பு வந்த படியால் அதற்கு முன் அப்படி ஒன்றும் நிகழவில்லை என்று பொருள் அல்ல . பல சாட்சிகள் எமது பண்டைய சரித்திரத்திலும் இதிகாசத்திலும் புராணத்திலும் மற்றைய சமய இலக்கியங்களிலும் காணப்படுகின்றது . ஆனால் இனப்படுகொலை என்ற சொல்லை நேரடியாக பாவிக்காமல். அவ்வளவுதான் !


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி 02  தொடரும்

"Crimes against humanity" / Part 01


Genocide is generally happened during the war between two races / groups or When the war like situation existed between them or When they had completely different / opposite political / cultural opinions / views / beliefs or When one race become too strong in respect of authority / army / population and there by suppressed the minorities & their rights or When due to some / many reasons one racial group hate the other or combined with  all. 


Hence when you think about genocide you also usually come across War crimes and Crimes against humanity. Let us now examine what is "Genocide" means.
It is interesting to note that , the term "Genocide" does not only mean of killing or destroying a racial group by another in thousands , ten thousands or hundred thousands etc, It also means of restricting or destroying the identity of another racial group such as language, culture and traditions as well as peaceful livings & propagation of their future generations 


"War crimes, Genocide and Crimes against humanity" have been a problem throughout human history, although prosecution of such crimes only really emerged in the 20th century, thanks to general public outrage about crimes committed by German and Japanese forces during the Second World War. Most governments agree that any action which violates international conventions and agreements about warfare is a war crime. 


For example, abuse of prisoners of war is outlawed by the Geneva Convention, and therefore considered a war crime. 


Perfidy, the act of wilfully deceiving the enemy, is also a war crime.


Crimes against humanity such as torture, genocide, mass deportation, and other acts of persecution are also considered war crimes when they occur during a period of war.


In the context of war, Perfidy, an act of deliberate betrayal, is a form of deception in which one side promises to act in good faith with the intention of breaking that promise once the enemy is exposed. Perfidy constitutes a breach of the laws of war and so is a war crime! and is specifically prohibited under the 1977 Protocol I Additional to the Geneva Conventions of 12 August 1949. For example: In Srilanka, on or about 18 May 2009, at the end of Sri Lanka’s civil war.


Even in epic, We find, Krishna regularly secures victory for the Pandavas side through purely devious means which stand in direct violation of dharma. Though Kunti advice to Krishna that : “Do whatever is good for them in whatever way you see fit, without hurting the Law (dharma) and without deception, enemy-tamer.”, instead of safeguarding the law, Krishna instructs the Pandavas to do precisely the opposite. “Casting aside virtue, ye sons of Pandu, adopt now some contrivance for gaining the victory.” This bold statement stands in sharp contrast to Krishna’s familiar statement in the Bhagavad Gita, where he asserts that he has been incarnated in order to safeguard dharma, not to cast it aside. How can a reader of the Mahabharata make sense of a God who encourages atrocious ethical misbehaviour among his followers? Some assumed that Krishna became a God at a relatively late stage in the development of the epic. When Arjuna had unlawfully cut off Bhurisravas’ arm, for instance, Bhurisravas rails against him, “Who indeed would commit such a crime who was not a friend of Krishna?” Here, Bhurisravas’ insight is unambiguous; as he understands it, deception and evil invariably characterize Krishna and afflict those associated with him. However, The mythology of trickery begins well before the time of the Mahabharata; in fact, as early as the Brahmanas, the gods employ deceptive manoeuvres quite often in their encounters with the demons.


The phrase ‘crimes against humanity’ was first employed internationally in a 1915 declaration by the governments of Great Britain, France and Russia which condemned the Turkish government for the alleged massacres of Armenians as “crimes against humanity and civilization for which all the members of the Turkish Government will be held responsible together with its agents implicated in the massacres”, Unlike war crimes, crimes against humanity can be committed during peace or war. Despite this early use of the term, the first prosecutions for crimes against humanity took place after the Second World War in 1945. 


Crimes against humanity is defined as various inhumane acts, i.e .,… " murder, extermination, torture, enslavement, persecution on political, racial, religious or ethnic grounds, institutionalized discrimination, arbitrary deportation or forcible transfer of population, arbitrary imprisonment, rape, enforced prostitution and other inhuman acts committed in a systematic manner or on a large scale and instigated or directed by a Government or by any organization or group." 


However , Crimes against humanity and genocide are two distinct concepts. The basic difference between crimes against humanity and genocide is as follows: Crimes against humanity focuses on the systematic, mass killing of large numbers of individuals. Genocide has a different focus. Genocide focuses not on the killing of individuals, but on the destruction of groups. 


The 5 Biggest Ever Crimes against Humanity are ; Cambodian Genocide: 2.5 million dead , Nigerian Civil War: 3 million dead ,Holodomor: 7.5 million dead ,Holocaust: 17 million dead and European Colonization of the Americas: Up to 100 million dead.
The term "genocide" did not exist before 1944. A Polish-Jewish lawyer named Raphael Lemkin (1900-1959) first proposed  the word "genocide" by combining geno-, from the Greek word for race or tribe, with -cide, from the Latin word for killing. Hence "genocide” is an International crime. Genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:


* Killing members of the group;

* Causing serious bodily or mental harm to members of the group;

* Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part; 

* Imposing measures intended to prevent births within the group; 

* Forcibly transferring children of the group to another group.

This does not mean that there were no genocide before 1944. There were so many evidences in our ancient history ,epics, puranas as well as other religious texts regarding commitment  of genocide, though the term genocide is not directly used.


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 


Part 02 will follow.

"உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?"

1 week 5 days ago

"உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?"


நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். 
ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும்  குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள்,  துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பயண சிநேகிதர்கள், விளையாட்டு குழு, .... என உறவு தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருடனும் நாம் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். சுருக்கமாக 'சொந்தங்கள் அல்லது குடும்ப உறவுகள்', 'நண்பர்கள்', 'பழக்கமானவர்கள்' [Family Relationships, friends, Acquaintances] என்று உறவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.

 
பொதுவாக  மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப் பின்னலே என்று கூறலாம். தன்னோடு உறவு, அயலாரோடு உறவு, உலகத்தோடு உறவு, ஏன் தன்னை படைத்தவர் கடவுள் என நம்பி, அந்த ஆண்டவனோடும் உறவு, மற்றும் தன்னை சுற்றி அமைந்து இருக்கும் இயற்கையோடும் உறவு - என்று உறவுகளின் தொகுப்பே இங்கு வாழ்க்கையாக விரிகிறது. அது மட்டும் அல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்“  என எல்லா உலக மக்களையும் தன் உறவினராக பேணியதை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலும்  காண்கிறோம். ஆணானாலும், பெண்ணானாலும் அவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பவை முக்கியமான அவசியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்து விட முடியாது. மனித வரலாறு அதைத்தான் எமக்கு காட்டுகிறது. திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் பாடிய 'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா' என்ற பாடலில் உறவை பற்றி மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு வரியில் 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு' என விபரிக்கிறார். அதாவது, ஊருண்டு – ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு, பேருண்டு – சாதிக்காரங்க உண்டு. அதாவது குறிப்பிட்ட பெயர்களை கொண்ட கூட்டம் உண்டு, உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும் உண்டு [Relatives by choice], சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம் உண்டு, உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம் உண்டு [Relatives by birth], பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா உண்டு என்கிறார்.


அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது என்றோ அல்லது ஒரு உள்ளுணர்வு என்றோ கூறலாம். இது  வெவ்வேறு சூழல்களில் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற் போல வெவ்வேறு சொற்கள், உதாரணமாக, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் .... பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக, அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்றோ அல்லது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம் என்பதால்,  அந்த புரிதல் தான் அன்பு என்றோ கூறலாம் என்றும் கருதுகிறேன்.  இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே அன்பும் ஆகும். 


பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றை சொல்லுவது வழக்கம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என்பன அன்பின் எதிரான பதம் ஆகும். என்றாலும் அன்பிற்கு நாம் நாளாந்த வாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை  ஒரு அளவிடக் கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "அன்பை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய அன்பு" (“make love“, “fallen in love“, “lots of love“) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளும் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia), காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) ஆகும். அதன் நீட்சியாக மேலும் இன்று இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் போன்றவை அன்பின் வகைகளாக கருதப் படுகிறது. சுருக்கமாக அன்பின் அனுபவத்தை 


1] இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றும், 

2] ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் அல்லது இணைப்பு என்றும், 

3] பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசை அனுபவம் அல்லது காமம் என்றும் வல்லுநர்கள் பிரிக்கின்றனர். 


பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் [சுயநலம்] அவசியமாகிறது. அது மாட்டு அல்ல, சுயநலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. ஏன் என்றால், சுயநலமாய் இருக்கக் கூடாது என்று இருப்பதுவே ஒரு சுயநலம் தான். ஒருவர், சில செயல்களை செய்யும் பொழுது, சுயநலம் இல்லாமல் தாம் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை தருவதால் தான் அப்படிச் செய்கிறார்கள். இதை எவரும் மறுக்க முடியாது. 


பெரியாரிடம் ஒரு முறை ஒருவர், பொது நலம் என்றால் என்ன என்று கேட்டார், அதற்கு பெரியார், இதோ மழை பெய்கிறதே, இது தான் பொது நலம் என்றார். அடுத்து அவர் சுயநலம் என்றால் என்ன என்று பெரியாரிடம் கேட்டார். அதற்க்கு அவர், இதோ எல்லோரும் குடையை பிடித்துக் கொண்டு நடக்கிறோமே, அது தான் சுயநலம் என்றார். அதாவது ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பதை சுயநலம் எனலாம். நம்மை உயிரோடு வைத்திருப்பதற்காக நாம் மூச்சு விடுவது கூட உண்மையில் ஒரு சுயநலம் தான். அப்படியே நாம் சிலவேளை முரண்பட்டு நிற்பதும் சுயநலம் தான். எனவே, சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும் போது, உறவுகளைப் பற்றிய சந்தேகங்களை ஆய முற்பட்டால், அன்புக்காக, ஆசைக்காக என்று உறவுகள் அமைவதும், உறவுகளை நாம் அமைத்துக் கொள்வதும் கட்டாயம் நம் அவசியத்திற்காக அல்லது எம் முக்கியத்திற்காக என தெரியவரும். உதாரணமாக காதலும் அப்படித்தான். அவளது அல்லது அவனது  நலனுக்காக நான் காதலிக்கிறேன் என்று எவரும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் அல்லது அவன் பின் அலைகிறேன் என்பதே அவரவர் சொல்லக்கூடிய உண்மை நிலையாகும்.


தமிழ் மூதாட்டி ஔவையார், தனது ஒரு பாடலில்,
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு"


என்கிறார். அதாவது, குளத்தில் நீர் நிறைந் திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மன மில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களே யானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ;நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உண்மையில் உறவினராவார் என்கிறார். 


இதை மெய்ப்பித்தல் போல, ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406), தனது ஆண்டிகான் [Antigone - 441 BC] நாடகத்தில், தன் சகோதரன் பொலினிக்ஸ் [Polynices] இற்க்காக அல்லது குடும்ப உறவுக்காக, சகோதரி ஆண்டிகான் அரசனையே எதிர்ப்பதை காண்கிறோம். தனது சகோதரனுக்கு, தனது குடும்ப உறவுக்கு, ஒரு மரியாதையான நல்லடக்கம் செய்ய தன்னையே தியாகம் செய்ய துணிகிறாள். 


"அவனை நானே அடக்கம் செய்வேன்
அந்த செயலில் நான் இறந்தாலும், அந்த இறப்பு ஒரு மகிமையாக இருக்கும்
அவனால் நேசித்த நான், நான் நேசித்த அவனுடன் [மரண படுக்கையில்] ஒன்றாக படுப்பேன்" 
(ஆண்டிகான் 85- 87)  


"I will bury him myself.
And even if I die in the act, that death will be a glory.
I will lie with the one I love and loved by him"
 (Antigone 85- 87).


உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ் விடத்தில் தோன்றுவது உடமை பூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல என்று எண்ணுகிறேன். ஏனென்றால், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த ஒருவரது உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குழந்தை குறித்தும் ஏற்படுகிறது எனலாம். இதே சுய-அன்பானது, தனது குழந்தை கட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவு கட்கும், சற்று தொலைவான குடும்ப உறவு கட்கும் நீட்டிக்கப் படுகிறது. இதைத் தான் நாம் பண்டைக் கிரேக்க ஆண்டிகான் நாடகத்திலும் பார்த்தோம். 


இறுதியாக இன்னும் ஒரு பண்டைய இதிகாசமான இராமாயணத்தை பார்ப்போம். இங்கு, கைகேயி பரதன் 14 வருடம் நாடாள வேண்டும் எனவும், அப்பொழுது ராமன் 14 வருடம் காட்டுக்கு போக வேண்டும் எனவும் வரம் கேட்க, தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதி என்று சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்புகிறான் என கதை தொடர்கிறது. ஆனால் லட்சுமணின் மனைவி ஊர்மிளாவை அவர்கள் கூட்டிப் போகவில்லை. ஊர்மிளா பதிவிரதை இல்லையா ?, ஏன் ராமன் ஊர்மிளாவையும் கூடிக் கொண்டு வா என்று லட்சுமணை கேட்கவில்லை, எங்கே போயிற்று நியாயம், எங்கே போயிற்று தம்பி  என்ற உறவில் அன்பு ? ஊர்மிளா வந்தால், இலட்சுமணன் அவன் கடமையை, அதாவது ராம-சீதாவை சரிவர கவனிக்கும் கடமையை அல்லது தேவையை முழுமையாக செய்ய முடியாது என நம்பியதாலோ ? உண்மையான அன்பு உறவு இருந்தால், தம்பியை தடுத்து இருப்பான், அல்லது தம்பியுடன், சீதை போல் ஊர்மிளாவையும் கூட்டிப் போய் இருக்கவேண்டும், ஆனால் அங்கு ஒரு தேவை தான் முக்கியமாக இருந்து இருக்கிறது, என்றாலும் அதை மறைக்க பல பல காரணங்கள் அங்கு பின்னிப் பிணையப் படுகிறது. 


நியாயம் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். மற்றது நேர்மையாக சிந்தித்தால், 


'உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா' 
என்பதற்கு உண்மையான நேரான பதிலை இங்கு நீங்கள் காணலாம் ? 


ஒரு கட்டத்தில், சீதை அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளா கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச் சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், பதிவிரதையான சீதையால் அதை மீற முடியுமா? பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப் பட்டதால் தானே ராமன் பேசாமல் இருந்து விட்டான். அதனால் தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென - சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். இது உறவின் உண்மை நிலையை எடுத்து காட்டவில்லையா ? 


இன்னும் ஒரு கட்டத்தில், மாறுவேடம் கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக் குளிக்க சொன்னதை கேட்டு ஊர்மிளா வெகுண் டெழுகிறாள்.  சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசி விடக் கூடாது என்று தான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான் என்று அவளை சமாதானப் படுத்த பலர் முயற்சிக்கையில், ஊர்மிளா ராமனிடம், இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள் எல்லோரும் நீ வனவாசம் போகக் கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவி மடுக்க வில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்கு தான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம் தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என  கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

வெளிநாட்டுக்காரன்..!!!

1 week 5 days ago
வெளிநாட்டுக்காரன்..!!!
இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு..
 
♦ஒரு கப் அரிசிக்கு 2கப் தண்ணீர்
ஊற்றவேண்டும் என்று படித்தது
இங்கேதான்.
♦நாம சாப்பிட்ட,குடிச்ச பாத்திரத்தை
நாம்தான் கழுவிவைக்கவேண்டும்
என படித்ததும்இங்கேதான்.
♦எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பு இல்லை,காரமில்லை
சுவையில்லை என குறை சொல்லகூடாது
என்றும் படித்ததும்இங்குதான்.
 
♦வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு
அலாரம் வைத்துஎழுந்திருக்கவும்,
உறங்கவும் படிச்சதுஇங்கேதான்.
 
சத்தம் இல்லாமல் கதவை மூடவும்
திறக்கவும் படித்தது இங்கேதான்.
♦தனது கனவு தேவதையாக தலையணையை
கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான்.
♦பொறுமை என்ற 3 எழுத்திற்குஅர்த்தம் என்ன
என்பதை படித்ததும் இங்கேதான்.
 
♦நூறு கிடைத்தாலும் 10ரூ கடன்வாங்கி
110ஆக நாட்டுக்கு அனுப்ப
படிச்சதும் இங்கேதான்.
 
மின்சாரத்தையும், தண்ணீரையும்
சோப்பையும்,பற்பசையையும்
சிக்கனமாக உயயோகிக்க படித்ததும் இங்கேதான்.
♦பள்ளிக்கூடத்தில் 10அல்லது 15வருடங்களில்
படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான்.
 
♦வாழ்க்கையில் இன்ப துன்பங்களை
தாங்கி வாழ பழகிபடிச்சதும் இங்கேதான்.
♦உலகத்தில் எங்கேயும் படிக்க
கிடைக்காத பொருளாதார
சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான்.
 
தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,
வெள்ளைபூண்டு,மஞ்சள்பொடி,மிளகாய் பொடி
மல்லி பொடி ஆகியவைகளை சூடாக்கிய
எண்ணெயில் போட்டுவதக்கி,
 
மீன் போட்டால் மீன்குழம்பும்
சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும்
மட்டன் போட்டால் மட்டன் குழம்பும்
மோர் ஊற்றினால் மோர் குழம்பும்
ஒன்றும் போடவில்லை என்றால்
அது தக்காளி குழம்பும் என்கிற
 
வெளிநாட்டு வித்தையை வேற
ஏதாவது யுனிவர்சிட்டியிலோ
அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ
படித்திருக்க முடியுமா??
வெளிநாட்டு வாழ்க்கை அது
ஒரு கதை,யாரும் சொல்லாத கதை.
சொல்ல மறந்த கதை..!!
 
வெளிநாடு வாழ் தமிழர்
பதிவிட்ட பதிவு இது..
படித்து,பிடித்து,பகிர்கிறேன்
உங்களிடம்..
 
 

"அனுராத புரத்தில் தமிழர்"

2 weeks 1 day ago

"அனுராத புரத்தில் தமிழர்"

கி மு மூன்றாம்  நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை  "திஸ " என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அவன் அவ் மதத்தில் கவரப் பட்டு, தனது மக்களுடன் மதம் மாறினான். அத்துடன் தனது பெயரையும்  "தேவ நம்பிய  திஸ " [King Devanampiya Tissa/307-267 BC ] என்று மாற்றினான். இவ் மன்னன் இறந்த சில ஆண்டுகளின் பின்பு, கி.மு 237 ஆம் ஆண்டு அளவில், சேன [ஈழசேனன் / சேனன்],குத்தக [நாககுத்தன் / குத்திகன்] [Sena and Guththika/ 237-215 BC] என்ற இரு தமிழ் மன்னர்கள் மொத்தம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் அனுராத புரத்தில் இருந்து ஆட்சி செய்தனர். இவ்விரு தமிழ் மன்னர்களின் பின் சில காலம் கழித்து, எல்லாளன் [Elara] என்ற தமிழ் மன்னன் கி மு 205–161  ஆண்டு அளவில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் துட்ட காமினி [Dutthagamani] யால் தோற்கடிக்கப் பட்டான். மீண்டும் கி மு 103 ஆண்டு அளவில், ஐந்து  தமிழ் மன்னர்களால் [அநுராதபுரத்தின் பஞ்ச பாண்டியர் என அழைக்கப்பட்ட புலஹத்தன், பாகியன், பணயமாறன், பிலயமாறன் மற்றும் தத்திகன் ஆகும்] கி மு 89 ஆண்டு வரை ஆளப்பட்டது. இப்படி தமிழ் மன்னர்களால் நீண்ட காலம் அனுராத புரம் ஆளப்பட்டதை பாளி நூலில் கூறப் பட்டுள்ளது.

மேலும்  சிங்கள மொழி எந்த ஒரு நாட்டிலும் முன்பு பேசப் படவில்லை. கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக  மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதி யீடாக ஹெள மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. அதன் பின் கி பி ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில், பிராகிருதம், பாளி, தமிழ் போன்ற மொழிகளையும் உள்வாங்கி சிங்கள மொழியாக முதல் முதல் வளர்ச்சி அடைய தொடங்கியது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை. ஆனால் கி மு 300 ஆண்டு அல்லது அதற்கு முன்பே தமிழ் ஓர் இலக்கிய மொழியாக, இன்று உள்ளது போலவே வளர்ச்சி பெற்றிருப்பதை காண்கிறோம். அதே போல, மகிந்தன் அல்லது மகிந்தரின் வருகைக்கு முன்பு [கி.மு.3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி] பௌத்த மதம் இலங்கையில் கட்டாயம் இருந்து இருக்காது. ஆகவே அதற்கு முன்பு இலங்கை மக்கள் என்ன மதத்தினராக இருந்தனர் என்பது அவர்களின் இன அடையாளத்தை ஓரளவு காட்டும். கி மு 247 இல் முடி சூடிய மன்னன் தேவ நம்பிய திஸவின் தந்தையின் பெயர் பாளி நூல்களில் மூதசிவன்  [மூத்தசிவன் / Mutasiva] எனக் குறிக்கப் பட்டுள்ளது. இவன் கி மு 367 தொடக்கம் கி மு 307 வரை அனுராத புர அரசனாக இருந்துள்ளான். மேலும் மகாசிவன் [Mahasiva] என்பவனும் கி மு 257-247 காலப் பகுதியில் அனுராதபுர அரசனாக இருந்துள்ளான். இங்கு சிவன் என்ற பெயர் வழக்கில் இருந்தமை அக் காலத்தில் சிவ வழிபாடு இருந்ததை உறுதிப் படுத்துகிறது. அதாவது சைவ சமயம் அனுராதபுரத்தில் இருந்தமை எமக்கு இதனால் தெரிய வருகிறது. சைவ மதம், தமிழ் பண்பாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை நிலவும் பாரம் பரியமாகும். இதற்கு மேலும் எடுத்துக் காட்டாக, வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயனின் [Walagamba ] ஆட்சியின் போது [கி மு 103 -கி மு 89], பிராமணர்களின் குடியிருப்புக்களையும் வேதம் ஓதும் மண்டபங்களையும் யாக சாலைகளையும் அவன் அமைத்தான் என மகாவம்சத்தில் இருந்து அறிய முடிகிறது. இதுவும் தமிழர்கள் அனுராத புரத்தில் அன்று வாழ்ந்ததை சுட்டிக் காட்டுகிறது.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது போல, மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலிலும் கி.மு. 109 தொடக்கம் கி.மு. 103 வரை இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனான  கல்லாட நாகன், மற்றும் சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன் போன்ற மன்னர்களையும் காண்கிறோம். நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். மற்ற பகுதிகளில் வாழும் நாகர்கள் போல் இவர்களும் பாம்பு வணக்கத்தையும் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு நாகம் என்று பொருள்படும் பெயரையும் வைத்துள்ளதாகவே தெரிகிறது. இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து ஆகும். இந்த நாகர்கள் [Naga people ], மற்றும் இயக்கர்கள் [ Yaksha ], வேடர்கள் [Veddas] ஆதிதிராவிட இனமக்கள் [Adi-Dravida people] என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.[.According to the mahavansa, yakkhas confined to the center of the Island and Naga dominated the northern and western parts in sixth century B.C.]. ராணி அனுலா [Queen Anula], சிவா 1 [Siva I]என்ற அரண்மனை இரவுக்காவலாளி [doorman], பின் வடுகன் [Vatuka] என்ற தமிழ்த் தச்சன், அதன் பின் நிலிய [Niliya] என்ற தமிழ்ப் பிராமணப் பூசாரியையும் திருமணம் செய்தார். இதனால் தமிழ் மன்னர்கள் அக் காலப்பகுதியில் அனுராத புரத்தில் ஆட்சி செய்தார்கள் எனவும் அறிய வருகிறது. அது மட்டும் அல்ல அக்காலத்தில் அரண்மனையில் தமிழர்கள் கடமை புரிந்ததும் தெரிய வருகிறது. இவை நடை பெற்ற காலம் கி மு 47 -42  ஆகும். அத்தோடு, அப் பிரதேசத்தில் பெருமளவு தமிழ் மக்களும் செல்வாக்குடன் வாழ்ந்து இருக்க வேண்டும். அல்லாவிடில் தமிழ் மன்னர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. மேலும் அங்கு பல சிற்றரசுகள் இருந்ததும் தெரிய வருகிறது. அவைகளில் கட்டாயம் சில தமிழ் அரசுகளும் இருந்து இருக்கலாம். மேலும் பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியதும் குறிப்பிடத் தக்கது [993–1077]. இவை எல்லாம் அநுராத புரத்தில் ஆதி காலம் தொடக்கம் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை காட்டுகிறது. அத்தோடு, கி பி 1658 இல் இருந்து ஆட்சி செய்த ஒல்லாந்தர் [Dutch] காலத்தில் நடை பெற்ற சம்பவம் அக் காலம் வரை தமிழர் அங்கு வாழ்ந்ததை மிகத் தெளிவாக வரலாற்று உண்மையை நிருவிப்பதாக உள்ளது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் வர்த்தகரான ரொபெர்ட்  நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயன் கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட்  நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்க வில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று. இதனை இவர் Historical Relation of Ceylon என்ற தனது நூலில் இப்படி எழுதி உள்ளான்-

 "To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV / page 322-323]

இவை எல்லாம் தமிழர்கள் பெருமளவு அனுராத புரத்தில் வாழந்ததையும், மற்றும் ஆட்சி செய்ததையும் எந்த வித ஐயத்திற்கும்  இடம் இன்றி எடுத்துக் காட்டு கின்றன. என்றாலும் இன்று நிலைமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது. இன ஒற்றுமையும் உருக் குலைந்து விட்டது. இவை வருத்தத்திற்கு உரியனவே! 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

அம்பானியின் வறுமை

3 weeks 5 days ago

'அம்பானியின் வறுமை' என்னும் தலைப்பில் 'அருஞ்சொல்' இதழில் அதன் ஆசிரியர் சமஸ் இன்று எழுதியிருக்கும் கட்டுரை இது. அம்பானிக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் கூட இது பொருத்தமே.

******************

அம்பானியின் வறுமை
சமஸ்
20 Mar 2024

ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு நீங்கள் இழந்ததாக நினைப்பது எதுவும் உண்டா? இப்படி யாராவது கேட்கும்போதெல்லாம் ஒரு விஷயம் தோன்றி மறையும். ஊர்ப் பக்கக் கல்யாணச் சாப்பாடு! 

எது நாம் வாழும் ஊரோ அதுவே நம் சொந்த ஊர் என்று எண்ணுபவன் நான். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்குச் செல்வது, ஊரில் திருவிழா என்றால் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்புவது, வீட்டில் ஏதும் விசேஷ நிகழ்வு என்றால் அதைப் பிறந்த ஊரில் திட்டமிடுவது… இதையெல்லாம் முற்றிலுமாக வெறுப்பவன். சென்னை நான் பிறந்த ஊரைக் காட்டிலும் எனக்கு எண்ணற்ற சந்தோஷங்களைக் கொடுத்திருக்கிறது. பதிலுக்கு நான் சென்னைக்கு அன்றாடம் செய்ய வேண்டியதும், இந்த ஊரோடு கரைந்துபோவதுமே கைம்மாறு.

அப்படி இருக்க ஏன் கல்யாணச் சாப்பாட்டை ஓர் இழப்பாக நான் கருத வேண்டும்? இங்கு எனக்குச் சொந்தங்கள் இல்லையா, நண்பர்கள் இல்லையா அல்லது யாரும் விசேஷங்களுக்கு அழைக்கவில்லையா அல்லது  சாப்பாட்டில்தான் ஏதும் குறைச்சலா? குறைச்சல் எல்லாம் இல்லை, அதீதம்தான் சென்னையின் பிரச்சினை. இன்று அநேகமாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுமே இப்படி மாறிவருகின்றன என்று சொல்லலாம்.

ஊர்ப் பக்கத்தில் கல்யாணத்துக்கு முந்தைய நாள் மாலை அல்லது கல்யாணத்தன்று காலை டிபன் மெனு பெரும்பாலும் இப்படி இருக்கும்: அசோகா அல்லது கேசரி, மெதுவடை அல்லது போண்டா, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம் அல்லது பூரி, கூடவே இட்லி, சட்னி, சாம்பார். சாப்பிட்டு முடித்ததும் காபி. மதிய விருந்து: சோறு, சாம்பார், ரசம், வத்தல் குழம்பு அல்லது மோர்க் குழம்பு, ஒரு வறுவல், ஒரு பொரியல், ஒரு கூட்டு, ஒரு பச்சடி, தயிர், கூடவே அப்பளம் – வடை – பாயசம். அவரவர் விரும்புவதை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம்; வேண்டாததை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். கேட்டுப் பரிமாறுவார்கள்.

ஆஹா! எவ்வளவு எளிமையான மெனு என்று சொல்பவர்கள், நான் கூறியிருப்பதே கொஞ்சம் அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சின்ன வயதில் என் தாத்தாவுடன் வெளியூருக்கு ஒரு விசேஷத்துக்குப் போயிருந்தேன். தாத்தாவின் நண்பர் விருந்தில் பண்டங்களை அதகளப்படுத்தி இருந்தார். எனக்கு அந்த வயதில் அது விசேஷமானதாகப் பட்டது. தாத்தா முகம் சரியில்லை. ஊர் திரும்புகையில் கேட்டேன், “தாத்தாவுக்குச் சாப்பாடு பிடிக்கலையோ?” கவனம் களைந்தவராகச் சொன்னார், “அப்படி இல்லப்பா, எலையில பத்து வகை, பதினைஞ்சு வகையினு உணவை வெக்கிறது ஆடம்பரத்தின் பெயரிலான அநாகரிகம். விருந்தாளிகளுக்கு அன்பை உணவா பறிமாறினா சாப்பிடலாம், அவனவன் அகங்காரத்தை ஏன் பரிமாறணும்? விசேஷங்கிறது பல தரப்பு ஆளுங்களும் வர்றது; யாரையும் நம்ம வசதியால சிறுமைப்படுத்திடக் கூடாது!”

வயது மெல்ல நகர்ந்தபோது தாத்தா சொன்னது புரியலானது. அன்றாட உணவுக்கே அல்லாடுபவர்கள் கோடிக் கணக்கானோர் வாழும் நாட்டில் வசதி படைத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தவற்றைச் செலவிடுவதில் மிக்க பொறுப்புணர்வு வேண்டும். தம்முடைய விருந்தினர்களுக்கு இலையில் ஒருவர் இருபது பதார்த்தங்களை வைக்கிறார் என்றால், அது தன்னகங்காரத்தின் வெளிப்பாடுதான். விருந்தினரின் உணவு விருப்பம், ரசனை, உடல்நிலை என எல்லாமே அங்கு அடிபட்டுவிடுகிறது. விருந்துக்கு அழைத்தவர் எங்கோ தன்னுடைய தாழ்வுணர்வை இதன் மூலம் பூர்த்தியாக்கிக்கொள்ள முற்படுகிறார்.

சென்னையில் மாதத்துக்குப் பத்துப் பதினைந்து விசேஷங்களுக்கு எனக்கு அழைப்பு வரும். பெருநகர வாழ்வில்  வேலை நெருக்கடி காரணமாகக் காலை நிகழ்ச்சிக்குச் செல்வது இன்று பெரும்பாலானோருக்குச் சாத்தியமற்றுவிடுவதால், நெருங்கிய உறவினர்களே அதில் பங்கேற்கிறார்கள்; முந்தைய நாள் அல்லது பிந்தைய நாட்களின் மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளே ஊருக்கானதாக அமைகிறது. ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்கு நானும் அப்படித்தான் செல்கிறேன். 

எந்த விருந்துப் பந்தியிலும் குறைந்தது இருபது இருபத்தைந்து பண்டங்கள் இருக்கும். இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், வத்தல் குழம்பு சாதம், தயிர் சாதம், பாயசம், ஐஸ்க்ரீம், காபி, பீடா… என்ன எழவுடா இது; யாரெல்லாம் வீட்டில் இப்படி டிபன் சோறு எல்லாவற்றையும் வகைதொகை இல்லாமல் கலந்து கட்டிச் சாப்பிடுகிறார்கள்; ஏன் வருகிற விருந்தினர்களை இப்படி வாட்டி எடுக்கிறார்கள் என்று தோன்றும்.

எல்லோருமே எல்லாவற்றையும் பெரிய செலவில்லாமல் எளிமையாகத்தான் செய்தாக வேண்டும் என்று இல்லை. விசேஷ வீட்டுக்காரர்கள் வசதிக்கேற்ப செலவிடுவது அவர் சுற்றத்தாருக்கும் நல்லது, நாட்டுப் பொருளாதாரத்துக்கும் நல்லது. பயனுள்ள வகையில் அதைச் செலவிடலாம். லட்ச ரூபாயில் நூறு பேருக்குச் சாப்பாடு போடுவதற்கு பதில், சுற்றத்தார் தவிர ஐந்நூறு பேரை அழைத்து அன்னதானம் செய்யலாமே!

வசதி இருக்கிறதோ, இல்லையோ; கடன் வாங்கியேனும் பெருஞ்செலவு செய் என்பது இன்று இந்தியாவில் ஒரு மோசமான பண்பாடாக வளர்ந்துவருகிறது. அதிலும் விருந்துகளுக்காக இந்தியர்கள் செலவிடுவதும், உயர் செலவில் இப்படித் தயாரிக்கப்படும் உணவில் கணிசமான பகுதி வீணடிக்கப்படுவதும் பாவக் கேடு. பல்லாயிரம் கோடிகள் ஒவ்வோர் ஆண்டும் இப்படி பாழாகின்றன. 

காந்தியைப் பிற்காலகத்தில் ஆழ ஊன்றி வாசித்தபோது வேறொரு விஷயம் பிடிபட்டது. தன்னுடைய ஆகிருதியை வெளிக்காட்டிக்கொள்ள உணவு, உடை, வாகனம் என்று ஒவ்வோர் அம்சத்திலும் தேவையைத் தாண்டி செலவிடுவோர் அகங்காரத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அவர்களிடம் உள்ள மோசமான வறுமையையும் வெளிக்காட்டுகின்றனர். காந்தியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அது ‘ஆன்ம வறுமை’.

ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் முதல்நிலைச் செல்வந்தருமான ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியினுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண தடபுடல்களைக் கண்டபோது திகைப்பு ஏற்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் தொடங்கி இந்தியாவின் முக்கியமான நட்சத்திரங்கள் அவ்வளவு பேரையும் அள்ளிக்கொண்டுவந்து நடத்தப்பட்ட இந்த மூன்று நாள் திருவிழாவில் மணமக்கள் நடனம் ஆடுகையில் துணை நடிகர்கள் போன்று பாலிவுட் பாட்ஷாக்கள் ஷாரூக்கானும், சல்மான் கானும் உடன் ஆடவைக்கப்பட்டது ஒன்று போதாதா இந்நிகழ்வின் பின்னுள்ள மனநிலையை நாம் புரிந்துகொள்ள? 

இதற்கெல்லாம் செலவு ரூ.1250 கோடி செலவு என்கிறார்கள். மூன்று நாட்களில் பறிமாறப்பட்ட உணவு வகைகளின் எண்ணிக்கை மட்டும் 2,500 என்கிறார்கள். எப்பேர்ப்பட்ட ஆடம்பரம் என்று சிலர் பிரமிக்கலாம்; எவ்வளவு அருவருப்பு என்று சிலர் முகம் சுளிக்கலாம். எனக்கு அம்பானியைப் பார்க்க பாவமாகவும் பரிதாபமுமாகத்தான் இருந்தது. சுற்றிலும் எவ்வளவு செல்வம் குவிந்திருந்தாலும் சில மனிதர்களிடம் எவ்வளவு பெரிய வறுமை! மனிதர்களின் ஆன்ம வறுமையைச் செல்வத்தைக் கொண்டு போக்கிவிட முடிவதில்லை!

https://www.arunchol.com/samas-article-on-anant-ambani-radhika-merchant-marriage

 

காதலர், ஆன்மிகவாதி அம்பேத்கர்

3 weeks 6 days ago

அம்பேத்கர் அவர்கள் பற்றி அவரின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதிய நூலில் உள்ள சில விடயங்களை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார் ஷங்கர்ராமசுப்ரமணியன். நல்ல ஒரு கட்டுரை. இது 'அகழ்' இதழில் வந்துள்ளது.

கட்டுரையில் உள்ள ஒரு பந்தி:

“26 ஜனவரி 1950-லிருந்து நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழையப்போகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். சமூக, பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை இருக்கும். இந்த முரண்பாட்டை நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்களெல்லாம், இந்த அவை மிக கடினமான உழைப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தகர்த்துவிடுவார்கள்.”

***********************

காதலர், ஆன்மிகவாதி அம்பேத்கர் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

நாம் பொதுவில் அறிந்த பாபா சாகேப் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் அரசமைப்பைச் செதுக்கிய முதன்மைச் சிற்பி. இந்தியக் குடியரசின் முதல் சட்ட அமைச்சர். உலகின் தலைசிறந்த அறிவுஜீவிகளில் ஒருவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு நிராதரவாக நின்றிருந்த மக்களின் மீட்பர். சட்டஞானி. மனிதநேயவாதி. திறன்மிக்க நாடாளுமன்றவாதி. இப்படி பல குணாம்சங்களால் அறியப்படுபவர்.

சவிதா அம்பேத்கரின்  நூலில் அம்பேத்கர் வேறுவிதமாய் வெளிப்படுகிறார். ஐந்து வயதிலேயே தாயை இழந்தவராக. பிறகு பிரியமான அண்ணனையும், தொடர்ந்து முதல் மனைவியையும் தந்தையையும் இழந்தவராக. தனிமையின் மாபெரும் கசப்பும் துயரமும் உடலில் நோய்களாக உருமாறி அலைக்கழித்தவராக. சிறுவயது தொடங்கி, கடைசிவரை தீண்டப்படாதவராக. வரலாற்றுக் கொடூரங்களையும் நோய்களையும் தாங்கிய உடலாக. இப்படி, அம்பேத்கர் வரலாற்று நாயகராக மட்டுமில்லாமல் பிறிதொரு ஆழமான இருப்பாகவும் இந்நூலில் காட்சியளிக்கிறார்.

சவீதா அம்பேத்கரின் நூலில், காந்தியின் மகாத்மாத்துவத்தையே தார்மீகமாக கேள்விக்கும் சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய, இந்திய வரலாற்றின் மகத்தான அரசியல் ஆளுமையாக அம்பேத்கர் வெளிப்படவில்லை. இளமையிலிருந்து தலித் மக்களுக்கான இயக்கங்களை முன்னெடுத்த செயல்பாட்டாளராகவோ, எழுத்தாளராகவோ, இறப்புக்கு முந்தைய தன் கடைசி இரவு வரை ஜூரவேகத்தில் நூல்களை வாசித்த அறிஞராகவோ வெளிப்படவில்லை. சவிதாவின் அம்பேத்கர், சவிதாவின் காதலரே.

அம்பேத்கரின் இறுதி ஆண்டுகளில் நீரிழிவு, நரம்பு அழற்சி, வாதம், உயர் ரத்த அழுத்தம் என பல வியாதிகள் இணைந்து அவருடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. அந்த நிலையில், வாழ்வை நீட்டிப்பதற்காக அல்லாமல் தான் உத்தேசித்த காரியங்களைச் செய்துமுடிப்பதற்காக, அவர் போராடி சாதித்த கடைசி யுத்தமே சவிதா அம்பேத்கரை வென்ற காதல் என்று தோன்றுகிறது. அவர் அதுவரை அடைந்த அறிவு அனைத்தும் சவிதா அம்பேத்கருக்கு எழுதிய கடிதங்களில் தோற்பதைப் பார்க்கிறோம். புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய ‘கண்மணி கமலாவுக்கு’ கடிதங்கள் ஞாபகத்துக்கு வருவதைத் தடுக்க இயலவில்லை. உலகின் எந்தப் பகுதியிலிருந்து எழுதப்பட்ட சிறந்த காதல் கடிதங்களைப் படிக்கும்போதும் இந்த இலக்கிய உணர்வைத்தான் அடைவோம் போல.

கடிதங்களில் அம்பேத்கரின் மொழி கவித்துவத்தை அடைகிறது; அம்பேத்கரின் மொழி பித்துநிலையில் இருக்கிறது; அம்பேத்கர் அங்கே குழந்தையாகிறார். சவிதாவுக்கு நைட்டித்துணியிலிருந்து கைக்கடிகாரம், நங்கூர டாலர் செயின் என ஒவ்வொரு பொருளையும் தேடித் தேடி தேர்ந்து அனுப்புகிறார். அம்பேத்கரைப் பார்த்திருக்காவிட்டால் மிகப்பெரிய மருத்துவராகவோ அல்லது எழுத்தாளராகவோ திகழ்ந்திருக்க வாய்ப்பிருந்த சவிதா, அம்பேத்கரின் ஆத்ம சேவகர் ஆகிறார். குழந்தைக்கு சட்டை போட்டுவிடுவது போல தினமும் உடனிருந்து ஆடைகளை அணிவதற்கு உதவி அம்பேத்கரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தன் கண்ணுக்குத் தெரியும் இடத்தில் சவிதா இருக்கவேண்டுமென்று அம்பேத்கர் விரும்புகிறார். ஒன்பது ஆண்டுகள் சவிதா ஒரு நிழலைப் போன்றே அம்பேத்கருடன் இருக்கிறார். பின்னர் அவர் மறைந்த பிறகு 2003 வரை அம்பேத்கர் விட்டுச்சென்ற ஒரு நிழல் என, துயரம், அவமதிப்பு, கௌரவம் எல்லாம் சேர்ந்த தன் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

காங்கிரஸ் மீது அம்பேத்கர் கடைசிவரை கொண்டிருந்த கசப்பை சவிதாவும் வாழ்க்கையின் கடைசிவரை பகிர்ந்திருக்கிறார். அம்பேத்கரின் மரணத்துக்குப் பிறகு பண்டித நேரு அவருக்கு அரசு மருத்துவ அதிகாரி பதவியை வழங்குவதற்கு முன்வந்தபோதும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாநிலங்களவை உறுப்பினராவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அம்பேத்கரின் பதிப்பிக்கப்படாத நூல்கள் தொடர்ந்து பதிப்பு காண்பதில் முப்பது ஆண்டுகள் செலவழித்துள்ளார். அம்பேத்கரின் சகியாக, சாரு எனும் செல்ல அழைப்பாக ஆவதற்கு சவிதா அம்பேத்கர் கொடுத்த கொடை என்னவென்று இந்த நூல் நமக்குத் தெரிவிக்கிறது.

சவிதா அம்பேத்கரின் ஆளுமையும் இந்நூலில் துலங்குகிறது. அம்பேத்கரின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் மரணத்துக்கான காத்திருப்பில், அவர் வாழ்க்கையில் கடைசி ஒன்பது ஆண்டுகளை கூடுதலாகப் பரிசளித்த மருத்துவராகவும் காதலியாகவும் மனைவியாகவும் சவிதா அம்பேத்கர் இருந்துள்ளார். புத்தரின் வாழ்க்கையில் யசோதராவின் பாத்திரம் தான் தன்னுடையது என்று இந்த நூலின் துவக்கத்திலேயே சவிதா கூறுகிறார். தனது பாத்திரம் என்னவென்று மிக மௌனமாக உணர்த்திவிடுகிறார்.

‘அத்தஹி அத்தானோ நாதோ’ (ஒருவருக்கான அடைக்கலம் அவருக்குள்ளேயே உள்ளது.) எனில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் என்னுடைய பாத்திரம் ஒருவகையில் யசோதராவைப் போன்றதல்லவா?  

அம்பேத்கரின் புகழை கடைசிவரை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட பணிகளையே தனது அடைக்கல இல்லமாக, சவிதா உணர்ந்திருக்க வேண்டும். அம்பேத்கரின் மரணத்துக்கு சவிதா காரணமாக இருந்தார் என்று அம்பேத்கருக்கு நெருக்கமான தலித் தலைவர்களே கூறிய அவதூறுகளைத் தாண்டி, அந்த அவதூறுகளுக்கும் மனப்புழுக்கங்களுக்கும் மத்தியில் இப்பணிகளை அவர் செய்து முடித்திருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், அந்த இடத்திலிருந்து தொல்லியல் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட ஆலயத்தின் கட்டிடப் பகுதிகள் சிதைந்துபோன பௌத்த விகாரையின் பகுதிகள் என்று நீதிமன்றத்தில் சாட்சி அளித்தவர் சவிதா.

பொது வாழ்க்கையிலேயே பல துயரங்களை சவிதா அனுபவித்துள்ளார். அம்பேத்கர் தன் கடைசி இரவு வரை மெய்ப்பு பார்த்த கைப்பிரதியான ‘புத்தமும் தம்மமும்’  நூல் முன்னுரையில் சவிதாவின் தியாகங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த காரணத்தினாலேயே அம்முன்னுரை அம்பேத்கரின் நூல்களைப் பதிப்பித்தவர்களால் பல தசாப்தங்களாக வெளியிடப்படாத துரதிர்ஷ்டம் சவிதாவுக்கு நேர்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பேத்கர் தனது இகத்தையும் அகத்தையும் கடைசி ஆண்டுகளில் செழிக்கச் செய்தவரான காதல் மனைவி சவிதா அம்பேத்கருக்கு ஒரு நூறு வார்த்தைகள் வழியாக நன்றி சொல்லியிருக்கிறார். இதுவே சவிதாவுக்கு வரலாறு கொடுத்த அடையாளமும் அடைக்கலமும்.

சவிதா அம்பேத்கரின் குடும்பப் பெயர் கபீர் மற்றும் ஷாரதா. அம்பேத்கருக்கு சாரு. அம்பேத்கருக்குப் பின்னால் அவருக்கு அடையாளமாக இருந்த பெயர் சவிதா அம்பேத்கர்.

000

இந்திய அரசியல் அமைப்பு சாசனம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு முந்தைய ஆண்டு நவம்பர் 25-ம் தேதி அரசமைப்பு அவையில் கீழ்க்கண்ட எச்சரிக்கை வாசகங்களைக் கூறி தனது வரைவை அம்பேத்கர் முன்வைத்திருக்கிறார்.

“26 ஜனவரி 1950-லிருந்து நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழையப்போகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். சமூக, பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை இருக்கும். இந்த முரண்பாட்டை நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்களெல்லாம், இந்த அவை மிக கடினமான உழைப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தகர்த்துவிடுவார்கள்.”

இது அம்பேத்கர் அடித்த எச்சரிக்கை மணி. சுதந்திர இந்தியா ஜனநாயகமாக, சமூக, பொருளாதார வாழ்க்கையில் கடந்த 80 ஆண்டுகளில் சமத்துவத்தை எட்டுவதில் தோல்வியை அடைந்து தேர்தல் சர்வாதிகாரத்தை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையில் அம்பேத்கரின் எச்சரிக்கை உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

000

காந்திக்கும் அம்பேத்கருக்குமான தருணங்கள் இந்த நூலில் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவை. மறுமலர்ச்சியாளர் புலே குறித்த திரைப்பட நிகழ்வு ஒன்றில் அம்பேத்கரோடு ராமசாமி நாயக்கராக பெரியாரும் கலந்துகொள்ளும் ஒரு சம்பவத்தையும் சவிதா நினைவுகூர்கிறார். காந்தியின் சரிதையை எழுதுவதற்கு அம்பேத்கருக்கு திட்டமிருந்திருக்கிறது. அதற்கு தானே சரியான நபர் என்றும் அவர் சவிதாவிடம் பகிர்ந்திருக்கிறார்.

காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களில், அம்பேத்கருக்கும் சவிதாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெறுகிறது. அப்போது “காந்தி இத்திருமணத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்” என்று படேல் சொல்கிறார். அம்பேத்கரும் வருத்தத்தோடு ஆமாம் என்கிறார்.

காந்தி கொல்லப்பட்டதையடுத்து 1948 பிப்ரவரி 6-ல் அம்பேத்கர், சவிதாவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தியின் சடலத்தைப் பார்க்கச் சென்றதைக் குறிப்பிடுகிறார். காந்தியைப் படுகொலை செய்ததைக் கண்டித்து இப்படித் தொடர்கிறார் கடிதத்தை,

“நான் எதற்காகவும் திரு. காந்திக்குக் கடன்பட்டிருக்கவில்லை. என்னுடைய ஆன்மிக, தார்மிக, சமூக குண இயல்புக்கு அவர் எந்தவிதத்திலும் பங்களிக்கவில்லை. என்னுடைய இருப்புக்காக நான் கடன்பட்டிருக்கும் ஒரே ஒரு நபர் புத்தர் மட்டும்தான். என் மீது அவருக்கு இருந்த வெறுப்பையும் பொருட்படுத்தாமல் சனிக்கிழமை காலையில் பிர்லா இல்லம் சென்றேன். அவருடைய சடலத்தைக் காட்டினார்கள். என்னால் அவருடைய காயங்களைப் பார்க்க முடிந்தது. அவை மிகச்சரியாக இதயத்தில் இருந்தன. அவருடைய சடலத்தைப் பார்த்து நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். என்னால் நடக்க இயலவில்லை என்பதால் இறுதி ஊர்வலத்துடன் கொஞ்ச தூரம்தான் போக முடிந்தது” என்று கூறியபடி எழுதிச் செல்லும்போது “திரு. காந்தி இந்த நாட்டுக்கு ஒரு நேர்மறையான அபாயமாக மாறிவிட்டார். எல்லா சுதந்திரச் சிந்தனைகளையும் அவர் அடக்கிவைத்திருந்தார். திரு. காந்தியின் புகழ்பாடுவதையும் நயம்பாடுவதையும் தவிர, சமூகத்தின் வாழ்க்கையை நிர்வகிக்கும் எந்தவிதமான சமூக அல்லது தார்மிகக் கொள்கையிலும் உடன்படாத சமூகத்திலுள்ள எல்லா மோசமான மற்றும் சுயமோகக் கூறுகளின் கலவையாக அவர் காங்கிரஸை வைத்திருந்தார்” என்று கடுமையாக விமர்சித்தும் செல்கிறார்.

காந்தியின் மரணம் ஒரு சாகச மனிதனின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்கும் என்றும் அவர்களை சுயமாக யோசிக்க வைக்கும் என்றும் அது அவர்களைத் தங்கள் தகுதிகள் மீது நிற்கவைக்கும் என்றும் நம்பிக்கையை வைக்கிறார்.

அகிம்சையையும் தியாகத்தையும் லட்சணமாக்கி பெரும் மக்கள்திரளை அடிபணிய வைத்த காந்தி போய்விட்டார். அதிகாரம், மயக்கம், படைபலத்தால் மக்களைக் கட்டும் தலைவர்கள் இந்தியாவில் பின்னர் தோன்றிவிட்டார்கள். வாய்ஜாலம், பொய் சாகசங்களால் கட்டப்பட்ட பிம்பங்கள் தலைமைப் பீடங்களைக் கைப்பற்றிவிட்ட நிலையில், மக்கள் தன்னிறைவு அடைவார்கள் என்ற அம்பேத்கரின் நம்பிக்கை தோற்ற காலத்தில் இருக்கிறோம்.

காந்தியின் இதயத்துக்குள் தோட்டாக்கள் போட்ட துளைகளை ஒரு அதலபாதாளத்தை உற்றுநோக்குவது போல அம்பேத்கர் குனிந்து நோக்கிக் கொண்டிருக்கும் சித்திரம், நம்முடைய இந்திய தேசம்  இன்று வந்திருக்கும் நிலையின் உருவகமும் கூட. தோட்டா துளைத்த ஓட்டைகளைப் பார்த்துக் கொண்டிருப்பவனும் தன் காலத்தின் மாபெரும் நேர்மையாளன் மற்றும் அருளாளன். தோட்டாக்கள் துளைத்து சடலமாகப் படுத்திருப்பவனும்  மாபெரும் நேர்மையாளன் மற்றும் அருளாளன்.

0000

ராணுவ அதிகாரியான தந்தையின் வலியுறுத்தலால் சிறுவயதிலேயே ராமாயணமும் மகாபாரதமும் அறிமுகமானாலும் அம்பேத்கரை அவை கவரவில்லை. பீஷ்மரும் துரோணரும் கிருஷ்ணரும் ராமரும் கபட வேடதாரிகளாகவே தெரிகிறார்கள். அவர்களது பாத்திரங்கள் தன்னை ஈர்க்கவில்லை என்று வாதாடியிருக்கிறார்.

தாதா தெலுஸ்கர் வாயிலாக புத்தரின் பக்கம் திரும்பியவர், தம்மம் மீது ஆர்வம் கொள்கிறார். மதமோ, கடவுள் நம்பிக்கையோ பற்றுதலாக இல்லாமல் மனிதர்களால் மீட்சியடைய இயலாது என்று நம்பியிருக்கிறார். சமத்துவத்துக்கும் பகுத்தறிவுப் பார்வைக்கும் சரியான சமயம் என்று பௌத்தத்தையும் சரியான கடவுள் என்றும் புத்தரையும் நம்பியிருக்கிறார். நோயும் மனக்கவலைகளும் உறங்கவிடாமல் ஆக்கிய அவரது கடைசி ஆண்டுகளில் சவிதா அம்பேத்கரை வாசிக்கச் சொல்லி ‘அஷ்வகோஷாவின் புத்தவிதா’வின் கவித்துவமான பகுதிகளைக் கேட்டு அமைதியாகித் தூங்கியிருக்கிறார்.

அமெரிக்காவுக்குச் சென்று கல்வி கற்றிருந்தாலும், மேற்கத்திய கனவானின் தோற்றத்தைப் பாவித்தாலும், தனது கடைசி காலத்திலும் மருந்தாகக்கூட ஒரு தேக்கரண்டி மதுவை உட்கொள்வதற்கு அவர் மனம் ஒப்புக்கொள்ளாத அளவு ஒழுக்க நடத்தையைக் கொண்டிருந்திருக்கிறார். திருமணத்துக்கு முன்னால் அம்பேத்கருக்கு உதவியாளராக சேவை செய்ய சவிதா முன்வருகையில், தன்னைப் போல் பொதுவாழ்வில் இருப்பவரோடு ஒரு பெண் உடனிருப்பது அவதூறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

சவிதா,அம்பேத்கருக்கு எழுதிய கடிதங்கள் அனைத்திலும் ஆண் – பெண் சமத்துவம் குறித்து தனக்கு இருக்கும் நிலைப்பாட்டில் அவர் செயல்பூர்வமாகவும் கொண்டிருக்கும் நம்பிக்கை தெரிகிறது.

அரசியல் சாசனத்தை உருவாக்கிய இந்தியாவின் தலைமகன்களில் ஒருவராகிய அம்பேத்கரையே 1952-ல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் தோற்கடிக்கிறது. தமது மக்களே தன்னைத் தோற்கடித்தார்கள் என்று விரக்தியுடன் இருந்த அம்பேத்கரை பௌத்தம் சார்ந்த பணிகளும் சவிதாவும் சேர்ந்தே மீட்கிறார்கள். கீதையைப் போல, விவிலியத்தைப் போல பௌத்தத்துக்கு ஒரு பொதுநூல் இல்லாத குறையை உணர்ந்துதான் ‘பௌத்தமும் தம்மமும்’ என்ற நூலையே எழுதத் தொடங்குகிறார். பல நூற்றாண்டுகளாக தங்கள் கடவுளர்களாலும், தாம் அடையாளம் காணும் சமயத்தின் வைதீக விதிகளாலும் நான்கு வர்ணங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்ட மக்களின், மனித உயிர்கள் என்ற மதிப்புகூட இல்லாமல் விலங்குகளுக்கும் கீழாக நடத்தப்பட்ட தீண்டப்படாத மக்களின் அத்தனை சுமைகளையும் சிலுவையென ஏற்று, முறியத்துடிக்கும் கிறிஸ்துவைப் போல, அம்பேத்கர் பௌத்தத்தில் கடைசி அடைக்கலத்தையும் அமைதியையும் கொள்ளும் சித்திரத்தைக் காணமுடிகிறது.


கௌதம புத்தரின் பிறந்த இடமாக கருதப்படும் நேபாளத்தின் லும்பினி தொடங்கி அவர் இறந்த இடமான குஷினாரா வரை அம்பேத்கர் பெரும் உடல்நலிவூடாகவே பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். புத்தரின் உடல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட விகாரையின் படிகளில் கனத்த உடலுடன் நடக்க இயலாமல் நான்கு ஆட்கள் தாங்கிப்பிடிக்க நடந்து ஏறி, அங்கிருந்த புத்தரின் சிலையைப் பார்த்து முழங்காலிட்டுக் கொண்டு த்ரிவாரப் பிரார்த்தனையைச் சொல்கிறார். கன்னங்களில் முடிவில்லாத கண்ணீர் வழிந்ததாக சவிதா எழுதுகிறார். எத்தனை நூற்றாண்டுகள் ஒடுக்கப்பட்டதன் கண்ணீர்? எத்தனை நூற்றாண்டுகள் தேடியும் இன்னும் கிடைக்காத விடுதலையின் கண்ணீர்? காலம் காலமாக  நடைமுறையாகவும் தர்மமாகவும் இருந்த தீண்டாமைக்கு சட்டரீதியான தடைகொண்டுவந்து சிலுவைப் போரில் வெற்றியடைந்தவன் வடித்த கண்ணீர் அது.  

சவிதா அம்பேத்கரின் இந்தப் புத்தகத்தில் அம்பேத்கரின் ஓவிய ஆளுமையும் தெரிகிறது. புத்தரை திறந்த கண்களுடன் அவர் வரைந்திருக்கும் ஓவியம் இந்நூலில் அச்சிடப்பட்டுள்ளது.“புத்தர் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் கண்கள் திறந்த நிலையில்தான் சுற்றிவந்தார். திறந்த விழிகளுடன்தான் அவர் உலகின் துயரங்களை அவதானித்தார்”

போதனை வழங்கும் புத்தர், திறந்த விழிகளுடன் இருக்கும் புத்தர், இந்திய அம்சங்கள் கொண்ட புத்தர், நடந்து செல்லும் புத்தர் என வெவ்வேறு தோற்றங்களில் அவர் புத்தரை உருவாக்க நினைத்திருக்கிறார். ஆனால் மரணம் அதற்குள் அவரை நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டது. எனினும், இந்திய எதார்த்தம் என்னவென்று கண்திறந்து பார்க்கும் ஒரு புத்தரை நமக்கு வழங்கியிருக்கிறார். புத்தர் எப்போதும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

புனைவு, அ-புனைவு எதுவாக இருப்பினும் மொழிபெயர்ப்புகள் தமிழில் சித்திரவதை அனுபவங்களாக மாறும் பின்னணியில் இந்த நூலுக்கு ஒரு பழைய தொனியைப் பிடித்து அதைக் கச்சிதமாகத் தொடர்ந்து சவீதா அம்பேத்கருக்கு ஒரு சீரான தொனியை அளித்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் த. ராஜன். குறிப்புகள், புகைப்படங்களும் மிகவும் கவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எதிர் வெளியீடு இந்த நூலை பிழைகளின்றி, மதிப்பு துலங்க வெளியிட்டுள்ளது.

இறந்துபோவதற்கு முன்னாலும் புத்தம் சரணம் கச்சாமி பாடலையும், கபீரின் ‘சலோ கபீர் தேரா பவசாகர் தேரா’ என்ற பாடலையும் மிகுந்த லயத்துடனும் காதலுடனும் பாடியிருக்கிறார். கடந்து செல்லுங்கள் கபீர், இது உங்களுடைய தற்காலிக உறைவிடம். அம்பேத்கர் கடந்து போக எண்ணியது இன்னும் கோடிக்கணக்கான மக்களால் கடக்க இயலாததாக உள்ளது.

https://akazhonline.com/?p=6533

மையங்களால் அழித்தல்

1 month ago

இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது.

*****

மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி.
March 14, 2024

வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொத்தமாகச் சரியும் வரை மையத்தை வலுவாக்கிக் கொண்டே செல்வார்கள். மையத்தின் எடை தாளாமல்தான் பெரும்பாலான அமைப்புகள் சரிகின்றன. 

சாமானியர் என இங்கே சொல்லப்படுவதில் வாழ்க்கையின் எல்லா தரப்பினரும் உண்டு.மறு சொல்லே இல்லாமல் குடும்பத்தை கட்டியாளும் குடும்பத்தலைவரை மையமாகக் கொண்ட குடும்பங்கள் வலுவானவையாக இருக்கும் என நம்பும் கோடிக்கணக்கானவர்கள் இங்குண்டு. அதே நம்பிக்கையுடன் தேசத்தை ஆட்சி செய்பவர்களும் உண்டு. சிறு வணிக நிறுவனங்கள் முதல் பெரிய நிர்வாக அமைப்புகள் வரை, சிறிய சேவை அமைப்புகள் முதல் மதங்கள் வரை இந்த நம்பிக்கையை கொண்டிருக்கின்றன. ஆனால் அது உண்மை அல்ல என்பதை நாம் கண்கூடாக நம் குடும்பங்களிலேயே காணலாம். வலுவான குடும்பத்தலைவரால் நடத்தப்படும் குடும்பங்களில் மிக எளிதில் பூசல்கள் உருவாகின்றன.பிளவுகள் தோன்றுகின்றன. அனைவருக்கும் இடமுள்ள நெகிழ்வான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கின்றன. மிக மிக ஆற்றல் கொண்ட மையம் கொண்டிருந்த தேசங்கள் ஒரு நூற்றாண்டைக்கூட கடந்ததில்லை. அண்மைக்கால உதாரணம் சோவியத் ருஷ்யா. 

அப்படியே பின்னுக்குச் சென்றால் ஹிட்லரின் ஜெர்மனி, பிரிட்டிஷ் பேரரசு என,  ஒவ்வொரு உதாரணமும் நம்மை திகைப்பிலாழ்த்தும். அதற்கான காரணம் மிக மிக எளிதானது. அது இயற்கையின் விதி. இயற்கையிலுள்ள ஒவ்வொன்றும் பிரிந்து பிரிந்துதான் வளர்கின்றன. ஒன்றுடனொன்று போட்டியிட்டு மோதி நிலைகொள்கின்றன. மிக வலுவான ஒன்றுக்கு அதேயளவு நிகரான வலிமைகொண்ட ஒன்று உடனே உருவாகிவிடுகிறது. அந்த முரண்பாடுதான் இயற்கை இயங்கும் வழி. அதை மேலைச்சிந்தனை dialectics என்கிறது. இந்திய சிந்தனைமரபில் யோகாத்ம தரிசனம் என்பது அதுவே என நடராஜ குரு அவருடைய நூல்களில் விளக்குகிறார். 

வலுவான மையத்தை உருவகிப்பவர்கள் எதிர்ப்பே இல்லாத ஒரு புள்ளியை கற்பனை செய்கிறார்கள். அப்படியொன்றுக்கு இயற்கையில் இடமே இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்று இங்கே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படி ஒரு மையப்புள்ளிக்கு இந்து மெய்யியலில் எந்த இடமும் இல்லை என்பதை அறிந்திருப்பதில்லை. இந்து மெய்யியலில் எல்லா சக்திக்கும் எதிர்சக்தி உருவகிக்கப்பட்டுள்ளது. புராணங்களில் எல்லா தெய்வத்திற்கும் எதிராகச் செயல்படும் நிகரான ஆற்றல்கொண்ட சக்திகள் உண்டு. முழுமுதல் (absolute) என உருவகிக்கப்படுவது வேதாந்திகள் சொல்லும் பிரம்மம் மட்டுமே. அது தொடக்கமும் முடிவும் அற்றது. அது அன்றி வேறேதும் இல்லை. ஆனால் அந்நிலையில் அதற்குச் செயல்தன்மையே கிடையாது. அது செயல்வடிவம் பெறவேண்டும் என்றால் அதற்குச் சமானமான எதிர்விசை தேவை. அந்த விசையாக மாயையை உருவகிக்கிறது வேதாந்தம். 

வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி ரிக்வேதத்தில் உள்ள சிருஷ்டிகீதம். அது அனைத்தையும் இணைப்பதும், அனைத்துமாக ஆவதுமான ஒரு பிரம்மத்தையே உருவகிக்கிறது. ஒரு பதிலை முன்வைப்பதில்லை, எத்தனை விளக்கினாலும் முழுமையாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வியையே முன்வைக்கிறது. மையத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக விரிந்து விரிந்து செல்லும் ஒரு பயணத்தை தொடங்கி வைக்கிறது. அந்தப் பயணமே உபநிடதங்களில் விரிந்தது. ஒன்றை இன்னொன்று கடுமையாக மறுக்கும் பல்வேறு ஞானவழிகளை உருவாக்கியது. தெற்கே சைவசித்தாந்தம் வரை அது வளர்ச்சி அடைந்தது. இந்து மெய்ஞானத்திற்கு அது நிலைகொள்ளும் மையம் என ஏதுமில்லை. ஏனென்றால் அது ஓர் அமைப்பு அல்ல. அது ஒரு தேடல். பலநூறு ஞானப்பயணங்கள் நிகழும் களம். எல்லா பாதையும் சென்றடைவது ஓரிடத்தையே என்று உபநிடதங்கள் கூறின.

இந்தியாவின் பிரதமர் ராமர்கோயில் கட்டுவது 130 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறுகிறார். அந்த கோடிகளில் நான் ஒருவன் அல்ல. எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எனக்கு பதற்றமும் வருத்தமும்தான் உருவாகிறது. இந்த பூசல் தொடங்கிய காலம் முதலே இதைத்தான் எழுதி வருகிறேன். நான் சொல்வது அரசியல் அல்ல. ஓர் உறுதியான இந்துவாக, வேதாந்தியாக நின்று இதைச் சொல்கிறேன். இது இந்துமெய்ஞானத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு. நீண்டகால அளவில் இது அழிவையே உருவாக்கும். 

இந்த ஆலயத்தை இந்து மதத்தின் ஒற்றை மையமாக உருவகிக்கிறார்கள். இந்துதேசியத்தின் மிகமிக வலுவான ஒரு புள்ளியாக இதை நிறுவுகிறார்கள்.  இந்தியாவின் ஒவ்வொருவரும் அதை ஏற்றாகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதைத்தான் பிரதமரின் சொற்கள் காட்டுகின்றன. அந்த மனநிலையில் இருப்பது இந்தியத்தன்மை அல்ல, இந்துத்தன்மையும் அல்ல. இது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவாகிவந்த பண்பாட்டுத் தேசியவாத மனநிலை. அதை இங்கே நகல் எடுக்கிறார்கள். அதற்குரிய பண்பாட்டு அம்சத்தை மட்டும் இங்கே மதத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அதில் முதன்மையானது ராமர் அவ்வளவுதான்.

பழைய மன்னராட்சிகள்  கூட்டு அதிகாரம் கொண்டவை. பிரபுக்கள் மற்றும் சிற்றரசர்களின் அதிகாரத்தை நிர்வகிக்கும் மையம்தான் அன்றைய மன்னரின் சபை. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து மன்னர் முற்றதிகாரம் கொண்டவராக ஆனார். அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் உருவாகி நவீன அரசுகள் அமைந்தன. அந்த அரசுகள் வலுவான ஆட்சிமையத்தை உருவாக்கிக்கொண்டன. அந்த மையத்தை உருவாக்கிக்கொள்ள அவை கண்டடைந்த வழிதான் பண்பாட்டுத்தேசியம். அது சர்வாதிகாரிகளை உருவாக்கியது. உலக வரலாற்றில் மதஅரசுகளும் மன்னர் அரசுகளும் உருவாக்கியதை விடப்பெரிய அழிவை அவைதான் உருவாக்கின. 

அந்த அழிவைக் கண்டபின்னர்தான் ஐரோப்பா நெகிழ்வான மையம் கொண்ட சமூகங்களையும் அரசையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அரசியல் என்பது முழுக்க முழுக்க பொருளியல் சார்ந்தது என்றும் அதில் மதம், இனம், மொழி போன்ற பண்பாட்டுக்கூறுகளுக்கு இடமில்லை என்றும் வகுத்துக்கொண்டது. இந்தியாவில் நாம் 1947ல் தொடங்கியபோதே ஐரோப்பாவில் நிகழ்ந்த அழிவுகளில் இருந்தும் இங்கே நிகழ்ந்த மதக்கலவரங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு நெகிழ்வான, அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய தேசியத்தையும் அரசையும் உருவாக்கிக்கொண்டோம். இன்று மூர்க்கமாக திரும்பிச்சென்று பழைய ஐரோப்பிய பண்பாட்டுத்தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ள முயல்கிறோம். 

உறுதியான அதிகார மையங்களை உருவாக்க பண்பாட்டை பயன்படுத்தும் வழி என்பது பண்பாட்டுக்கூறுகளை அதிகாரத்தின் குறியீடுகளாக ஆக்குவது. கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்களை அதன்மேல் ஏற்றுவது. பண்பாட்டு தேசியவாதிகள் சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில்  அவற்றுக்கு மாபெரும் சிலைகள், கட்டிடங்கள் போன்ற வடிவங்களை உருவாக்கினர். உச்சகட்ட பிரச்சாரங்கள் வழியாக மிகையுணர்ச்சிகளை பரப்பினர். அந்த உணர்ச்சிவேகத்தை பயன்படுத்தி அதிகாரங்களை அடைந்தனர். அந்த அதிகாரத்தின் முகங்களாக தனிமனிதர்கள் தங்களை முன்வைத்தனர். பிஸ்மார்க், முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின் அனைவரும் ஒரே வார்ப்புகள் கொண்டவர்களே. அனைவருமே மாபெரும் கட்டிடங்களையும் சிலைகளையும் நிறுவியவர்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். 

ஏன் சர்வாதிகார மனநிலைகொண்டவர்கள் மிகப்பெரிய கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள்? ஏனென்றால் சர்வாதிகாரிகள் அஞ்சுவது காலம் என்னும் மாபெரும் ஓட்டத்தைத்தான். அது எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு செல்கிறதென அவர்களுக்கு உள்ளூரத்தெரியும். அவர்கள் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள். தற்காலிகத்தன்மையை அஞ்சுகிறார்கள். ஆகவே நிலையான எதையவாது உருவாக்க துடிக்கிறார்கள். பட்டேல் சிலை, ராமர் கோயில் எல்லாம் அதன் வெளிப்பாடுகள்தான். அவை உடனடியாக பயனளிக்கும். மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அவர்களை கும்பல்களாக ஆக்கி, அதிகாரத்தை ஈட்டித்தரும். ஆனால் நீண்டகால அளவில் அவை இணையான எதிர்விசைகளை உருவாக்கி அழிவையே அளிக்கும்.  

அதிகாரம் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு புரிந்துணர்வு. ஒவ்வொரு கணமும் நிகழும் பலநூறு ஒப்பந்தங்களின் வழியாக நிகழ்வது. சர்வாதிகாரிகள் அதை கண்கூடான ஓர் அமைப்பாக நிறுவ நினைக்கிறார்கள். சாமானியர் அதை வியந்து பார்க்கவேண்டும், அஞ்சவேண்டும். ஆகவே மாபெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். சொற்கள் அழியும் ஆனால் கல் அழியாமல் நின்றிருக்கும் என கற்பனை செய்துகொள்கிறார்கள். கல் நின்றிருக்கும் என்பது உண்மை. ஆனால் அதிகாரம் அழிந்தபின், அதிகாரம் என்பது அழியும் என்பதற்கான நினைவுச்சின்னமாகவே அந்த கல்லமைப்பு நிலைகொள்ளும். அதையே வரலாறு காட்டுகிறது. 

இந்த விவாதத்தில் எப்போதும் கேட்கப்படும் வினா, பழைய மன்னராட்சியில் ஆலயங்கள் கட்டப்படவில்லையா என்பது. மன்னராட்சிக்காலம் என்பது தீராத போர்களும் அழிவுகளும் நிகழ்ந்த யுகம். ஒரு மன்னர் உருவாக்கும் ஆலயம் இன்னொரு மன்னரால் அழிக்கப்படும். இருவருமே ஒரே மதத்தினராக இருப்பார்கள். அந்த மதச்சார்பு உருவாக்கிய அழிவைக் கண்டபின்னர்தான் உலகமெங்கும் ஜனநாயகம் உருவாகியது. ஜனநாயகத்திற்கு முதல் எதிரி பெரும்பான்மைவாதம்தான். பெரும்பான்மையினரின் பண்பாட்டை வலியுறுத்துவது நீண்டகால அளவில் அழிவைநோக்கிச் செல்வது.

கண்கூடான உதாரணம் ஸ்ரீலங்கா. எழுபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கே அரசியல் மதஅடிப்படை கொண்டதாக ஆகியது. அதற்கு வித்திட்டவர் ஐரோப்பியர்களிடமிருந்து பௌத்தத்தை கற்றுக்கொண்டவரான அநகாரிக தம்மபாலா என்பவர். அவர் முன்வைத்தது மதத்தை அல்ல, ஐரோப்பிய பாணியில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு தேசியவாதத்தை. பௌத்தம் அரசுமதமாகவே முன்வைக்கப்பட்டது. மதகுருக்களை பணிந்து ஜனநாயகரீதியாக தேர்வுசெய்யப்பட்ட ஆட்சியாளர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர்களாக மதகுருக்கள் மாறினர். அதன் விளைவுகள் முப்பதாண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போர். உயிரழிவு, பொருளியல் பேரழிவு. 

அந்த மனநிலை மெய்ஞானத்தின் களத்திற்குள் வரும்போது மேலும் அழிவை உருவாக்குவதாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் இங்கே சிதைக்கப்படுவது சில மனிதர்களால் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நாடு, அரசு போன்ற புறவயமான அமைப்புகள் அல்ல. அவை அழிந்தால் இன்னொருவகையில் உருவாக்கிக்கொள்ள முடியும். இங்கே சிதைவுறுவது நுண்மையான அகவய அமைப்பு. அது பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னியல்பாக உருவாகி வந்தது. ஞானிகள், கலைஞர்கள், தத்துவசிந்தனையாளர்களால் திரட்டப்பட்டது. நம்மையறியாமலேயே நமக்குள் உருவாகியிருப்பது. அதை இழந்தால் நாம் திரும்ப அடைய முடியாது. 

வேதாந்தத்தின் அணுகுமுறையில். ராமன் வைணவ மதத்தின் ஒரு தெய்வ உருவகம். வைணவம் இந்து மதப்பிரிவுகளில் ஒன்று மட்டுமே. அந்த தெய்வ உருவகத்திற்கு அதற்குரிய தனித்தன்மைகள் உண்டு. ‘அறத்தின் உருவமான அரசன்‘ என சுருக்கமாக வலியுறுத்தலாம். தொன்றுதொட்டு இருந்துவரும் தந்தைவழிபாடு, அரசன் வழிபாடு ஆகியவை அந்த உருவகத்தில் இணைகின்றன. அந்த உருவகத்தை இந்துமெய்ஞான மரபுகள் அனைத்துக்கும் தலைமையான ஒரு தெய்வவடிவமாக வலியுறுத்துவது என்பது மெய்ஞானத்தேடலின் மற்ற வழிகள் அனைத்தின்மீதுமான ஒடுக்குமுறையாகவே ஆகும். சிவலிங்கம் போன்ற உருவமற்ற உருவம் (அருவுரு) வழிபடப்படும் மதப்பிரிவுகள் இந்து மதத்திற்குள் உண்டு. உருவவழிபாட்டை ஏற்காத வேதாந்தப்பிரிவுகள் உண்டு. அவர்களெல்லாம் ராமனை ஏற்றுக்கொண்டாகவேண்டிய இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 

காலப்போக்கில் ராமனை மறுப்பதென்பது தண்டனைக்குரிய இறைநிந்தனையாக இங்கே மாற்றப்படலாம். அது மதத்தை ஓர் உறுதியான நிறுவனமாக ஆக்குவதில் கொண்டுசென்று நிறுத்தும். எங்கே அப்படி ஓர் உறுதியான மதமையம் உருவாக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான உறுதியான குரல்கள் உருவாவதை வரலாறு காட்டுகிறது. அந்த எதிர்க்குரல்களை மதநிந்தனை என்னும் குற்றம்சுமத்தி மையமரபு வேட்டையாடுகிறது. ரத்தம் தோய்ந்த போராக அது உருமாறிவிடுகிறது. அவ்வாறான ஒரு நிலைநோக்கி இன்றைய மையப்படுத்துதல் எதிர்காலத்தில் இந்து மதத்தை கொண்டுசெல்லக்கூடும். 

வைணவர்கள் தங்கள் தெய்வத்திற்கு என ஓர் ஆலயம் அமைத்துக்கொண்டால் அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி. அவர்கள் ராமனே முழுமுதல்வ்தெய்வம் என்று சொன்னாலும் அதில் பிழையில்லை, அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அரசு அந்த ஆலயத்தை அதிகாரபூர்வமாக அமைத்து, இந்திய தேசத்தின் அனைவரின் வாக்குகளையும் பெற்ற ஆட்சியாளர்களால் அது திறந்து வைக்கப்படும் போதுதான் மையப்படுத்தல் நிகழத்தொடங்குகிறது. 

ஏனென்றால் இந்து மதத்தின் செயல்பாட்டு முறை என்பது மையப்படுத்துதலுக்கு எதிரானதாகவும், பன்மைத்தன்மை கொண்டதாகவும், உள்விவாதம் கொண்டதாகவும்தான் எப்போதும் இருந்து வந்துள்ளது. சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்று பெருமதங்கள் இன்று அதற்குள் உள்ளன. வேதாந்தம் என்னும் தூய தத்துவப்பார்வை உள்ளது. இதைத்தவிர பலநூறு சிறுவழிபாட்டு முறைகள் உள்ளன. பலநூறு புதிய புதிய தத்துவப்பார்வைகள் முளைத்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இன்னொன்றை மறுப்பதும் விமர்சிப்பதுமாகும். மையம் என ஒன்று திரண்டுவந்தாலே ஒடுக்குமுறை தொடங்கும். 

மிகச்சிறந்த உதாரண நிகழ்வு  ஒன்றுண்டு. இந்தியாவில் ராமன் ஒரே வகையாக எங்கும் சித்தரிக்கப்படவில்லை. வட இந்திய ராமன் அங்கே புகழ்பெற்றிருக்கும் வைணவ பக்தி மரபான புஷ்டிமார்க்கத்தால் உருவாக்கப்பட்ட உருவகம். தென்னிந்தியாவில் அப்படி அல்ல. கேரளத்தின் பெருங்கவிஞரும், நாராயண குருவின் வேதாந்த மரபில் வந்தவருமான குமாரன் ஆசான்  எழுதிய‘சிந்தனையில் ஆழ்ந்த சீதை’ என்னும் குறுகாவியம் மிகப்புகழ்பெற்றது. பல ஆண்டுகளாக கல்விநிலையங்களில் பயிலப்படுவது. அதில் சீதை ராமனை அரசனாக மட்டுமே நிலைகொண்டு கணவனாகவும் தந்தையாகவும் கடமையை மறந்தவன் என விமர்சிக்கிறாள். செப்டம்பர் 2015ல் மாத்ருபூமி நாளிதழில் அந்தக் கவிதையை பற்றி எம்.எம்.பஷீர் என்னும் புகழ்பெற்ற கல்வியாளர் ஒரு கட்டுரை எழுதியபோது கேரளத்தில் இந்துத்துவ ஆதரவாளர்களால் அவர் வேட்டையாடப்பட்டார். அந்த இதழ் அக்கட்டுரையை திரும்பப்பெற்றுக்கொண்டு மன்னிப்பு கோரியது. (நான் அந்நிகழ்வில் கடுமையாக எதிர்வினையாற்றி பஷீருக்கு ஆதரவாக எழுதினேன்) 

அது உண்மையில் வேதாந்தத்தின்மேல், நாராயண குருவைப்போன்ற ஞானிகள்மேல் நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதல். இன்றைய அரசுமதம் என்னும் போக்கு சென்று சேரக்கூடிய இடம் அதுதான். இந்து மெய்ஞானத்தின் உச்சகாகவும் இந்து மதத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் திகழும் வேதாந்தத்தை எதிரியாக்கி அழிக்க முயல்வது. அது இந்துமதத்தையே அழிப்பது. ஆகவே ஒவ்வொரு இந்துவும் எதிர்க்கவேண்டிய ஒரு செயல் இவர்கள் செய்துகொண்டிருப்பது.

https://www.jeyamohan.in/197947/

 

Checked
Tue, 04/16/2024 - 14:17
சமூகச் சாளரம் Latest Topics
Subscribe to சமூகச் சாளரம் feed